என் மலர்tooltip icon

    மதுரை

    • 2 குழந்தைகளுடன் இளம்பெண், மாணவி மாயமானார்கள்.
    • இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே என்.பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி அய்யம்மாள் (வயது26). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் மனைவி அய்யம்மாள் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அய்யம்மாள் அவரது 2 குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து பாஸ்கரன் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கொட்டாம்பட்டி அருகே உள்ள சின்ன கொட்டாம்பட்டி இந்த ஊரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரை தந்தை கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • சண்டிகேசுவரர் சிற்பம் கருப்பணசாமி கோவிலில் இருளப்பசாமியாக வழிபட்டதாக தெரிகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கூடக்கோவில் கண்மாய் கரையில் அமைந்துள்ள கருப்பணசாமி கோவிலில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாண வர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அந்த கல்லூரியின் வர லாற்றுத்துறை பேராசிரிய ரும் பாண்டியநாடு பண் பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் கூடக் கோவில் சென்று கள ஆய்வு மேற் கொண்டனர். அப்போது 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேசுவரர் மற்றும் அய்யனார் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறுகை யில், இந்த சிற்பங்கள் பாண்டியர்கள் காலத்து கலைநயத்துடன் வடிவமைக் கப்பட்ட சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பம் ஆகும்.

    இந்த 2 சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சிவன்கோவில் இருந்திருக்க வேண்டும் என தெரியவருகிறது. சண்டிகேசுவரர் சிற்பம் கருப்பணசாமி கோவிலில் இருளப்பசாமியாக வழிபட்டதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க ஆண்டு விழா நடந்தது.
    • சட்ட ஆலோசகர் பீர்முகமது நன்றி கூறினார்.

    மேலூர்

    மேலூரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத் தின் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிவ கங்கை மாவட்ட சப் கலெக் டர் சரவண பெருமாள் கலந்து கொண்டு பேசினார்.

    மேலூரில் ஒய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் பேரவை கூட்டம் மற்றும் ஆண்டு விழா தனியார் திருமணமண்டபத்தில் நடை பெற்றது. மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தவமணி தலைமை தாங்கினார். இணைச் செய லாளர் புலவர் பரஞ் ஜோதி நிகழ்ச்சி தொகுத்து வழங் கினார்.

    செயற்கு செயற்குழு உறுப்பினர் எஸ்.செல்வ நாதன் வரவேற்று பேசினார். சங்கச் செயலாளர் சேகர் ஸ்ரீதர் ஆண்ட றிக்கை வாசித் தார். சங்க பொருளா ளர் ராமலிங்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

    துணைத் தலைவர் துரைராஜ் தீர்மா னங்களை முன்மொ ழிந்தார். சங்கத் தின் கவுரவ தலைவர் நல்லா சிரியர் ராமையா மாணவர் களுக்கு பரிசு வழங்கி னார். சங்கத்தின் கவுரவ தலைவர் கள் பெரிய கருப்பன், செந் தில்குமார், இணை செயலா ளர்கள் பரந்தாமன், முகமது அலி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    சிறப்பு விருந்தி னர்களாக சிவகங்கை மாவட்ட துணை கலெக்டர் சரவணபெரு மாள், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஒய்வு தனசே கரன், மேலூர் உதவி கருவூல அலுவலர் ரமேஷ், ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.

    மதுரை மாவட்டம் ஓய்வூ தியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, மதுரை மண்ட லம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர். சட்ட ஆலோச கர் பீர்முகமது நன்றி கூறி னார்.

    • சோழவந்தான் அருகே சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே ரிஷபம்-சின்ன கண்மாய் வரை சாைல அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதா வது:-

    ரிஷபம் கிராமப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து வருகின்ற னர். விவசாயம் மற்றும் எங்களின் அன்றாட தேவை களுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அறு வடை காலங்களில் அறு வடை செய்யும் நெல்லை களத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமென்றால் ஒரு மூடைக்கு ரூ.200 வரை கூலி கேட்கின்றனர்.

    மேலும் தேங்காய், வாழைக்காய், வாழை இலைகட்டு ஆகியவற்றை ரோடு வசதி இல்லாததால் சுமார் 4 கிலோ மீட்டர் வரை தலைசுமையாக எடுத்து செல்கிறோம். எங்களின் சுமையை போக்க ரிஷபம் சடையாண்டி கோவில் முதல் சின்ன கண்மாய் வரை சாலை அமைத்து தர வேண்டும் என அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்கட்டமாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தை அருகேயுள்ள வேடர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை (வயது 66). மூதாட்டியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருநகர் பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரமாக உறங்கியுள்ளார். இன்று காலையில் பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

    இதுதொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    அதன்படி முதல்கட்டமாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. பதிவான விவரங்களை அடிப்படையாக கொண்டு போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை செய்த போது தனக்கன்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் (32) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்தான் இந்த கொலையை செய்ததாகவும், மூதாட்டியிடம் இருந்த நகையை திருடுவதற்காக அவரை நோட்டமிட்டு இரவில் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதையடுத்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அலக்சை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    நகை மற்றும் பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கொலை செய்த இளைஞரை, சம்பவம் நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

    • மதுரை வழியாக தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • முக்கிய ரெயில் நிலையங்க–ளில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    விடுமுறை கூட்ட நெரி–சலை சமாளிக்க தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவ–தாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    வருகின்ற 11-ந்தேதி துவங்கி 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்ட நெரி–சல் ஏற்படும். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரெயில்வேயின் சார்பில் தாம்பரம்-திருநெல்வேலி தாம்பரம் சிறப்பு விரைவு ரெயில் இயக்க இருப்பதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி வருகின்ற 11-ந்தேதி (06051) தாம்பரத்திலிருந்து சிறப்பு விரைவு ரெயில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணியளவில் திருநெல் ேவலியை சென்றடையும். அதேபோல (06052) திருநெல்வேலியில் இருந்து 12-ந்தேதி மாலை 5.50 மணி அளவில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.10 மணி–யளவில் தாம்பரம் சென்றடையும்.

    இதில் இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி உடைய பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்ப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண் டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • சென்னைக்கு 75 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கம் செய்யப்படுகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழகத்தின் மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமு–கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா–வது:-

    வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினவிழா தொடர் விடுமுறை வரு–வதை முன்னிட்டு வருகிற 11.8.2023 முதல் 15.8.2023 வரை திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல் வேவறு பகுதிகளுக்கு 200 பேருந்துகளும்,

    சென்னையில் இருந்து 11 மற்றும் 12-ந்தேதிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களுக்கு 85 பேருந்துகளும், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினவிழா முடிந்து 15.8.2023 அன்று ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களிலிருந்து சென் னைக்கு 75 சிறப்பு பேருந்து–கள் பயணிகளின் தேவைக் கேற்ப இயக்கம் செய்யப்ப–டுகிறது.

    மேலும் 16.8.2023 அன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டும் மதுரை கோட்ட இயக்க பகுதிகளிலி–ருந்து தாணிப்பாறை சுந்தர மகாலிங்கம் கோவில், இருக் கன்குடி மாரியம்மன் கோவில், மாசாணியம்மன் கோவில், ராமேசுவரம் கோவில் மற்றும் பிற பகு–திகளுக்கு பயணிகளின் தேவைக்கேற்றார்போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளது.

    பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், பயணிகளுக்கு வழிகாட்டவும், சிறப்பு பேருந்துகளை கண்காணிக்க–வும், முக்கிய பேருந்து நிலை–யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்கா–ணிப்பாளர்கள், பணியா–ளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடக்கிறது.
    • தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்.

    திருப்பரங்குன்றம்

    அறுபடை வீடுகளுன் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவிலில் மாதம் தோறும் வரும் கார்த்திகையின் போது சுப்பிரமணிய சுவாமி தங்க–மயில் வாகனத்தில் எழுத்த–ருளி வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை கோலாக–லமாக கொண்டாடப்படும்.

    இன்று ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதி–காலையில் உற்சவர் சன்ன–தியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷே–கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடகி கார்த் திகை மண்டபத்தில் எழுந்த–ருளினார்.

    அங்கு காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுப்பிர–மணிய சுவாமி, தெய்வானை இரவு 7 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தங்க–மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • கூட்டுறவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறுப்பினர் போஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைச்சாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    கடந்த 5 ஆண்டுகளாக ஊதியமின்றி அல்லல் படும் கூட்டுறவு வீட்டு வசதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதற்காக சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை மற்ற சங்கங்களோடு இணைத்து ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும். வீட்டு வசதி சங்கத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் நலிவுற்ற சங்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி ஓய்வு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பொதுப்பணி மாறுதல் திட்டத்தினை வகைபடுத்த வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கிறார்.
    • ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் அம்மா பேரவை யின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானில் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    எடப்பாடியார் தலைமையில் மாநாட்டிற்காக பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லந்தோறும் இலைமலர மரக்கன்று வழங்கியும், மாநாட்டிற்கான விளம்பர லோகோவையும் இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி அம்மா பேரவையின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்யும் வகையில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புரட்சித் தலைவருக்கு பின்பு இந்த இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மா வழி நடத்தினர். அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் என்ன ஆகுமோ? என்ற நினைத்த போது, எடப்பாடியார் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தினார்.

    மதுரை மாநாட்டிற்கு பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது ஒவ்வொரு தொகுதிகளும் மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடியார் கவுரவிக்கிறார்.

    இன்றைக்கு 100 நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார்.

    இந்த மாநாடு மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதல்வராக வரும் கால்கோள் விழாவாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை மத்திய சிறையில் போக்சோ விசாரணை கைதி திடீரென இறந்தார்.
    • சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விருதுநகர மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கொள்ளக் கொண் டான் நக்கனேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தாசையா (வயது62). இவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசா ரணை கைதியாக அடைக்கப் பட்டிருந்தார்.

    கடந்த சில மாதங்களாக தாசையாவுக்கு கிட்னி நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்ற உடல்நிலை மோசமாகவே தாசையா சிறையில் மயங்கி விழுந் தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் சிறை காவலர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாசையா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறை அதிகாரி மகேஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாசையாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்னிபாத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
    • இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கான திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் வருகிற 17-ந்தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுடையவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு 13.10.2023 அன்று நடத்தப்படும். கடந்த ஜூன் 27, 2003 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் டிசம்பர்-27, 2006 அல்லது அதற்கு முன்னர் பிறந்த வர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளை உடை யது. இந்திய விமானப் படையில் 4 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.

    அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை பணியமர்த்தப் பட்டுள்ளனர். 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுதிக்கப்படுவர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×