என் மலர்tooltip icon

    மதுரை

    • மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.கே.நகர் மானகிரி 5-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (வயது37). இவர் மொபட்டில் அண்ணாநகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர்.

    அவர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கனி மாற்று திருவிழா விமரிசையாக நடைபெறும்.
    • கனிமாற்று திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியில் பழமை வாய்ந்த தேவிஅம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கனி மாற்று திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இதில் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள். விழாவில் மதுரையில் இருந்து ஆண்கள் 17 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வருவார்கள்.

    அதன்படி கனிமாற்று திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது. சிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நெல்பேட்டையில் இருந்து நவநீதகிருஷ்ணன் படம் மற்றும் மலை வாழைப்பழங்களை ஓலைப்பெட்டியில் வைத்து தலைபாரமாக சுமந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவி அம்பாள் கோவிலுக்கு நடந்து சென்றனர். கோவிலுக்கு சென்றடைந்த அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    ஒவ்வொரு வருடமும் விவசாயம் செழிக்கவும், நல்ல மழை வேண்டியும் இந்த திருவிழா பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • கழிவுநீர்-குப்பைகள் தேங்கி தெப்பக்குளம் துர்நாற்றம் வீசுகிறது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை நகரின் அடை யாளங்களில் ஒன்றாகவும் முக்கிய சுற்றுலா இடமாக வும் உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்தில் கடந்த 2 வருடங்களாக வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் நிரம்பி தெப்பக் குளம் காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் தெப்பக்குளத்தில் வேகமாக தண்ணீர் குறைய தொடங்கியது. இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மாதம் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது. மேலும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனை பயன்படுத்தி மாரியம்மன் தெப்பக் குளத்தில் தண்ணீர் முழுவ துமாக நிரப்பப்பட்டது. ஆனால் தற்போது அந்த தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும் குப்பைகளும், கழிவுநீரும், பிளாஸ்டிக் பொருட்களும் தெப்பக்குளத்தில் கலந்துள்ளன. இதன் காரணமாக தற்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி காலை வேளையில் ஏராள மானோர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். மாலை வேளைகளில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் அமர்ந்து பொழுதுபோக்கி செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். தெப்பக்கு ளத்தின் அருகில் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இந்த நிலையில் மதுரை நகரில் ஒரே பொழுதுபோக்கு இடமாக உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்திற்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக அதிருப்தி அடைந்து ள்ளனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தெப்பக் குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஆம்னி பஸ் மோதி வியாபாரி பலியானார்.
    • நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள குரண்டிபட்டியை சேர்ந்த வர் ராஜாங்கம் (வயது 65), கோழி வியாபாரம் செய்து வந்த இவர், இன்று அதிகாலை மேலூருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டி ருந்தார். அதே சாலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்றது.

    அந்த பஸ் எதிர்பாராத விதமாக ராஜாங்கத்தின் மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி, தனிபிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அவர்கள் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அவர்கள் விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சங்கரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு கூடுதல் நிலம் ஒதுக்கி தரவேண்டும்.
    • கள்ளிக்குடி வட்டாட்சியரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள அரசப்பட்டி, வலையன் குளம், வீர பெருமாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வெயி லுகந்த அம்மன் கோவில் அரச பட்டியில் அமைந்து ள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 3 கிராமங் களை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து சாமி கும்பிட்டு வருகிறார்கள்.

    தற்போது கோவில் இருக்கும் இடத்தை சுற்றிலும் புறம்போக்கு பகுதியாக உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 70 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனவே 3 கிரா மங்களை சேர்ந்த பொது மக்கள் ரூ.2 ஆயிரம் வரி கொடுத்து கோவில் கும்பா பிஷேகம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் கோவில் பெய ரில் நிலம் இல்லாததால் சுற்றுச்சுவர் எழுப்புவ தற்கும், கும்பாபி ஷேகம் செய்ய முடிய வில்லை. இந்து அறநிலை யத்துறை மற்றும் வரு வாய்த்துறை அதிகாரி களிடம் கோவில் பெயரில் நிலத்தை மாற்றிக் கொடு ப்பதற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ந டவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு நிதி உதவி மூலம் ரூ.7 லட்சம் பெற்று கோவில் புனர மைப்பு செய்யப்பட்டது.

    தற்போது கோவில் பெயரில் குறைந்தது 50 சென்ட் நிலம் பதிவு செய்து தர வேண்டும் என கள்ளிக்குடி வட்டாட்சி யரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். சாமி கும்பிடுவதற்காக நிலங்கள் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளிக் குடி வட்டாட்சியர் தெரிவித்தார்.

    • சமத்துவ மக்கள் கட்சி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது.
    • கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை

    சமத்துவ மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர்கள் புறா மோகன் (மத்தி), பாலமேடு கார்த்திக் (வடக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நாளை (28-ந்தேதி) மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் விளக்க வுரையாற்றுகிறார். மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசுகிறார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சு, சிவாஜி பூமிநாதன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகிக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத் குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    முதன்மை துணை பொதுச்செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட நிர்வாகிகள் விளக்கவுரையாற்றுகின்றனர். முடிவில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி நன்றி கூறுகிறார்.

    மதுரையில் நடைபெற உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்ள வருகை தரும் நிறுவ னத்தலைவர் சரத்குமாருக்கு கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கார், வேன் மூலம் திரளான தொண்டர்கள் வருகை தர உள்ளனர்.

    இதையொட்டி கூட்ட ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. எனவே சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் திற்கு தலைமைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரை அருகே பெண் திடீரென மாயமானார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது46). இவரது மனைவி வசுமதி(36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தலையில் கட்டி ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக வசுமதி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென்று மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை? பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 9 பேர் சிக்கினர்.
    • பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதிரடியாக அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர்.

    தெப்பக்குளம் மாரி யம்மன் மேற்குத்தெருவில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த பிரதீப் குமார் சோனி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிலோ புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர்.

    தெப்பக்குளம், கீரைத்துறை, சுப்பிரமணிய புரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடைெசய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பதுக்கிவைத்து விற்ற புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இதில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர்.

    • திருட்டுத்தனமாக பதுக்கி ைவக்கப்பட்டிருந்த 187 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 31 பேர் கைதாகினர்.
    • தல்லாகுளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி உள்பட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்தந்த பகுதிகளில் திடீர் சோதனை ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 187 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக தல்லாகுளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற செல்லூர் மீனாட்சிபுரம் ஜீவா நகரை சேர்ந்த காமராஜை(57) கைது செய்தார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.4 ஆயிரத்து 169-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்களை தாக்கி பணம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலம் சந்திரலேகா நகரை சேர்ந்த பால்ராஜ் மகன் சரவணன் (வயது22).இவர் ஆரப்பா ளையம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.600-ஐ வழிப்பறி செய்து தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சரவணன் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட கரிமேடு பொன்னகரம் 4-வது தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் மனோஜ் சிவா என்ற மனோஜ் (22), தத்தனேரி களத்துபொட்டல் கண்ணன் மகன் கிருஷ்ணகுமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    செல்போன் பறிப்பு

    அவனியாபுரம் பெரியசாமி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (49). இவர் விளக்குத்தூண் பகுதியில் உமறுப்புலவர் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அவரை 3 வாலிபர்கள் வழிமறித்து தாக்கினர்.பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் 17 வயது சிறுவன், காளவாசல் தமிழ் தென்றல் 3-வது தெரு மோகன் மகன் விமல் (19), அரசரடி சின்ன கண்ணன் மகன் அஜய் பாண்டி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நகை பறிப்பு

    திருமங்கலம் தென்கால் நகரை சேர்ந்த லட்சம் மகன் நிஷாந்தன் (25). இவர் புட்டுத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது நண்பரிடம் சிலர் வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.இதை நிஷாந்தன் கண்டித்தார்.

    ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் நிஷாந்தனை தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 1¼ பவுன் நகைையயும் பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மேலமாசி வீதி மக்கனார் தோப்பு சந்திரன் மகன் முத்துவேல் (27), வெங்கடசாமிநாயுடு அக்ரகாரம் சரவணன் மகன் ஆகாஷ் (20), சிம்மக்கல் தைக்கால் முதல் தெரு மணிகண்டன் மகன் ஸ்ரீ ராம் (22), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் அப்துல் ஜாபர் மகன் முகமது அசாருதீன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

    • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • தீபாரதனை காட்டப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரம் பூக்களால் அலங்கரிக் கப்பட்டது. காலை 9 மணியளவில் சுவாமி-அம்மாள் கொடிமரம் முன்பு எழுந்தருள பட்டர்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    அதனை தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வருகிறார். வருகிற 8-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் தினமும் இரவு சுவாமி பல்வேறு வாக னங்களில் எழுந்தருளுகிறார். வருகிற 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது.

    5-ந் தேதி கோவில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றங்கரையில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 6-ந் தேதி காலை மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்புகிறார்.

    8-ந் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    • சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து பலியானார்.
    • சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மதுரை

    வண்டியூர் சி.எம்.நகர் யமுனா நதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது75). இவர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மனைவி வில்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×