என் மலர்
நீங்கள் தேடியது "தோவாளை மலர் சந்தை"
- பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
- நாளை முகூர்த்த நாள் என்பதால் தோவாளை சந்தையில் பூக்கள் வாங்க இன்று ஏராளமானோர் குவிந்தனர்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு, ஆவரைகுளம் பகுதிகளில் இருந்து பிச்சிப் பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன.
பெங்களூரூ, ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், சேலத்து அரளி போன்ற பூக்களும், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, அம்பை, தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி, மரிக்கொழுந்து போன்ற பூக்களும் விற்பனைக்கு வருகின்றன.
மேலும் ஆரல்வாய் மொழி, செண்பகராமன் புதூர், தோவாளை, ராமநாயக்கன் புதூர், தோப்பூர், குமாரபுரம் பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இந்த சந்தையில் பண்டிகை மற்றும் முகூர்த்த நேரங்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அதன்படி நாளை (30-ந் தேதி) முகூர்த்த நாள் என்பதால், தோவாளை சந்தையில் பூக்கள் வாங்க இன்று ஏராளமானோர் குவிந்தனர். இதன் காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை இன்று அதிகரித்து காணப்பட்டது.
ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.5 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அரளி பூ ரூ.200, சம்பங்கி ரூ.400, மஞ்சள் கிரேந்தி ரூ.80, சிகப்பு கிரேந்தி ரூ.90, பட்டர் ரோஸ் ரூ.240, ரோஜா ஒரு பாக்கெட் ரூ.40-க்கு விற்கப்பட்டது.
கனகாம்பரம் கிலோ ரூ.400, முல்லைப்பூ ரூ.1500, தாமரை ரூ.20, கோழிக்கொண்டை ரூ.80, துளசி ரூ.40, பச்சை ரூ.10, மரிக்கொழுந்து ரூ.140.
- பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு
- சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூ வருகின்றன.
ஆரல்வாய்மொழி :
குமரி மாவட்டம் தோவா ளையில் புகழ்பெற்ற பூ சந்தை உள்ளது. இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி, ராதாபுரம், குமாரபுரம், ஆவரைகுளம், பழவூர் ஆகிய ஊரிலிருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், நெல்லை மாவட்டம் திருக்கண்ணங்குடி, அம்பாச முத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊரிலிருந்து பச்சை துளசியும், தோவாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூ வருகின்றன.
தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.600-க்கும், அரளி, ரோஸ் ரூ.150-க்கும், கிரேந்தி ரூ.80-க்கும், மஞ்சள் கிரோந்தி ரூ.85-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படு கிறது.
இதே பனிப்பொழிவு நீடிக்கும் என்றால் பூக்கள் விலை இதை விட அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது.






