என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- அருள் ஆனந்தர் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
மதுரை
மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழி–காட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு சார்பில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் அன்பரசு வரவேற்றார். செயலாளர் அந்தோணிசாமி, துணை முதல்வர் சுந்தரராஜ் சிறப்புரையாற்றினர்.
மதுரை மண்டல வேலை–வாய்ப்பு மற்றும் பயிற்சி மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரசுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து–ரைத்தார். தொடர்ந்து, மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தின் துணை இயக்குனர் சண்முக சுந்தர், குடிமைப்பணி தேர் வுகள் குறித்து விளக்கி–னார்.
மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் நடத் தும் இலவச பயிற்சி வகுப்பின் அறிவுரையாளர் மலைச்சாமி பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். சிறார் நீதி வாரிய உறுப்பினர் பாண்டி–யராஜன் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். முடி–வில் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு துணை தலைவர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்