என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • இந்திய நாடு ஜனநாயக நாடு நமது ஓட்டு உரிமைக்காக போராடுகிறோம்.
    • பெங்களூரில் பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி எம்பி அவர்கள் வெளிகொண்டு வந்த பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். 

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றில் இந்திய தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக கூறி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் சந்திப்பில் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.


    போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கையெழுத்து இயக்க போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய நாடு ஜனநாயக நாடு நமது ஓட்டு உரிமைக்காக போராடுகிறோம். மத்திய அரசை கண்டித்து இந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்" மத்திய அரசு அவர்களது ஆட்சியை கொண்டு வருவதற்காக சூழ்ச்சிகள் மூலம் ஓட்டு திருத்தத்தை கொண்டு வந்து பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். யார் வெற்றி பெற வேண்டும் யார் தலைவராக வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், ஆனால் முடிவை இந்த அரசு மாற்றுகிறது. இன்று இதனை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மட்டும் தான், இது குறித்து யாரும் பேசுவதில்லை, ராகுல் காந்தி அவர்கள் தான் பீகாரில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து குரல் கொடுத்தார்.

    பெங்களூரில் பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.அதில் அப்பா, அம்மா பெயர்கள் போலியான பெயர்கள் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அறையில் 50, 60 பேர் வாக்களர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது, நாம் தமிழகத்தில் வலிமையாக இருப்பதால் அவர்களது வேலையினை இங்கே செய்ய முடியவில்லை, நாம் ஒவ்வொரு வாக்குகளையும் வாக்காளர் பட்டியல்களையும் சரி பார்க்க வேண்டும்.

    நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள் நாம் விழிப்புணர்வுடன் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும், தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், நாம் எல்லா இடங்களிலும், எல்லா நகரங்களிலும் எல்லா கிராமங்களிலும் விழிப்புணர்வுடன் இருந்து இந்த வாக்கு திருட்டை பொது மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும், எங்கோ வெளியூரில் தான் வாக்கு திருட்டு நடந்துள்ளது.

    நமது ஊரில் நடக்கவில்லை என நினைக்கக் கூடாது. ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் நமது பூத்துகளை வலிமைப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்க வேண்டும், வருகிற தேர்தல் முக்கியமான தேர்தல் நாம் வெற்றிபெற விழிப்புடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கையெழுத்து இயக்க போராட்டத்தில் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொது மக்களிடம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.

    போராட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் செலவில் கொட்டாரத்தில் சமுதாய நலக் கூடம் திறக்கப்பட்டது.


    கொட்டாரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை விஜய் வசந்த் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.


    இந்நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய நலக்கூட கட்டடத்தை விஜய் வசந்த் எம்.பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.    

    • நாகர்கோவில் தபால் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பதிவு தபால்களை அனுப்பி வந்தனர்.
    • பதிவு தபாலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.26 ஆகும்.

    நாகர்கோவில்:

    தொலைபேசி காலத்திற்கு முன்பு மக்கள் பெரும்பாலும் தங்கள் தொடர்புகளை கடித போக்குவரத்திலேயே வைத்திருந்தனர். செல்போன் வந்த பிறகு இந்த கடித போக்குவரத்து முற்றிலும் குறைந்தே போனது. இருப்பினும் தபால் அட்டை, இன்லெண்ட் லெட்டர் போன்றவை அஞ்சலக பயன்பாட்டில் இன்றளவும் உள்ளது.

    அதேநேரம் மக்கள் முக்கியமாக தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தது பதிவு தபால் முறைக்காக தான். முக்கிய தபால்களை இந்த முறையில் தான் அனுப்பி வந்தனர். இந்த வகை தபால்கள் பாதுகாப்பானது என்பதோடு அதற்கான ஒப்புதல் பதிவு கார்டு (அக்னாலட்ஜ்மென்ட் கார்டு) வைத்து அனுப்பும் போது தபாலை பெற்றுக் கொண்டவரின் கையொப்பத்துடன் பதிவு கார்டு தபால் அனுப்பியவருக்கு திரும்ப வரும்.

    எனவே பதிவு தபால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தொடர்புக்கும், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு முக்கிய ஆவணங்கள் அனுப்புவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. திருமண மற்றும் சுப நிகழ்ச்சிக்கான அழைப்புகளையும் பதிவு தபாலில் பலர் அனுப்பி வந்தனர். இந்த முறைக்கான கட்டணமும் குறைவு என்பதால் பலரும் இந்த பதிவு தபால் முறையில் தங்களது முக்கிய ஆவணங்கள், புகார்கள் போன்றவற்றை அனுப்பி வந்தனர்.

    இந்த நிலையில் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் தபால் துறை விரைவு தபால் முறையை அமல்படுத்தியது. இது பதிவு தபால் முறையை போன்றது என்றாலும், இந்த முறையில் தபால் அனுப்பினால் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் பொருளின் எடைக்கு தகுந்தவாறும், அனுப்பப்படும் ஊருக்கு தகுந்தவாறும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

    உள்ளூருக்குள் விரைவு தபாலை அனுப்ப வேண்டும் என்றாலும் கட்டணங்கள் அதிகம் என்பதால், விரைவு தபால் முறையை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அவர்கள் பதிவு தபால் முறையை தான் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் பதிவு தபால் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்தே இதனை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கையில் எடுத்தது.

    ஆனால் அதற்கான முறையான உத்தரவை வழங்காமல் பரீட்சார்த்த முறையில் தகவல்களை மட்டும் வழங்கியது. இந்த சூழலில் தற்போது பதிவு தபால் முறையை நிறுத்துவதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் பதிவு தபால் வசதி ரத்து செய்யப்பட்டு விட்டது. அரசின் இந்த முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில் தபால் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பதிவு தபால்களை அனுப்பி வந்தனர். பதிவு தபாலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.26 ஆகும். ஆனால் தற்போது விரைவு தபால் முறையில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.41 ஆக உள்ளது. இது தபாலின் எடை மற்றும் அனுப்பும் தூரம் ஆகியவற்றுக்கு ஏற்றாற் போல் அதிகரிக்கிறது. சாதாரண தபாலுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    விரைவு தபால்கள் அனுப்புவதற்கு கட்டணம் அதிகம் என்பதால் இந்த முறையை மாற்றி, பதிவு தபால் முறையை மீண்டும் மத்திய அரசு கொண்டுவர வேண்டம் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசின் விரைவு தபால் முடிவு, தபால் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலாக அமையும் என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் என பல தரப்பினருக்கும் பயனுள்ள பதிவு தபால் முறையை முடக்கியது தவறு. அதனை மீண்டும் கொண்டு வந்து மக்கள் நலனை காக்க வேண்டும் என மத்திய அரசை சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கலையரங்கம் மற்றும் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சியானது 15 வார்டுகளை கொண்டது. இதில் ஆறாவது வார்டு பத்மநாபன்புதூர் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து நிதியிலிருந்து பொது கலையரங்கம் கட்டப்பட்டது,

    இந்நிலையில் தற்போது நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறையினர் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கலையரங்கம் மற்றும் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது எனக் கூறி அதை இடிப்பதற்காக முடிவு எடுத்துள்ளனர், மேலும் இந்த தொடர்பாக நீதிமன்றமும் இடிக்க உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது, அந்த உத்தரவை அமல்படுத்த இன்று அதிகாரிகள் பத்மநாபன்புதூர் பகுதிக்கு ஜெசிபி எந்திரத்துடன் வந்து இடிக்க முற்பட்டனர்.

     

    இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் திரண்டு இடிக்க விட மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் அப்போது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் தருவதாக தெரிவித்தனர்.

    ஆனால் அதனை ஏற்கமறுத்து ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், மக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது நீதிமன்றமே உத்தரவிட்டாலும் மக்களின் விருப்பமில்லாமல் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என வாதிட்டனர். ஊர் மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி அவர்களை தொடர்பு கொண்டு நிலைமை எடுத்து கூறினர்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார், பின்னர் விஜய்வசந்த் எம்பி, நீர்வள துறை செயல் பொறியாளர் (பொறுப்பு) பிரைட் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விஜய் வசந்த் எம்பி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வள துறை அதிகாரிகள், நீர் பாசனதுறை தலைவர் ஆகியோருடன் பேசி ஆய்வு செய்து மக்களுக்கு பயன் உள்ள நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியது.

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கடும் வெயில் நிலவி வந்தது. அதே சமயத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. அந்த வகையில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றே கூறலாம். இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. மேலும் கனமழை பெய்யாததால் கரையோர பயிர்களான வாழை, அன்னாசி, தென்னை போன்றவை ஒரு சில இடங்களில் வாடிய நிலையில் காணப்பட்டன.

    இந்தநிலையில் தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    இந்த மழை நேற்று அதிகாலை முதல் பலத்த மழையாக பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்வரத்து பகுதி மற்றும் களியல், திற்பரப்பு, குலசேகரம், பாலமோர், சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடித்தது. மதியம் முதல் கனமழையாக வெளுத்து வாங்கிய நிலையில் விடிய விடிய நீடித்தது.

    இந்நிலையில் கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் மழை நீடித்தது. நாகர்கோவில் நகரில் அதிகாலை முதலிலேயே பரவலாக மழை பெய்து வருகிறது.

    பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. காலையில் இருந்தே மழை பெய்து வருவதால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசி வருகிறது.

    மயிலாடி, தக்கலை, இரணியல், அடையாமடை, ஆணைக்கிடங்கு, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    சிற்றாறு-1 அணை பகுதியில் அதிகபட்சமாக 31.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலை யோர பகுதியிலும், அணைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.27 அடியாக இருந்தது. அணைக்கு 672 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 764 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 54 அடியாக இருந்தது. அணைக்கு 208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 385 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 30.4, பெருஞ்சாணி 21, சிற்றார் 1-31.4, சிற்றார் 2-8.2, மயிலாடி 4.2, நாகர்கோவில் 11.6, கன்னிமார் 2.4, ஆரல்வாய்மொழி 3.4, பூதப்பாண்டி 3.6, புத்தன்அணை 8.6, பாலமோர் 22.4, தக்கலை 8.2, குளச்சல் 14, இரணியல் 13.2, அடையாமடை 14.2, குருந்தன்கோடு 4.2, கோழிபோர்விளை 12.2, மாம்பழத்துறையாறு 11, ஆணைக்கிடங்கு 10.6, களியல் 6, குழித்துறை 8.8, சுருளோடு 21.4, திற்பரப்பு 12.2, முள்ளங்கினாவிளை 17.2.

    • நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
    • பணிகள்2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரையிலான நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    இதுவரை 56% பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த  பணிகள்2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  குமரி மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளை ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் TTK கன்ஸ்ட்ரக்ஷன் ஆன்ஸ்ட்ராஜ், நகாய் ரவிச்சந்திரன் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

     

    பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை கூடிய விரைவில் அர்ப்பணிக்க ஆவன செய்ய அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    நீர்ப்பாசன கால்வாய்கள் உள்ள பகுதிகளில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை, தண்ணீர் வரும் பகுதிகள் அடைக்க படுவதாக மனுக்கள் வந்துள்ளன, விவசாயத்துக்கு எந்த வித இடர்பாடுகள் வராமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    அவருடன் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கிறிஸ்டிரமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார்.
    • விஜய் பேசுவதற்கான இடத்திற்கு அனுமதி கேட்டு போலீசில் மனு அளித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    அவர் தனது சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார். அங்கு விஜய்யின் சுற்றுப் பயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பிரசாரத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    அது மட்டுமின்றி முதல் நாள் பிரசாரத்தின்போது திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திலும் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இரவு நேரமாகி விட்டதால் பெரம்பலூர் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அந்த மாவட்டத்திற்கு பிரசாரம் செய்ய செல்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.

    சுற்றுப்பயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 2 மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்வதென்று விஜய் முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

    குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் (அக்டோபர்) 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார். அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகை தரும் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு விஜய் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லை பகுதியில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    குமரி மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட குழித்துறை சந்திப்பு, மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அழகிய மண்டபம் சந்திப்பு பகுதிகளில் விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நாகர்கோவில் மாநகர பகுதியில் விஜய் பேசுவதற்கான இடத்திற்கு அனுமதி கேட்டு போலீசில் மனு அளித்துள்ளனர்.

    டெரிக் சந்திப்பு, செட்டி குளம் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, நாகராஜா கோவில் திடல் பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் விஜய் தனது சுற்றுப்பயணத்தின்போது 3 இடங்களில் பேசுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

    போலீசார் எந்த இடத்தில் பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்குகிறார்களோ அந்த இடத்தில் விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கும், அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.

    • உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான்.
    • தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும்.

    நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

     

    கையெழுத்து இயக்கத்தை விஜய்வசந்த் எம்பி தொடங்கி பேசுகையில், உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான், மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்து இருப்பது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்க வேண்டும். பா.ஜ.க.வினர் பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி காண நினைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும். மேலும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவிப்பின்படி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்துகள் வாங்கிடவேண்டும் என்றார்.

     

    இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மகேஷ் லாசர், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ், மண்டல தலைவர்கள் சிவபிரபு, ஐரின் சேகர், மகளிரணி சோனிவிதுலா, கவுன்சிலர்கள் சந்தியா, அனுஷாபிரைட் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக தெரிகிறது.
    • ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் (வயது 29). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருவட்டார் பகுதியை சேர்ந்த ஆனந்த் (26) என்பவர் பெயிண்டிங் வேலைக்கு வந்தார். அப்போது அவருடன் ஆனந்துக்கு நட்பு ஏற்பட்டது. அதே சமயத்தில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசரின் தாயார் ரெஜி (63) உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருடைய தாயார் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்கான காரணத்தை கேட்ட போது, கழிவறையில் தான் திடீரென மயங்கியதாகவும், பிறகு கண் விழித்த போது தான் அணிந்திருந்த நகை, கம்மல் உள்பட 11 பவுன் நகையை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உடனே இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் நகை பறித்தது, ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் பி.இ. படித்து விட்டு அதற்குரிய வேலை கிடைக்காமல் இருந்ததால் பெயிண்டிங் வேலை செய்து வந்தேன். ஒரு பெண்ணை காதலித்தேன். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் போதுமான பணம் இல்லை. இந்தநிலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டிற்கு சென்றபோது அவரது தாயார் கழிவறையில் மயங்கி கிடந்தார். மேலும் நகை, கம்மல் அணிந்திருந்தார். இதனை பார்த்ததும் எனது எண்ணம் தவறான பாதைக்கு மாறியது. அந்த நகையை பறித்து காதலிக்கு கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி 11 பவுன் நகையை பறித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தேன். ஆனால் போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டார்.

    • ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர்.
    • விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறினர்.

    நாகர்கோவில்:

    ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை கண்டறிய, அவர்களது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் செல்போன் மூலம் யார் யாருடன் பேசினார்கள்? சமூக வலைதளங்களில் யாரையெல்லாம் பின் தொடர்ந்தனர்? மேலும் யாரெல்லாம் கைதானவர்களை பின் தொடர்ந்தார்கள்? என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்தது.

    அப்போது கைதான ஒருவருடன் குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் வாலிபரின் வீட்டை கண்டறிந்து சோதனை நடத்த அங்கு சென்றனர். ஆனால் அந்த வாலிபர் வீட்டில் இல்லை.

    அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர். வாலிபரை பற்றி அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது மகன் வேலை விஷயமாக சென்னை சென்றிருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை 9 மணி வரை நடைபெற்றது.

    அப்போது வாலிபர் குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வாலிபரின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • அரசியல் நிலையின் போக்கை மாற்றி அமைத்த ஒரு பேராளுமையாக இருக்க கூடியவர் தான் அண்ணா.
    • கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க.துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள், தி.மு.க. வை, த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து தாக்கி பேசி வருவதாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    புதிதாக யார்அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று. அதனால் தான் அவர்கள் எப்போதும் எங்களை விமர்சிப்பார்கள்

    தமிழகத்தின் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக, தமிழகத்தின் சிந்தனை போக்கை அரசியல் நிலையின் போக்கை மாற்றி அமைத்த ஒரு பேராளுமையாக இருக்க கூடியவர் தான் அண்ணா. அவரது கருத்துக்களின் வழி நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி தி.மு.க. ஆட்சியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
    • ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

    விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

    இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

    இந்நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

    திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியலால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×