என் மலர்tooltip icon

    மதுரை

    • பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையுண்ட சந்திரபாண்டியன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேககின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம் பட்டி செல்லும் சாலையில் கருப்பங்குளம் கன்மாய் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தோடு தலையில் இரண்டு இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பாலமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு, மாவுத்தன் பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரபாண்டியன் (வயது 46) என்பதும், இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் தொடர்ந்து 4-வது முறையாக அ.தி.மு.க. கவுன்சிலரராக வெற்றி பெற்றவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் இவர் நத்தம் அருகே லிங்கவாடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.

    கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் என்பதால் மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தனிப்படை விரைந்து விசாரணையை தொடங்கி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொலையுண்ட சந்திரபாண்டியன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேககின்றனர்.

    அவரது ஊரில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கொலை குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    • தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சாப்டூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஆண்டின் 365 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இடையில் ஏற்பட்ட கடுமையான காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஏராளமான சித்தர்கள் இங்கு வாழ்ந்து வந்ததால் அந்த பகுதி சித்தர் பூமியாகவும் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிளாவடி கருப்பசாமி கோவில் 5-வது பீட்டில் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.

    கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் மலை இல்லாததால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகமும் அதிகமாக இருந்தததால் மூங்கில் ஒன்றோடொன்று உரசி தீப்பற்றியது.

    காட்டுத்தீ வேகமாக அடுத்தடுத்த இடங்களில் பரவியது. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர்.

    3 ஆயிரம் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்கள் மலையிறங்க வனத்துறையினர் தடை விதித்து கோவிலிலேயே தங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மேலும் சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமயில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

    ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் நாவலூத்து பகுதியில் இன்று 2-வது நாளாக காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எரிந்து வருகிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பு இல்லை எனவும், 2-வது நாளாக பக்தர்கள் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்ட 4-வது நாளான இன்று சதுரகிரி கோவிலுக்கு பக் தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயிலில் சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.10 செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை இருந்தும், வனத்துறையினர் சோதனை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் மலைப்பாதையில் 5 இடங்களில் வேட்டை தடுப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அங்கும் கண்காணிப்பு பணிக்கு யாரும் இருப்பதில்லை. இதனால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

    • அருள் ஆனந்தர் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழி–காட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு சார்பில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் அன்பரசு வரவேற்றார். செயலாளர் அந்தோணிசாமி, துணை முதல்வர் சுந்தரராஜ் சிறப்புரையாற்றினர்.

    மதுரை மண்டல வேலை–வாய்ப்பு மற்றும் பயிற்சி மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரசுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து–ரைத்தார். தொடர்ந்து, மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தின் துணை இயக்குனர் சண்முக சுந்தர், குடிமைப்பணி தேர் வுகள் குறித்து விளக்கி–னார்.

    மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் நடத் தும் இலவச பயிற்சி வகுப்பின் அறிவுரையாளர் மலைச்சாமி பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். சிறார் நீதி வாரிய உறுப்பினர் பாண்டி–யராஜன் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். முடி–வில் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு துணை தலைவர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

    • பொது சிவில் சட்டத்தை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.

    மதுரை

    நாட்டின் பன்முக தன் மையை சீர் குலைக்கும் விதமாக பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளதாக கூறியும், அதனை கண்டித் தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பில் கட்சி–யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகு–மான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தொகுப்புரை வழங்கினார். மதுரை முஸ் லிம் ஐக்கிய ஜமாத் செயலா–ளர் நிஸ்தார் அஹ்மத், பொருளாளர் அப்துல் காதர், முன்னாள் தலைவர் நஜ்முதீன், ஜமாஅத்துல் உலமா மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் மன்பஈ,

    மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், சோகோ அறக்கட்டளை பொறுப்பா–ளர் வழக்கறிஞர் செல்வ கோமதி மற்றும் அனைத்து கட்சி, இயக்க, ஜமாஅத் நிர்வாகிகள், உலாமா பெரு–மக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன் னாள் அமைச்சருமான பொன் முத்துராமலிங்கம், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமி–நாதன், அகில இந்திய பார் வர்டு பிளாக் தேசிய துணைத் தலைவரும், முன் னாள் எம்.எல்.ஏ.வு–மான பி.வி.கதிரவன், சி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராஜன்,

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபிக் அஹ்மது, திருவடி குடில் சுவாமிகள், தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேரறிவாளன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லாஹ் கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இறுதியாக மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் தந்தையை தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது55). இவரது மகன் பொன்முத்து செல்வம் (24). இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இவர் குடிப்பதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் கொடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொன்முத்துசெல்வம், தந்தையை பீர் பாட்டிலால் தாக்கினார். இதில் காயமடைந்த பொன்னுசாமி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன் முத்து செல்வத்தை கைது செய்தனர்.

    திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (61). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவியின் மகன்கள் பாபு, ராஜசேகர். இவர்கள் இருவரும் தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர்.

    ஆனால் அவர் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு, ராஜசேகரை கைது செய்தனர்.

    • வாகனம் மோதி பேக்கரி கடை ஊழியர் பலியானார்.
    • 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி அருகேயுள்ள தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 58). இவர் கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கூத்தியார்குண்டை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராம்குமார் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • மதுரை மாநகராட்சி மண்டலம் 5-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடக்கிறது.
    • மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையில் வார்டு மறு வரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

    மண்டலம் 5 (மேற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.71 மாடக்குளம், 72 முத்துராமலிங்கபுரம், 73 முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, 74 பழங்காநத்தம், 78 கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, 79 தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, 80 வீரகாளியம்மன் கோவில் தெரு, 81 ஜெய்ஹிந்துபுரம், 82 சோலையழகுபுரம், 83 எம்.கே. புரம், 84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 91 மீனாட்சி நகர் அவனியாபுரம், 92 பாம்பன் சுவாமி நகர், 93 பசுமலை, 94 திருநகர், 95 சவு பாக்யாநகர், 96 ஹார்விப் பட்டி, 97 திருப்பரங்குன்றம், 98 சன்னதி தெரு, திருப்ப ரங்குன்றம், 99 பாலாஜி நகர், 100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகள்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    இந்த தகவல் மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காந்தி மியூசிய புனரமைப்பு பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
    • சிற்பங்கள் மற்றும் ஒவி யங்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    தென்னிந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான மதுரை காந்தி மியூசியம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதுப் பிக்கப்படும் என முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    அதனடிப்படையில் காந்தி மியூசியத்தில் புனர மைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புனரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணி களை அமைச்சர் வெள்ளக் ேகாவில் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இந்தியாவின் பழமையான அருங்காட்சிய கத்தையும், உலக தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு கருத்தரங்க கூடங்கள், ஆய்வரங்கங்கள், பார்வையாளர் அரங்கம் மற்றும் நூலகத்தையும் அமைச்சர் ஆய்வு ெசய்தார்.

    சங்கத்தமிழ் காட்சிக் கூடத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஒவியங்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • கடுமையாக தாக்கப்பட்ட ராமச்சந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்தது.
    • உரிமையாளர் தீபக் உள்ளிட்டோர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தனர்

    மதுரை:

    உகாண்டா நாட்டில் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்த மதுரை வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை வளர் நகர் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 47). இவர் உகாண்டா நாட்டில் உள்ள இந்தியரான தீபக் என்பவர் நடத்தி வரும் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பணிக்கு சென்ற ராமச்சந்திரன் பல மாதங்கள் ஆகியும் தனது குடும்பத்தினரிடம் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார்.

    அவரிடம் மனைவி மற்றும் உறவினர்கள் பேச முயன்றும் இணைப்பு கிடைக்காமல் பேச முடிய வில்லை. இதனால் இவரது மனைவி பாமினிக்கு அச்சம் ஏற்பட்டது.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது ராமச்சந்திரன், தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும், அவரை உரிமையாளர் தீபக் விசாரித்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து பாமினி மதுரையில் இருந்து உகாண்டாவில் உள்ள அந்த கம்பெனிக்கு கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து ராமச்சந்திரனை விடுவிக்காமல் எண்ணை நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தனி அறையில் அடைத்து வைத்து தாக்கி வருவதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் ராமச்சந்திரனின் கதி என்னவென்று அறியாத அவரது மனைவி பாமினி ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் உரிமையாளர் தீபக்கிடம் பேச முயன்றார். ஆனாலும் தீபக் பேச மறுத்து விட்டார். இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட ராமச்சந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரனின் உறவினர்கள் உகண்டாவில் உள்ள தமிழ் சங்கம் மற்றும் இந்திய தூதரகத்தின் மூலம் ராமச்சந்திரனை உடனடியாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் இருந்து கடந்த 11-ந்தேதி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் உயிரிழந்தார். அவரை உரிமையாளர் தீபக் உள்ளிட்டோர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தனர்

    இதையடுத்து உகாண்டா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் ராமச்சந்திரன் உடல் மதுரைக்கு நேற்று விமானத்தில் எடுத்து வரப்பட்டது.பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    உகாண்டாவுக்கு பணிக்கு சென்ற ராமச்சந்திரன் பிணமாக ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட விஷயத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் தீபக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரிடம் இருந்து உரிய நிவாரனம் பெற்றுத்தரவேண்டும் என்றும் ராமச்சந்திரனின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் தீபக் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமச்சந்திரன் மறைவால் வறுமையில் வாடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    • மதுரை மாநகரில் திடக்கழிவு பணிகளுக்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
    • இதனை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அனுப்பானடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அனுப்பானடி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் திறப்புவிழா, திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள புதிய இலகுரக வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கான தொடக்க விழா அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், துணைமேயர் நாகராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    அனுப்பானடியில் 100 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை சார்பில் ரூ.47.5 லட்சமும், அரசின் நிதியில் இருந்து ரூ.47.5 லட்சமும் சேர்த்து ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் 7 வகுப்பறைகள், 1 நவீன ஸ்மார்ட் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இவற்றை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

    100-வது வார்டு பகுதி களில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளைக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு தினந்தோறும் சுமார் 800 டன் குப்பைகள் கொண்டு சென்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சியின் நுண்ணுயிர் செயலாக்கம் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் தூய்மை பணி களை விரைந்து மேற்கொள்ள 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் 40 இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை அமைச்சர்கள் கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியான வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், அண்ணா நகர் கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரினை அதிக ரிக்கும் பொருட்டு வண்டியூர் கண்மாய் தூார்வாரப்பட்டு தண்ணீர் நிரந்தரமாக சேமித்து வைக்கப் பட்டுள்ள தால் சுற்றுப்பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

    இந்த நிலையில் வண்டி யூர் கண்மாயை அழகுப்படுத்தும் பணிக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜையில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் முகேஷ்சர்மா, வாசுகி சசிகுமார், கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் திருமலை, காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர், உதவிப்பொறியாளர் ரிச்சார்டு, உதவி பொறி யாளர் அமர்தீப், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், கவுன்சிலர்கள் பிரேமா, முத்துமாரி ஜெயக்குமார், கவிதா செல்வம், ம.தி.மு.க. மாநகர் செயலாளர் முனிய சாமி, 88-வது வட்ட கழக செயலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை செய்தார்.
    • கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகேயுள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட் சின்ன உலகானி கிராமத்தை சேர்ந் த–வர் வேலுச்சாமி. இவரது மனைவி பாண்டி–யம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்க–ளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இதில் மூத்த மகளான அன்புச்செல்வி (20) மது–ரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே விடுமுறை தினமான நேற்று அவரது தாய் துணிகளை துவைத்து தருமாறு மகள் அன்புச் செல்வியிடம் கூறியுள்ளார்.

    ஆனால் துணிகளை அவர் துவைக்காமல் இருந் துள்ளார். இதனால் ஆத்தி–ரம் அடைந்த தாய் பாண்டி–யம்மாள் மகளை கண்டித் துள்ளார். இதில் மனம் உடைந்த அன்புச்செல்வி மல்லிகை செடிக்கு தெளிக் கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

    இதைப்பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக் கத்தினர் அன்புச்செல் வியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் அன்புச் செல்வி பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து அவரது தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின்பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள். தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள் ளது.

    • திருமங்கலம் அருகே பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மாயமானது.
    • கள்ளிக்குடி போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–ன்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென் னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது வீட்டின் பீரோவில் கடந்த 21.5.2023 அன்று 8 பவுன் தங்க நகையினை பூட்டி வைத்திருந்தார். ஆடி அமாவாசை அன்று எடுக்க முடிவு செய்திருந்தார்.

    இதற்கிடையே அவற்றை சரிபார்ப்பதற்காக கடந்த 3-ந்தேதி சுந்தரம் பீரோவை திறந்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இத–னால் அதிர்ச்சி அடைந்த சுந்தரம் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தார். ஆனால் யாரும் அதுபற்றி அறிந்தி–ருக்கவில்லை.

    அதே சமயம் சுந்தரத்திற்கு தனது உறவினர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற் கேற்றவாறு அவரது நடவ–டிக்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதைய–டுத்து அந்த உறவினர் மீது சுந்தரம் கள்ளிக்குடி போலீ–சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–ன்றனர்.

    ×