search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sirkhali"

    • ராமேசுவரம்-சென்னை எழும்பூர் ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.
    • கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரிபுலியூரிலும் நின்று செல்லும்.

    சீர்காழி:

    தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்களில், விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    அதனை ஏற்று குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் விரைவு ரெயில்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 18-ந் தேதி முதல் விரைவு ரெயில்கள் நிற்கும் நிலையங்கள் விவரம் வருமாறு: -

    சென்னை எழும்பூர்-மதுரை ( வண்டி எண்-12637) விரைவு ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்-12694) ரெயில் அரியலூரிலும், ராமேசுவரம்-சென்னை எழும்பூர் (வண்டி எண்-16752) ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.

    இதேப்போல் சென்னை எழும்பூர்-காரைக்கால் (வண்டி எண்-16175) விரைவு ரெயில் சீர்காழி, பேரளத்திலும், சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்-16865) விரைவு ரெயில் சீர்காழியிலும் நின்று செல்லும்.

    வருகிற 20-ந் தேதி முதல் ராமேசுவரம்-திருப்பதி (வண்டி எண்-16780) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரில் நின்று செல்லும்.

    வருகிற 22-ந் தேதி முதல் மயிலாடுதுறை-மைசூர்-மயிலாடுதுறை (வண்டி எண்-16231/16232) ரெயில் பாபநாசத்திலும், 24-ந் தேதி முதல் முதல் கன்னியாகுமரி-புதுச்சேரி (வண்டி எண்-16862) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரிலும் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அத்தியாவசிய பொருட்கள் விலை கண்டித்தும், விலை உயர்வு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.வி. பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    சீர்காழி:

    தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை கண்டித்தும், விலை உயர்வு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம். ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத், பேரூர் கழக செயலாளர்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.வி. பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் அதிமுகவை சேர்ந்த கல்யாணசுந்தரம், நாடி.முத்து அஞ்சம்மாள், மாலினி, மதியழகன், விஜயன், வக்கீல்கள் தியாகராஜன், பாலாஜி, நெடுஞ்செழியன், ஏவி.மணி, பரணிதரன், ரவி. சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    கொள்ளிடத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், தலைமை வகித்தனர் முன்னாள் எம்எல்ஏ சக்தி கண்டன உரையாற்றினார்.

    இதில் நிர்வாகிகள் ஆனந்த நடராஜன், சொக்கலிங்கம், சம்பந்தம், இனியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×