வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது

5 ஏக்கர் வயலில் அறுவடை செய்த வைக்கோல் கட்டுகளை தனது வீட்டு அருகில் வைத்திருந்தார்.வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான் வேளாண் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி.

இவர் தனது 5 ஏக்கர் வயலில் அறுவடை செய்த வைக்கோல் கட்டுகளை தனது வீட்டு அருகில் வைத்திருந்தார்.

நேற்று காலை இந்த வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com