என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.
    • காலசம்ஹாரமூர்த்தி பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார்.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் புகழ்பெற்றதாகும்.

    புராண காலத்தில், பக்தர் மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது மார்க்கண்டேயர் உயிர் பிழைக்க சிவலிங்கத்தை கட்டியணைத்தார்.

    அப்போது, இறைவன் காலசம்ஹாரமூர்த்தியாக தோன்றி எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் பூமா தேவியின் வேண்டு கோளுக்கு இணங்க எமனை சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார்.

    மார்கண்டேயருக்கு என்றும் 16 என்று சிரஞ்சீவி என்ற வரத்தை இறைவன் தந்ததால் இவ்வாலயத்தில் ஆயுள்விருத்தி வேண்டி ஆயூள் ஹோமம் செய்து 60 வயது முதல் வயதான தம்பதிகள் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வருடம் 365 நாட்களும் திருமணங்கள் நடைபெறும் ஒரே தலம் இத்தலம் தான். இந்த ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு காலசம்ஹாரவிழா என்றழைக்கப்படும் எமசம்ஹாரம் கடந்த 25 ஆம்தேதி கொடி யேற்றத்துடன் தொ டங்கி நடைபெற்றுவருகிறது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.

    இதனையொட்டி காலசம்ஹாரமூர்த்தி பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார்.

    பின்னர் எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    எமதர்மன் சம்ஹாரம் செய்யப்பட்டதால், பூமியில் இறப்பு என்பதே இல்லாமல் போனதால் பூமியின் பாரத்தை தாங்கமுடியாத பூமாதேவி தன் வேதனையைத் தீர்க்கும்படி சிவபெருமானை பிரார்த்தித்து மீண்டும் எமனை உயிர்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து மகாதீபா ரதனை செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுடன் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் விடிய விடிய வீதியுலா நடைபெற்றது.

    இதில் தருமபுர ஆதீனம், கனேசன் குருக்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கல்வி ஊக்க தொகையை மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
    • 3 மாதங்களுக்கு ஒரு முறை குழந்தைகள் பாதுகாப்புக்குழு அமைத்து கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை குழந்தைகள், பாதுகாப்பு மையம் சார்பில் நகராட்சி பகுதியில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழித்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தை களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.

    நகர சபை தலைவர் துர்கா ராஜ சேகரன் முன்னிலை வகித்தார்.

    மேலாளர் கார்கான் வரவேற்றார்.

    கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் பெற்றோர்களை இழந்து வாழும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையை மாதம் ரூ.4000 வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவைக்கப்படும்.

    இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    நகராட்சி பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு 1 முறை அலுவலர் கொண்டு நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்துக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    முடிவில் ராஜகணேஷ் நன்றி கூறினார்.

    • 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் இன்றளவும் இந்த மரம் பசுமையுடன் காணப்படுகிறது.
    • இந்த பூக்களை ஏராளமானோர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இத்தலத்தில் சுவாமி அம்பாளை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்வதற்காக கைலாயத்திலிருந்து வந்தபோது அவருக்கு நிழலாக உத்தால மரம் வந்ததாகவும் திருக்கல்யாணம் முடிந்து சுவாமி,அம்பாள் கைலாயம் செல்லும்போது இத்தலத்தில் உத்தால மரத்தையும், தனது பாதரச்சையையும் சுவாமி விட்டுசென்றதாக கோவில் தல வரலாறு கூறுகிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் இன்றளவும் இந்த மரம் பசுமையுடன் காணப்படுகிறது.

    இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மாத கடைசியிலும் சித்திரை மாத துவக்கத்திலும் பூக்கள் பூப்பது வழக்கம்.அதே போல இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் தற்பொழுது பூக்கள் பூத்துக் குலுங்கியது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படும் இந்த பூ உதிர்வதை பக்தர்கள் அதிக அளவில் எடுத்தும் செல்கின்றனர்.

    இந்த உத்தால பூ 5 விதமான இதழ்களையும்,5 வகையான சுவையையும் உடையது.மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் சகல நோய் நிவாரணியாகவும் விளங்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த பூ அப்படியே உதிர்ந்து விடும்.காய் இல்லாததால் விதை கிடையாது.இந்த மரம் உலகில் வேறு எங்கும் கிடையாது என்று சொல்லப்படுகிறது.

    • 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, வீரசோழன், மஞ்சளாறு, மகிமலையாறு, விக்ரமண் ஆறு, அய்யாவையானாறு, பழவாறு, மண்ணியாறு, தெற்குராஜன் ஆகிய ஆறுகளிலிருந்து பிரியும் பிரிவு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரிட விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் நடப்பாண்டு 2023-24, 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரபடவுள்ளதால் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களை சேர்ந்த 71ஆயிரத்து 811.69 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தங்குதடையின்றி கடைமடை வரை சென்றடையும்.

    மேலும் மழை வெள்ளக்காலங்களின் பாசன நிலங்களில் தேங்கும் வெள்ள நீர் விரைவாக வடியவும் உறுதி செய்யப்படும்.அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் ஊராட்சியில் மஞ்சளாற்றின் வலது கரையில் பிரியும் வாழ்க்கை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.

    இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி 25.04 கி.மீ தூரத்திற்கு ரூ.22.05 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. மேற்கண்ட வாய்க்கால் தூர்வாருவதால் தரங்கம்பாடி வட்டத்தை சார்ந்த மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோயில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், ஜெயராமன், சீனிவாசன், சண்முகம், உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர், வீரப்பன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்ஸ்ரீதர், ஒப்பந்தக்காரர் வேல்முருகன்,தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, செம்பனார்கோயில் ஒன்றிய ஆணையர் மீனா, மற்றும் உழவர் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார்.
    • நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சாதாரணக்கூட்டம் நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் வாசுதேவன், துணை தலைவர் ம.சுப்பராயன், மேலாளர் காதர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, நித்தியாதேவி பாலமுருகன்: எனது வார்டில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் தெருக்களிலேயே எரியூட்டுகின்றனர். அதனை தடுத்துநிறுத்த வேண்டும்.

    ஜெயந்திபாபு: பண்டாரகுளம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். ராமு: மீன்மார்கெட் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவேண்டும். காய்கனி மார்கெட் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டைகளாக கட்டி பிரதான சாலையோரம் வைக்கப்பட்டு வருவதால் நாள்தோறும் குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்லவேண்டும்.

    வள்ளி முத்து: நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் இருசக்கர வா–கனங்களிலோ, நடந்தோ செல்லமுடியவில்லை. நாய்கள் துரத்தி கடிக்கிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ராஜசேகரன்: எரியவாயு தகனமேடையில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை மாற்றிவிட்டு தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் பங்கேற்றனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் நன்றி கூறினார்.

    • ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் மாதம் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும் பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை தலா ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுமை ப்பெண் திட்டத்தில் முதல் கட்டத்தில் 758 மாணவிகளும், 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

    மொத்தமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 1,588 மாணவிக ளுக்கு தலா ரூ.1000 வழங்க ப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 14-ந்தேதி சீதளாதேவி மாரியம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.‌
    • மாரியம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    வேண்டிய வரத்தை அள்ளித்தரும் நெடுவாசல் சீதளாதேவி மாரியம்மன் கோவில் 20 -ம் ஆண்டு தீமிதி திருவிழாவை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி சீதளாதேவி மாரியம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.

    இதனை தொடர்ந்து 15 ஆம் நாள் நேற்று கடலி ஆற்றாங்கரையில் இருந்து கரகம், பால் காவடி, அலகு காவடிகள் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தது.

    சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இக்கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்க ளது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதற்கான விழா ஏற்பாடுகளை நெடுவாசல், கொங்கராயன்மண்டபம், பட்டாவரம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மா விளக்கு போட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதில் பஞ்சா யத்தார்கள் , விழா குழுவி னர்கள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
    • தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் கோவிலில் வைத்து பராமரிப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் கடந்த 16-ம் தேதி யாகசாலை பூஜைக்காக மேற்குகோபுர நந்தவனத்தில் பள்ளம் வெட்டியபோது கிடைத்த ௨௨ ஐம்பொன் சுவாமி சிலைகள், 412 முழுமையாகவும், 84உடைந்த நிலையிலும் கிடைத்த தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே பாதுகாப்பு பெட்ட அறையில் வைத்து சீல்வைக்கப்பட்டு இரண்டடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரி மாநில சபாநாயகர் ஆர்.செல்வம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

    மாசிலாமணி சுவாமிகள் நிலையத்தில் தருமபுரம் ஆதீனம் 27}ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

    அவருக்கு கோயில் பிரசாதங்கள், கும்பாபிஷேக பத்திரிக்கை ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கினார். பின்னர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த சபாநாயகர் ஆர்.செல்வம், கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன்சிலைகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனத்துடன் இணைந்து பார்வையிட்டார்.

    பின்னர் திருஞானசம்பந்தர் சந்நிதி கருங்கல் மண்டபமாக அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக அதில் திருஞானசம்பந்தருக்கு உமையம்ம் ஞானப்பால் வழங்குவது போன்று சிறப்பம் செதுக்கப்பட்ட கருங்கள் கல்வெட்டை எடுத்துவைத்து பணிகளை தருமை ஆதீனத்துடன் இணைந்து தொடக்கிவைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.செல்வம் கூறுகையில், சட்டநாதர்சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மூலம் கோயிலின் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு தெரிய வருகிறது. கிடைக்கப்பெற்ற சிலைகள், செப்பேடுகளை பராமரிப்பதற்கும், பரிபாலம் செய்வதற்கும், முழு உரிமையோடு தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    மத்திய அமைச்சர் கிருஷ்ணாரெட்டியின் பிரதிநிதியாக செப்பேடுகள், ஐம்பொன் சிலைகளை பார்வையிட்டோம். கோயில் வளாகத்திலேயே சிலைகள்,செப்பேடுகளை வைத்து வழிபடவும், இவற்றை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் கோயிலில் வைத்து பாரமரிப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்தார்.

    அப்போது பாஜக மாவட்ட தலைவர் க.அகோரம், புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் அருள்முருகன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சரண்ராஜ் உடனிருந்தனர்

    • சிறப்பு அலங்காரத்தில் அமிர்தகடேஸ்வரரும், அபிராமி அம்மனும் மண்டபத்தில் எழுந்தருளினர்.
    • சீர்வரிசை எடுத்து வந்து வேதமந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று இரவு கோயில் வளாகத்தில் 100 கால் மண்டபம் எதிரில் தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனும் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. கோவில் குருக்கள் சீர்வரிசை எடுத்து வந்து மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை கோவில் குருக்கள் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோயில் காசாளர் கலியராஜ், கணேச குருக்கள், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், உள்ளிட்ட ஏராளமான பக்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிலைகள், செப்பேடுகள் அனைத்தும் சீர்காழி சட்டநாதர்சுவாமி கோயிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் பதியப்பட்டுள்ள திருமுறைகளை பேனராக அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் கடந்த 16-ம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க மேற்கு கோபுரம் குபேர மூலை நந்தவனத்தில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், தேவார பதிகம் தாங்கிய 496 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்கப்பெற்றது.

    இந்த சிலைகள், செப்பேடுகள் அனைத்தும் சீர்காழி சட்டநாதர்சுவாமி கோயிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள், செப்பேடுகள் கிடைத்த நந்தவன பகுதிக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வந்து பார்வையிட்டார்.

    செப்பேடுகள் கிடைத்த பகுதிக்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என தருமபுரம் ஆதீனம் பெயர் சூட்டினார். தொடர்ந்து அந்த பகுதியில் பெயர் பலகை வைக்கப்பட்டு, கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் பதியப்பட்டுள்ள திருமுறைகளை பேனராக அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அந்த பெயர் பலகை மற்றும் பேனர்களுக்கு மாலை அணிவித்து தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் பூஜைகள் செய்து, தீபாரதனை காட்டினார். இதில் கோயில் காசாளர் செந்தில், தமிழ்ச்சங்க தலைவர் இ.மார்கோனி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • வைத்தீஸ்வரன் ேகாவில் பேரூர்க திமுக வாக்குசாவடி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கடந்த சட்டபேரவை தேர்தலுக்கு பின்னர் 30சதவீதம் தமிழக முதல்வர் மீது மக்கள் ஆதரவு கூடியுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகர, மேற்கு ஒன்றிய, வைத்தீஸ்வரன் ேகாவில் பேரூர் கழக திமுக வாக்குசாவடி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மயிலாடு துறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் தியாக விஜயேல்வரன், அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்றார்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செ ல்வம், திமுக தலைமை பொது குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், சீர்காழி சட்டபேரவை தொகுதி தலைமை பொறுப்பாளர் மண்னை.சோழராஜன் கலந்துகொண்டு பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக சுற்றுசூழல்,காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று பேசுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் பல அரசியில் கட்சி இருக்கும் இடம் தெரியவில்லை.

    கடந்த சட்டபேரவை தேர்தலுக்கு பின்னர் 30சதவீதம் தமிழக முதல்வர் மீது மக்கள் ஆதரவு கூடியுள்ளது.

    நாதல்படுகை, முதலைமேடு திட்டு கிராமங்களில் கொள்ளிடம் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து ரூ.16கோடியில் பேரிடர் மீட்பு மையம் அமைத்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

    கடந்த ஆட்சி காலங்களில் அரசியல் கட்சியினர் வருகைபுரிந்து ஆறுதல் கூறி சென்றனர் எனவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லைஎன அப்பகுதி மக்கள் கூறினர். ஆனால் திமுக அரசு அமைந்த பிறகு அப்பகுதி மக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளது. ஆகையால் திமுக நிர்வாகிகள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

    இதில் திமுக நிர்வாகிகள் பெரியசாமி , செல்வ முத்துக்குமார், முருகன், பந்தல். முத்து, திருச்செல்வம், தனராஜ், துரை மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • வரசித்தி விநாயகர் கோயிலுக்கு முதலில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
    • கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு சென்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், கீழையூர் கிராமம் உடையாருப்புத் தெருவில் அமைந்துயிருக்கும் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு முதலில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் சுந்தர விநாயகர் கோயிலுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஸ்ரீ உத்திராபதியார் கோயிலுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனவீரபாண்டியன் மற்றும் தெருவாசிகள் தலைமையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    இதற்கு முன்பாக விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜை நேற்று பூர்ணகதி செய்து கடம் புறம்பாடு நடைபெற்றது.

    அப்போது சுந்தரமூர்த்தி கசிவாச்சாரியார் தலைமையிலான விக்னேஷ்வர் குருக்கள் மற்றும் வேத விற்பனர்கள் சிவ ஆகம முறைப்படி மந்திரங்கள் ஓத வான வேடிக்கையுடன் கடம் புறப்பாடு கோயிலை வளம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு சென்றது அப்போது கருடன் வட்டமிட பக்தர்கள் சிவ கோஷங்களை எழுப்ப கடத்தில் உள்ள புனித நீரை எடுத்து கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள உத்திராபதியார் சிவலிங்கத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் லத்தீஸ் சஞ்சீவா கும்பலே குடும்பத்தார்கள், விழா குழு தலைவர்கள் ராசு என்கின்ற நாகராஜ், சீனிவாசன், கலியபெருமாள், சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் திருவாளர் சுந்தரி ஜெயச்சந்திரன், துணை தலைவர் அனிதா வீரப்பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் சியாமளா ஸ்ரீதர், முன்னாள் கிராம உதவியாளர் சேகர், சுந்தரம், நம்பிராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மேகநாதன், மற்றும் விழா குழுவினர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×