search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாரதி உரையாற்றினார்.

    சீர்காழியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

    • அத்தியாவசிய பொருட்கள் விலை கண்டித்தும், விலை உயர்வு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.வி. பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    சீர்காழி:

    தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை கண்டித்தும், விலை உயர்வு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம். ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத், பேரூர் கழக செயலாளர்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.வி. பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் அதிமுகவை சேர்ந்த கல்யாணசுந்தரம், நாடி.முத்து அஞ்சம்மாள், மாலினி, மதியழகன், விஜயன், வக்கீல்கள் தியாகராஜன், பாலாஜி, நெடுஞ்செழியன், ஏவி.மணி, பரணிதரன், ரவி. சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    கொள்ளிடத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், தலைமை வகித்தனர் முன்னாள் எம்எல்ஏ சக்தி கண்டன உரையாற்றினார்.

    இதில் நிர்வாகிகள் ஆனந்த நடராஜன், சொக்கலிங்கம், சம்பந்தம், இனியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×