என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman magic"

    • மதுரை அருகே பெண் திடீரென மாயமானார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது46). இவரது மனைவி வசுமதி(36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தலையில் கட்டி ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக வசுமதி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென்று மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை? பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றார்
    • போலீஸ் நிலையத்தில் புகார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த (17 வயது) இளம் பெண்.

    இவர் கடந்த 29-ந் தேதி ஆம்பூர் உள்ள தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வரவில்லை. இதுகுறித்து இளம்பெண் பெற்றோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி ஆர்த்தி. கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனா ஸ்ரீ என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

    சூர்யா மற்றும் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தையுடன் பெண்ணின் தாய் நிர்மலா வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    பின்னர் மனைவி குழந்தையை பெண்ணின் தாய் வீட்டிலேயே விட்டு விட்டு சூர்யா கட்டிட வேலைக்கு பெங்களூருக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 9 -ந் தேதி சூர்யா மாமியார் வீடான கலர் வட்டத்திற்கு வந்து 3 நாட்களாக அங்கேயே தங்கினார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஆர்த்தி தன் கை குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

    பெண்ணின் கணவர் மற்றும் பெண்ணின் தாயார் இருவரும் ஆர்த்தியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரை பெற்ற போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கை குழந்தையுடன் காணாமல் போன ஆரத்தியை தேடி வருகின்றனர்.

    மேலும் குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரியாபட்டி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்
    • மாயமான கணேசனின் மனைவியை தேடி வருகின்றனர்

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள சிம்மாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு திடீரென மாய மாகிவிட்டார். அதுபற்றி கணேசன் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து குழந்தைகளுடன் மாயமான கணேசனின் மனைவியை ேதடி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்ைதயை சேர்ந்தவர் முருகேசன் (22). இவர் 3 வருடங்களுக்கு முன்பு கோவையில் வேலை பார்த்தார். அப்போது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த பெண் தனது குழந்தையுடன் மாமியார் மற்றும் உறவினர்களுடன் சாத்தூர் வந்துள்ளார்.

    சாத்தூர் பஸ் நிலையத்தில் குழந்தையை மாமியாரிடம் கொடுத்து விட்டு கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்பு அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. அவர் மாயமானது குறித்து முருகேசன் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கலாம்பட்டியை சேர்ந்தவர் காளிரத்தினம் (29). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இவரது மனைவி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற காளிரத்தினத்தின் மனைவி மாயமானார். அவர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×