என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- பொது சிவில் சட்டத்தை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.
மதுரை
நாட்டின் பன்முக தன் மையை சீர் குலைக்கும் விதமாக பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளதாக கூறியும், அதனை கண்டித் தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பில் கட்சி–யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகு–மான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தொகுப்புரை வழங்கினார். மதுரை முஸ் லிம் ஐக்கிய ஜமாத் செயலா–ளர் நிஸ்தார் அஹ்மத், பொருளாளர் அப்துல் காதர், முன்னாள் தலைவர் நஜ்முதீன், ஜமாஅத்துல் உலமா மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் மன்பஈ,
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், சோகோ அறக்கட்டளை பொறுப்பா–ளர் வழக்கறிஞர் செல்வ கோமதி மற்றும் அனைத்து கட்சி, இயக்க, ஜமாஅத் நிர்வாகிகள், உலாமா பெரு–மக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன் னாள் அமைச்சருமான பொன் முத்துராமலிங்கம், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமி–நாதன், அகில இந்திய பார் வர்டு பிளாக் தேசிய துணைத் தலைவரும், முன் னாள் எம்.எல்.ஏ.வு–மான பி.வி.கதிரவன், சி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராஜன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபிக் அஹ்மது, திருவடி குடில் சுவாமிகள், தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேரறிவாளன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லாஹ் கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்