search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    X

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • சென்னைக்கு 75 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கம் செய்யப்படுகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழகத்தின் மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமு–கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா–வது:-

    வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினவிழா தொடர் விடுமுறை வரு–வதை முன்னிட்டு வருகிற 11.8.2023 முதல் 15.8.2023 வரை திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல் வேவறு பகுதிகளுக்கு 200 பேருந்துகளும்,

    சென்னையில் இருந்து 11 மற்றும் 12-ந்தேதிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களுக்கு 85 பேருந்துகளும், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினவிழா முடிந்து 15.8.2023 அன்று ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களிலிருந்து சென் னைக்கு 75 சிறப்பு பேருந்து–கள் பயணிகளின் தேவைக் கேற்ப இயக்கம் செய்யப்ப–டுகிறது.

    மேலும் 16.8.2023 அன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டும் மதுரை கோட்ட இயக்க பகுதிகளிலி–ருந்து தாணிப்பாறை சுந்தர மகாலிங்கம் கோவில், இருக் கன்குடி மாரியம்மன் கோவில், மாசாணியம்மன் கோவில், ராமேசுவரம் கோவில் மற்றும் பிற பகு–திகளுக்கு பயணிகளின் தேவைக்கேற்றார்போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளது.

    பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், பயணிகளுக்கு வழிகாட்டவும், சிறப்பு பேருந்துகளை கண்காணிக்க–வும், முக்கிய பேருந்து நிலை–யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்கா–ணிப்பாளர்கள், பணியா–ளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×