search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைக்கோல் விற்பனை அமோகம்
    X

    வைக்கோல் விற்பனை அமோகம்

    • காவேரிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், நெல் சாகுபடி செய்திருந்தனர்.
    • இங்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றியுள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், காசிகாடு, வளையசெட்டியூர், காட்டுவளவு, மூலப்பாறை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, செட்டிப்பட்டி, தேவூர், மயிலம்பட்டி, குள்ளம்பட்டி, மூலப்பாதை, காவேரிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், நெல் சாகுபடி செய்திருந்தனர். இங்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது. அறுவடை பணிகள் நிறைவடைந்த நிலையில், வைக்கோலை கால்நடை தீவனத்திற்காகவும், காளான் வளர்ப்பிற்காக விற்பனை செய்யும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சில வியாபாரிகள் விவசாயிகளிடம் மொத்தமாக வைக்கோலை வாங்கி வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இப்பகுதியில் எந்திரம் மூலம் உருளையாக காட்டப்பட்ட, ஒரு கட்டு வைக்கோல் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×