என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • ராமேசுவரம்-சென்னை எழும்பூர் ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.
    • கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரிபுலியூரிலும் நின்று செல்லும்.

    சீர்காழி:

    தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்களில், விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    அதனை ஏற்று குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் விரைவு ரெயில்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 18-ந் தேதி முதல் விரைவு ரெயில்கள் நிற்கும் நிலையங்கள் விவரம் வருமாறு: -

    சென்னை எழும்பூர்-மதுரை ( வண்டி எண்-12637) விரைவு ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்-12694) ரெயில் அரியலூரிலும், ராமேசுவரம்-சென்னை எழும்பூர் (வண்டி எண்-16752) ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.

    இதேப்போல் சென்னை எழும்பூர்-காரைக்கால் (வண்டி எண்-16175) விரைவு ரெயில் சீர்காழி, பேரளத்திலும், சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்-16865) விரைவு ரெயில் சீர்காழியிலும் நின்று செல்லும்.

    வருகிற 20-ந் தேதி முதல் ராமேசுவரம்-திருப்பதி (வண்டி எண்-16780) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரில் நின்று செல்லும்.

    வருகிற 22-ந் தேதி முதல் மயிலாடுதுறை-மைசூர்-மயிலாடுதுறை (வண்டி எண்-16231/16232) ரெயில் பாபநாசத்திலும், 24-ந் தேதி முதல் முதல் கன்னியாகுமரி-புதுச்சேரி (வண்டி எண்-16862) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரிலும் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
    • தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.

    • 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 22-ந் தேதி ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும், இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறி இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரராக அருள்பாலிப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.

    இக்கோவில் எம பயம் போக்கி ஆயுள் விருத்தி அருளும் தலமாகும். 59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயதை தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்த கடேஸ்வரரை வழிபடுகிறார்கள்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கட்டளை தம்பிரான்கள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கணேச குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி (சனிக்கிழமை) அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவில் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • குழந்தைகள் தவறுதலாக உபயோகப்படுத்திவிடும் அபாயம் உள்ளது.
    • சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த "ரேடால்" என்ற மருந்தானது வீட்டில் எலிகளை கட்டுப்படுத்த பயன்படு த்தப்பட்டு வருகிறது. இதனை குழந்தைகள் தவறுதலாக உபயோக ப்படுத்தி விடும் அபாயம் உள்ளது.

    இதற்கு எதிர்வினை மருந்து இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் இதன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடைசெய்துள்ளனர்.

    எனவே, இந்த எலி மருந்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மருந்தை எக்காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். "ரேடால்" மருந்து விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம், மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆய்வில் "ரேடால்" மருந்து விற்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனை யாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், "ரேடால்" மருந்து விற்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தால், வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளிக்கலாம். தொலைபேசி எண்கள்:-

    குத்தாலம்- 98945 48257, மயிலாடுதுறை- 88700 68125, செம்பனார்கோயில்- 63698 95439, சீர்காழி- 80722 20767, கொள்ளிடம்- 99944 82889 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி நிர்வாக அனுமதி பெறாமலும் பணிகள் நடக்கிறது.
    • கோபுரத்திலிருந்து வரும் கதிர்வீச்சால் பொதுமக்கள், நோயாளிகள் அனைவரும் பாதிக்கப்படுவர்.

    சீர்காழி:

    சீர்காழி தாசில்தார் செந்தில்குமாரை சந்தித்து திருமுல்லைவாசல் காந்திநகர் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    திருமுல்லைவாசல் காந்திநகரில் குடியிருப்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனை அருகருகே அமைந்துள்ள இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பாக புதிய 5ஜி சேவைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி மன்ற நிர்வாக அனுமதி பெறாமலும், இந்த பணி நடக்கிறது.

    செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சால் மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர்.

    எனவே உடனடியாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தக்காளி கிலோ ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது.

    இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மயிலாடுது றையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடக்கி வைத்தார்.

    தக்காளி கிலோ ரூ. 80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துறை இணைச் இயக்குனர் சேகர், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மற்றும் கூட்டுறவு துறை மாவட்ட இணை பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், சரக துணை பதிவாளர் ராஜேந்திரன், பொது விநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் அண்ணாமலை, தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்து க்கான கூட்டுறவு ஒன்றியத்தை கலெக்டர் மகாபாரதி குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

    • தற்பொழுது இரு மார்க்கமாக 5 ரெயில்கள் சீர்காழியில் நின்று செல்லும்.
    • அந்தியோதயா விரைவு ரெயில், சீர்காழியில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் ஒரு வழி மார்க்கமாக நின்று சென்று கொண்டிருந்த ஐந்து ரெயில்கள் இரு வழி மார்க்கமாக நின்று செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ராமலிங்கம் எம்.பி,யுடன் நான் திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு உள்ள ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு மனுக்களை அளித்தோம்.

    இதன் பிரதிபலனாக தற்பொழுது இரு வழி மார்க்கமாக 5 ரெயில்கள் சீர்காழியில் நின்று செல்லும் என ரெயில்வே மேலாளர் ஹரிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் நகலை ரயில் உபயோ கிப்பாளர்கள் சங்கத்தினர் பெற்றுவந்துள்ளனர்.

    இனிவரும் காலங்களில் சீர்காழியில் நிற்காமல் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில், சீர்காழியில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் இதற்கு முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    அப்போது ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கஜேந்திரன், செயலாளர் மார்க்ஸ் பிரியன், பொருளாளர் முஸ்தபா நந்தகுமார், ரயில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகசண்முகம், தி.மு.க நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் துரை, நவக்கிரக சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 42 அணிகள் கலந்து கொண்டார்கள்.
    • 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியம் குன்னம் சந்தோஷ்,கவி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள்டவுன் இணைந்து நடத்திய 5 ஆம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது .

    கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த42 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் பரிசை குன்னம் அணி தட்டி சென்றது. 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.

    போட்டியில் முதல் பரிசு ரூ. 15,000 மற்றும் கேடயம் ஆகியவற்றை டெம்பிள் ரன் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் மலர்க் கண்ணன் , சொர்ண பால், உறுப்பினர்கள் அருணாச்சலம், ராதாகிருஷ்ணன் ,ஹாஜா ஷெரிப், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி சுமையை தளர்த்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லதா, சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர், வெளியூர் பணி மாறுதல் உடனே வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் அளிக்கப்படும் பணி சுமையை தளர்த்திட வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி 24-ந் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயசுதா, மணிமேகலை, மாவட்டத் துணைத் தலைவர் தாமரைச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் இந்திரா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள்,

    சமுதாய சுகாதார செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 4 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.
    • நாளை காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் பள்ளியில் நடைபெற உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார். அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இவ்விழாவை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த ப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.

    அந்த வகையில், மாணவர்களுக்கான போட்டிகள் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    போட்டிகளுக்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்ப ட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வட்டாரத்திற்கு 10 பேர் வீதம் மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விபரங்களுக்கு 74024 38667 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.
    • காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்களிக்கிறார்.

    மலை மீது தோணியப்பர், சட்டை நாதர் ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் தெற்கு கோபுர வாசல் அருகே எழுந்து அருள் புரிகின்றனர்.

    பிரசித்திப் பெற்ற இக்கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வருகை புரிந்தார்.

    தொடர்ந்து அவர் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, தோணியப்பர் சுவாமி, திருநிலை நாயகி அம்மன், அஷ்ட பைரவர் சுவாமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் சுவாமி படங்கள், பிரசாதங்களை வழங்கினார்.

    அவருடன் ,திமுக நிர்வாகி முத்து.

    தேவேந்திரன் ,அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் சீர்காழி நகர் மன்ற உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் உடன் வந்தனர்.

    ×