search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளுடன் இளம்பெண், மாணவி மாயம்
    X

    2 குழந்தைகளுடன் இளம்பெண், மாணவி மாயம்

    • 2 குழந்தைகளுடன் இளம்பெண், மாணவி மாயமானார்கள்.
    • இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே என்.பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி அய்யம்மாள் (வயது26). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் மனைவி அய்யம்மாள் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அய்யம்மாள் அவரது 2 குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து பாஸ்கரன் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கொட்டாம்பட்டி அருகே உள்ள சின்ன கொட்டாம்பட்டி இந்த ஊரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரை தந்தை கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×