search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thovalai flower market"

    • வியாபாரிகள் பிச்சி, மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கினார்கள்.
    • மல்லிகைப்பூ கிலோ ரூ. 300-க்கு விற்கப்பட்ட வந்த நிலையில் இன்று ரூ.600 ஆக உயர்ந்திருந்தது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், ராதாபுரம், மாடநாடான் குடியிருப்பு, புதியம்புத்தூர் பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    மேலும் கோவில்பட்டி, மானாமதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக வருகிறது. சேலம், பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து அரளி, மஞ்சள் கேந்தி பூக்களும், தென்காசி பகுதியில் இருந்து பச்சை துளசி பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்களை வாங்குவதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று குறைவாக காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சுபமுகூர்த்தம் என்பதால் தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்குவதற்கு காலையிலேயே கூட்டம் அலைமோதியது. வியாபாரிகள் பிச்சி, மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது.

    பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று இரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ. 1110-க்கு விற்கப்பட்டது. மல்லிகைப்பூ கிலோ ரூ. 300-க்கு விற்கப்பட்ட வந்த நிலையில் இன்று ரூ.600 ஆக உயர்ந்திருந்தது. இதே போல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அரளிப்பூ கிலோ ரூ130, சம்பங்கி ரூ. 300, கேந்தி ரூ.80, மஞ்சள்கேந்தி ரூ.90, வாடாமல்லி ரூ. 60, பட்டன் ரோஸ் ரூ.160, துளசி ரூ.30, கனகாம்பரம் ரூ.300-க்கு விற்கப்பட்டது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைவாகவே காணப்பட்டது. இதனால் பூக்கள் பறிப்பதற்கு ஆன செலவு மற்றும் கூலியை விட குறைவான அளவில் வருமானம் கிடைத்து வந்தது. இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு பல மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வார்கள். இங்கு முக்கிய விசேஷ நாட்களில் பூக்களின் விலை உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைந்தும் காணப்படும்.

    இந்தநிலையில் நேற்று மார்க்ெகட்டில் மல்லிகை பூவின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ரூ.800-க்கு விற்பனையான மல்லிகை நேற்று ரூ.200 உயர்ந்து ரூ.1000-க்கு விற்பனையானது. இன்று (செவ்வாய்கிழமை) கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்தது.

    மார்க்கெட்டில் விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    அரளி ரூ.170, பிச்சி ரூ.400, முல்லை ரூ.350, சம்பங்கி ரூ.125, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.40, தாமரை(100 எண்ணம்) ரூ.2000, கோழிபூ ரூ.60, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் பாக்கெட்(100 எண்ணம்)ரூ.40, பட்டன் ரோஸ் ரூ.160, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு)ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.75, சிவப்பு கேந்தி ரூ.80, சிவந்தி மஞ்சள் ரூ.100, சிவந்தி வெள்ளை ரூ.250, கொழுந்து ரூ.80, மரிக்கொழுந்து ரூ.120.
    தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு ரூ.1700 அதிகரித்துள்ளது. #Jasmine
    நாகர்கோவில்:

    தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல விதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    பழவூர், ஆவரைக்குளம், அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் இருந்து மல்லிகைப்பூ தோவாளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூ உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூவும் குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1100-க்கு விற்பனையானது. இன்று ஒரு கிலோ ரூ.1700-க்கு விற்பனையானது.

    ரூ.750-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.850 ஆக உயர்ந்திருந்தது. அதேபோல ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600 ஆக இருந்தது. சம்பங்கி ரூ.50, மஞ்சகேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, செவ்வந்தி ரூ.100, கொழுந்து ரூ.150, வாடாமல்லி ரூ.60, கோழிப்பூ ரூ.60 ஆக விற்பனையானது.

    ரூ.5-க்கு விற்பனையான தாமரைப்பூ இன்று ரூ.10 ஆக விற்கப்பட்டது.

    புத்தாண்டு மற்றும் திருமண நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. #Jasmine
    தோவாளை மார்க்கெட்டில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 60 டன் பூக்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பூக்கள் விற்பனை பாதியாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். #OnamFestival
    ஆரல்வாய்மொழி:

    தோவாளையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு குமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து பலவிதமான மலர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கு வண்ண, வண்ண மலர்கள் வருகை தருகிறது.

    தோவாளை மார்க்கெட்டில் இருந்து அதிக அளவு பூக்கள் கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான ஓணத்தின்போது இங்கிருந்து கேரள வியாபாரிகள் பூக்களை போட்டிப்போட்டு வாங்கிச் செல்வார்கள்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கேரளாவில் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய பூக்கள் விற்பனை நடைபெற்றது. இதற்காக தோவாளை மார்க்கெட் நேற்று இரவு 8 மணிக்கே செயல்பட தொடங்கியது. மார்க்கெட் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள சாலையின் இரு புறங்களிலும் பூ வியாபாரிகள் பலவித பூக்களை குவித்து வைத்து விற்பனை செய்தனர். இரவு ஒரு மணி வரை மிகவும் குறைந்த அளவு பூக்களே விற்பனை ஆனது.

    இந்த ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத மழை காரணமாக அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு அரசு சார்பில் நடைபெறும் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வராததால் ஓணம் கொண்டாட்டம் களை இழந்தே காணப்படுகிறது.

    ஓணத்தையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நடந்த காட்சி.

    இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.

    நள்ளிரவு 1 மணிக்கு பிறகே தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. இங்கு இருந்து பூக்களை டெம்போக்களில் ஏற்றி வியாபாரிகள் கொண்டு சென்றனர். நாகர்கோவில் உள்பட குமரி மாவட்டத்தின் பல்வேறு தனியார் பள்ளி, கல்லூரிகள் சார்பிலும் ஓணம் அத்தப்பூ கோலத்திற்காக அதிகளவு வண்ண மலர்கள் வாங்கிச் செல்லப்பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 60 டன் பூக்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பூக்கள் விற்பனை பாதியாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தோவளை மார்க்கெட்டில் இன்று பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சிப்பூ கிலோ ரூ.750-க்கும், மல்லிப்பூ கிலோ ரூ.500-க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டு பிச்சிப் பூ ரூ.1,250-க்கும், மல்லிப் பூ ரூ.1000-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    மற்ற பூக்கள் விலை இரவில் குறைந்தும், அதிகாலையில் உயர்ந்தும் காணப்பட்டது. ஒரு கிலோ வாடாமல்லி இரவு ரூ.70-க்கு விற்பனையானது. இன்று அதிகாலையில் பலமடங்கு விலை உயர்ந்து ரூ.400-க்கு விற்பனையானது. அதே போல ரோஜாப்பூ இரவில் ரூ.150-க்கு விற்கப்பட்டது இன்று அதிகாலையில் ரூ.300 ஆக உயர்ந்தது. சேலம் அரளி ரூ.200-க்கு இரவில் விற்பனை செய்யப்பட்டது அதிகாலையில் ரூ.300 ஆக அதிகரித்தது. மஞ்சள் கேந்தி ரூ.40, சிவப்பு கேந்தி ரூ.60, செவ்வந்தி ரூ.300, பட்டன் ரோஜா ரூ.300, சம்மங்கி ரூ.150, கோழிக்கொண்டை பூ ரூ.80, துளசி ரூ.50-க்கு விற்பனையானது.  #OnamFestival




    ×