என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி நாளை நடக்கிறது
- முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.
- நாளை காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் பள்ளியில் நடைபெற உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார். அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்விழாவை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த ப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.
அந்த வகையில், மாணவர்களுக்கான போட்டிகள் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
போட்டிகளுக்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்ப ட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வட்டாரத்திற்கு 10 பேர் வீதம் மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விபரங்களுக்கு 74024 38667 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்