search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு கூடுதல் நிலம் ஒதுக்கி தரவேண்டும்
    X

    வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு கூடுதல் நிலம் ஒதுக்கி தரவேண்டும்

    • கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு கூடுதல் நிலம் ஒதுக்கி தரவேண்டும்.
    • கள்ளிக்குடி வட்டாட்சியரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள அரசப்பட்டி, வலையன் குளம், வீர பெருமாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வெயி லுகந்த அம்மன் கோவில் அரச பட்டியில் அமைந்து ள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 3 கிராமங் களை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து சாமி கும்பிட்டு வருகிறார்கள்.

    தற்போது கோவில் இருக்கும் இடத்தை சுற்றிலும் புறம்போக்கு பகுதியாக உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 70 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனவே 3 கிரா மங்களை சேர்ந்த பொது மக்கள் ரூ.2 ஆயிரம் வரி கொடுத்து கோவில் கும்பா பிஷேகம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் கோவில் பெய ரில் நிலம் இல்லாததால் சுற்றுச்சுவர் எழுப்புவ தற்கும், கும்பாபி ஷேகம் செய்ய முடிய வில்லை. இந்து அறநிலை யத்துறை மற்றும் வரு வாய்த்துறை அதிகாரி களிடம் கோவில் பெயரில் நிலத்தை மாற்றிக் கொடு ப்பதற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ந டவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு நிதி உதவி மூலம் ரூ.7 லட்சம் பெற்று கோவில் புனர மைப்பு செய்யப்பட்டது.

    தற்போது கோவில் பெயரில் குறைந்தது 50 சென்ட் நிலம் பதிவு செய்து தர வேண்டும் என கள்ளிக்குடி வட்டாட்சி யரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். சாமி கும்பிடுவதற்காக நிலங்கள் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளிக் குடி வட்டாட்சியர் தெரிவித்தார்.

    Next Story
    ×