search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "straw"

    • ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா ஆண்கள் உடலில் வைக்கோல் சுற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
    • 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர். இதனை வெள்ளலூர் நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுவர். இங்கு பிரசித்தி பெற்ற ஏழைகாத்தம்மன் கோவில் உள்ளது.

    வெள்ளலூரை தலைமை இடமாகக் கொண்டு 60 கிராமங்கள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு ஏழைகாத்த அம்மன் காவல் தெய்வமாய் விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறும்.

    அதே போல் இந்த ஆண்டு திருவிழா வெள்ள லூர் கோவில் திருவிழா நடந்தது. முன்னதாக நேர்த்திக்கடன் செலுத்தும் நூற்றுக்கணக்கான ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி முகத்தில் முகமூடி அணிந்து பெரிய ஏழை காத்தம்மன் கோவிலுக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர். நடுத்தர வயதுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சேலையை மட்டும் அணிந்து மதுக்களையம் தூக்கியும், திருமண வயதுடைய பெண்கள் சாமி சிலைகளை தூக்கி ஊர்வலம் சென்றனர். இத்திருவிழா இப்பகுதி மக்கள் நலமாக வாழவும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.
    • அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உமையா ள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயி களிடமிருந்து 60 கட்டு வைக்கோல் போரை வாங்கிகொண்டு மினி லாரியில் ஏற்றி கொண்டு லால்குடி புறப்பட்டு சென்றனர்.

    இந்நிலையில் உமையாள்புரம் மெயின்ரோ ட்டில்ல வரும்பொழுது மின் வயரில் லாரி உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் லாரியில் இருந்த வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்தது. மேலும் லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.

    இதில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

    இது குறித்து லாரியின் உரிமையாளர் லால்குடி சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் ரூ. 4 லட்சம் சேதம் ஏற்பட்டது.

    இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 5 ஏக்கர் வயலில் அறுவடை செய்த வைக்கோல் கட்டுகளை தனது வீட்டு அருகில் வைத்திருந்தார்.
    • வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான் வேளாண் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி.

    இவர் தனது 5 ஏக்கர் வயலில் அறுவடை செய்த வைக்கோல் கட்டுகளை தனது வீட்டு அருகில் வைத்திருந்தார்.

    நேற்று காலை இந்த வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்.
    • தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி கடலோர கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக நெப்பத்தூர் கிராமத்தில் லலிதா என்பவரது பழைய ஓட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமானது மேலும் ஓட்டு கட்டிடத்தில் உள்ள கோடுகள் சேதம் ஆகி உள்ளது.

    தகவல் அறிந்த சீர்காழி மற்றும் மேலையூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அனைத்தனர்.

    இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • வைக்கோல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம்

    பி.வாகைகுளத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 27). இவரது மனைவி அனிதா. அதே பகுதியைச் சேர்ந்தவர் அனிதாவின் பெரியப்பா கணேசன். இவர்களிடையே சொத்து பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனிதா வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு நேற்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதமானது. சொத்து பிரச்சனையை மனதில் வைத்து தனது பெரியப்பா கணேசன் வைகோலுக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவேரிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், நெல் சாகுபடி செய்திருந்தனர்.
    • இங்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றியுள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், காசிகாடு, வளையசெட்டியூர், காட்டுவளவு, மூலப்பாறை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, செட்டிப்பட்டி, தேவூர், மயிலம்பட்டி, குள்ளம்பட்டி, மூலப்பாதை, காவேரிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், நெல் சாகுபடி செய்திருந்தனர். இங்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது. அறுவடை பணிகள் நிறைவடைந்த நிலையில், வைக்கோலை கால்நடை தீவனத்திற்காகவும், காளான் வளர்ப்பிற்காக விற்பனை செய்யும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சில வியாபாரிகள் விவசாயிகளிடம் மொத்தமாக வைக்கோலை வாங்கி வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இப்பகுதியில் எந்திரம் மூலம் உருளையாக காட்டப்பட்ட, ஒரு கட்டு வைக்கோல் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் நாசமாயின.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 45). இவர் தனது டிராக்டரில் அருகாமையில் உள்ள கோவிந்தம் பாளையத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எல்லை என்ற பகுதியில் வந்த போது டிராக்டரில் இருந்த வைக்கோல் தார் சாலையின் மேல் சென்று கொண்டிருந்த மின்சாரக்கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த செந்தில்குமார் டிராக்டரை நிறுத்தி டிப்பரிலிருந்து என்ஜினை கழற்றி வெளியே எடுத்து சென்றார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிப்பர் மற்றும் வைக்கோலில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் டிப்பரின் பாதி பாகம் தீயில் எரிந்தது. #tamilnews
    களக்காடு அருகே மின் வயர்கள் காற்றினால் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி வைகோல் படப்பில் விழுந்ததால் தீ பிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பெருமாள் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 54). தொழிலாளியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இதையொட்டி தனது தோட்டத்தில் இரு வைக்கோல் படப்புகள் வைத்திருந்தார். இதில் 200 கட்டுகள் இருந்தன. 

    இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வைக்கோல் படப்பில் இருந்து கரும் புகை வந்தது. சிறிது நேரத்தில் படப்பு தீ பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ மள, மளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. 

    இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் 200 வைக்கோல் கட்டுகளும் தீயில் கருகி நாசம் அடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் ஆகும். 

    வைக்கோல் படப்பு இருந்த இடத்தின் வழியாக மின் வயர்கள் செல்கின்றன. மின் வயர்கள் காற்றினால் ஒன்றோடு ஒன்று உரசியதால் எழுந்த தீப்பொறி படப்பில் விழுந்ததால் வைக்கோல் படப்பில் தீ பிடித்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

    இதேபோல் கீழப்பத்தை குளத்தின் அருகே உள்ள புதர்களிலும் மின் வயர்கள் உரசியதால் தீ பிடித்தது. அந்த தீயும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    ×