search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel missing"

    • திருமங்கலம் அருகே பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மாயமானது.
    • கள்ளிக்குடி போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–ன்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென் னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது வீட்டின் பீரோவில் கடந்த 21.5.2023 அன்று 8 பவுன் தங்க நகையினை பூட்டி வைத்திருந்தார். ஆடி அமாவாசை அன்று எடுக்க முடிவு செய்திருந்தார்.

    இதற்கிடையே அவற்றை சரிபார்ப்பதற்காக கடந்த 3-ந்தேதி சுந்தரம் பீரோவை திறந்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இத–னால் அதிர்ச்சி அடைந்த சுந்தரம் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தார். ஆனால் யாரும் அதுபற்றி அறிந்தி–ருக்கவில்லை.

    அதே சமயம் சுந்தரத்திற்கு தனது உறவினர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற் கேற்றவாறு அவரது நடவ–டிக்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதைய–டுத்து அந்த உறவினர் மீது சுந்தரம் கள்ளிக்குடி போலீ–சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–ன்றனர்.

    ×