search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
    X

    கொடியேற்றம் நடந்த பின் கொடி மரத்திற்கு தீபாரதனை காட்டப்பட்டது.

    கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

    • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • தீபாரதனை காட்டப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரம் பூக்களால் அலங்கரிக் கப்பட்டது. காலை 9 மணியளவில் சுவாமி-அம்மாள் கொடிமரம் முன்பு எழுந்தருள பட்டர்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    அதனை தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வருகிறார். வருகிற 8-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் தினமும் இரவு சுவாமி பல்வேறு வாக னங்களில் எழுந்தருளுகிறார். வருகிற 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது.

    5-ந் தேதி கோவில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றங்கரையில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 6-ந் தேதி காலை மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்புகிறார்.

    8-ந் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×