என் மலர்
ஈரோடு
ஈரோடு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறையை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத் தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழ்ந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
ஸ்டெர்லெட் ஆலையை மூட வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசையும், காவல்துறையை கண்டித்தும் முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி நின்றிருந்தனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் மாதையன், மாநகர மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே ஒன்றாக திரண்டனர். பின்னர் போலீசாரை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியவாறு வந்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் டீச்சர் காலனி பிரிவில் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் பெருந்துறைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் அமைந்திருந்த 230 அடி நீளமுள்ள கறிகோழிப் பண்ணை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் வளர்க்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிகோழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்தது.
இதே பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தோட்டங்களில் பட்டுப்புழு வளர்ப்புக்காக விவசாயிகள் அமைந்திருந்த கொட்டகைகளின் மேற்கூரைகள் சூறாவளி காற்றினால் பறந்து பலந்த சேதம் அடைந்தது.
கடுக்காம் பாளையம், பொம்ம நாயக்கன் பாளையம், ஒத்தக்குதிரை, கூகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பொலவ்வாளி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி கட்டிடத்தின் மீது அருகில் இருந்த மரங்கள் விழுந்ததில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
மேலும் சூறாவளி காற்றால் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரங்கள் சாய்ந்ததால் மின் கம்பங்கள் உடைந்து மின்கம்பிகள் அறுந்துள்ளதால் குள்ளம்பாளையம், பொலவக்காளிபாளையம் தாசம்பாளையம், ஒத்தக்குதிரை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தது. பல கிராமங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
இதே போன்று சென்னிமலை, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், கொடிவேரி, மொடக்குறிச்சி போன்ற பகுதியில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-
வரட்டுப்பள்ளம் -27.2
அம்மாபேட்டை -22.4
பவானிசாகர் -11.2
நம்பியூர் -4.8
பெருந்துறை -2.1
ஈரோடு -2
பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீரின் மட்டம் 50.24 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 673 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதைகண்டித்து தமிழ்நாடு முழுவதும் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரையும் அரசையும் கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி பஸ் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும்,போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பேரணி நடத்திய பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஈரோடு:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை புரட்சிக்கர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயப் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, மாநகர செயலாளர் அம்ஜத் கான், செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக், சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் சூரம்பட்டி நால் ரோட்டில் அருந்ததியர் விடுதலை இயக்கம் சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.
சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரே அந்த கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதனால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சத்தியமங்கலம் போலீசார் ஸ்டாலின் குணசேகரன் உள்பட 32 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் பொது நல அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறையில் நேற்று மாலை புதிய பஸ் நிலையம் எதிரே அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சிகளின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. நகர துணை செயலாளர் செல்வராஜ் விடுதலை கட்சி சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் பா.ம.க நகர நிர்வாகி அலெக்சாண்டர் தமிழ்புலிகள் கட்சியின் பெருந்துறை ஒன்றிய செயலாளர் கார்த்திக் ஆதி தமிழர் கட்சி சுரேஷ் விடுதலை வேங்கை கட்சியின் மாவட்ட செயலாளர் அழகர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “இது தமிழர் நாடு தமிழர் நாடு .. தமிழர் நாடு ...கார்ப்பரேட் நிறுவனமே வெளியேறு..” “கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. அப்பாவி மக்களை கொன்று ஒழித்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்..” “இது மக்கள் அரசா மக்களை கொல்லும் அரசா?” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே புரட்சி கர இளைஞர் முன்னணி இயக்கம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டு கோஷங்களை முழங்கினார்கள்.
இந்த ஊருக்குள் எப்போதாவது காட்டுபன்றி, யானை, மான் போன்ற வன விலங்குகள் புகும். கடந்த 3 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் ஒற்றை யானை ஒன்று குய்யனூர் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.
இன்று அதிகாலையும் அந்த ஒற்றையானை குய்யனூர் பிரிவில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு இருந்த விவசாய பயிர்களை சாப்பிட்டு விட்டு ஊருக்குள் சுற்றி திரிந்தது. அதன்பிறகு அந்த யானை எந்த பகுதிக்குள் நுழைந்தது? என்று தெரியவில்லை.
கடந்த 3 நாட்களாக அந்த ஒற்றையானை எந்த ஊருக்குள் புகுந்து விடுமோ... என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவில் ஊர் இளைஞர்கள் முழித்துக் கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே வனத்துறையினர் ஊருக்குள் புகும் ஒற்றை யானையை மீண்டும் நுழைய விடாமல் தடுத்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டுவிட வேண்டும்என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து மக்களையும், விவசாயிகளையும் மகிழ்வித்து வருகிறது.
பகலில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் மாலை 5 மணிக்கு மேல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்து வெயிலை விரட்டியடித்து விட்டு மழை பெய்த வருகிறது. நேற்றும் பகலில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் மாலையில் அந்த வெயில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
மாலை 6 மணிக்கு மேல் ஈரோடு மாவட்டம் முழுவதும் லேசாக பெய்யத் தொடங்கிய மழை இரவில் வெளுத்து வாங்கியது. கடும் சூறைக்காற்றுடன் பலத்த இடி-மின்னலுடன் பொது மக்களை பயமுறுத்தியபடி இந்த மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மொடச்சூர், பாரியூர், கொளப்பலூர், ஒத்தக்குதிரை, கரட்டடிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு 8.15 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 9.45 மணி வரை கொட்டி தீர்த்தது.
கோபி பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 71 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதே சமயம் கோபியில் சூறைக்காற்று வீசவில்லை. இடி-மின்னலுடன் மழை கொட்டியது.
ஈரோட்டில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் சுழட்டி... சுழட்டி... காற்று அடித்து கன மழை பெய்தது. பலத்த காற்றால் பன்னீர்செல்வம் பார்க், மேட்டூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, கொல்லம்பாளையம் ரவுண்டானா, கரூர் பைபாஸ் ரோடு உள்பட முக்கிய இடங்களில் உள்ள விளம்பர பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் என எதையும் காற்று விட்டு வைக்கவில்லை. அனைத்தும் தூக்கி வீசப்பட்டன.
ஈரோடு கருங்கல்பாளையம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோட்டில் உள்ள பெரிய பெரிய விளம்பர பேனர்கள் காற்றில் பறந்து உயரழுத்த மின் பாதை கம்பியில் விழுந்தன. இதனால் ஈரோடு நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
பொதுமக்கள் பலர் தங்கள் தூக்கத்தை இழந்தனர். பல இடங்களில் மின்சாரம் விட்டு விட்டு வந்தது. ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது.
ஈரோடு சி.எம்.சி. கல்லூரி மைதானத்தில் பலத்த காற்றுக்கு ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. பெருந்துறை ரோடு குமலன்குட்டையில் ஒரு மரம் முறிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன.
கலெக்டர் அலுவலகம் அருகில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஓ. காலனி, கொல்லம் பாளையம், வாய்க்கால் மேடு, ஆனைக்கல்பாளையம் உள்பட ஈரோடு நகர பகுதிகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன.
மேலும் ஈரோட்டில் கொல்லம்பாளையம் ரவுண்டானா பகுதியில் 5-க்கும் மேற்பட்ட டெலிபோன்கம் பங்கள் சாய்ந்தன. இதனால் டெலிபோன் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மின்கம்பி தொங்கியதால் மெதுவாக ஊர்ந்து வந்தன.
கொல்லம்பாளையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் பெரிய கம்பால் தொங்கிய மின் கம்பிகளை உயரே தூக்கி பிடித்து வாகனங்களுக்கு உதவி செய்தனர். இதே போல் மின் கம்பங்களும் சாய்ந்தன.
மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்த இடங்களில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விடிய விடிய ரோட்டில் முறிந்து விழுந்த மரங்களை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். ஈரோடு நகரில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, அரச்சலூர், கொடுமுடி உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கோடை மழை கொட்டி தீர்த்தது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள முருகன் புதூர் பவளமலை முருகன் கோவிலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் சாலையை புதுப்பிக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங் கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எனது தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், வெள்ளாங்கோவில், மொடச்சூர், நம்பியூர் ஆகிய பள்ளிகள் உள்பட 12 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் கட்டாயப்படுத்தி சேர்க்க முடியாது. அவர்களே அக்கறை எடுத்து அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
அரசு பள்ளிகளில் யாருக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்பு திட்டங்கள் கிடையாது. மாணவர்களை ஊக்குகிற வகையில் அரசு சார்பில் தற்போது 14 பொருட்கள் தனியார் பள்ளிகளில் வழங்காத அளவுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளில் ‘‘ஸ்மார்ட்’’ வகுப்பறைகள் தொடங்கப்படுகிறது.
ரூ.468 கோடி செலவில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையதள வசதியுடன் கனிணி கல்வியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதெல்லாம் தனியாரை மிஞ்சும் அளவுக்கு அவர்களுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தரும் அளவுக்கு பணிகள் நடந்து வருகிறது.
இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.
விழாவில் சத்தியபாமா எம்.பி., கோட்டாட்சியர் கோவிந்தராஜன், தாசில்தார் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பு.புளியம்பட்டி, மே.21-
புஞ்சை புளியம்பட்டி அருகே பவானிசாகர் ரோட்டில் தாசம்பாளையம் காலனி உள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ளன.
இந்த பகுதி மக்களுக்கு பவானிசாகர்-தொட்டம்பா ளையம் கூட்டு குடிநீர் திட் டத்தின் கீழ் குடிநீர் வழங்கப் படுகிறது. ஆனால் சீரான குடிநீர் விநியோகம் இல்லா மல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்களாம்.
இந்த பகுதி மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் தண்ணீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப் பட்டது. 6 வருடம் ஆகியும் அந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகிக்கப் படவில்லை.இதனால் மக்களுக்கு சீரான விநியோகம் கிடைக்க வில்லை. இது குறித்து பல முறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே அந்த பகுதி மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 7.30 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி- பவா னிசாகர் ரோட்டில் தாசம் பாளையம் காலனியில் குவிந்தனர்.
காலி குடங்களுடன் வந் திருந்த அவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புஞ்சைபுளிம்பட்டியில் இருந்து பவானிசாகருக்கு செல்லும் மெயின் ரோட்டில் இந்த சாலைமறியல் போராட் டம் நடந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரோட்டில் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரி யவந்தது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மறி யல் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்யும் நட வடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி மாற்று வழி யில் வாகனங்கள் இயக்க நட வடிக்கை எடுக்கப்பட்ட.து. இதற்கிடையே பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் அங்கு வந் தார்.
போலீசாருடன் இணைந்து அவர் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். * * * பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நசலச்சங்கத்தின் 3-வது மாநில மாநாடு மற்றும் புதிய கட்சி தொடக்க விழா ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்தது. மாநாட்டுக்கு சங்க மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாநாட்டில் புதிய திராவிட கழகம் என்கிற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
மாநாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-
புதிய திராவிட கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கி இருப்பதே , வருங்கால தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலம் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக பதவியில் அமர்த்தியவர் சசிகலா தான்.
தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர அவர் காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது.
கடந்த 15-ந் தேதி கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவு வந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் எழுதினார். அதில் தென்னிந்தியாவில் பா.ஜ.க. மலர கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதில் இருந்தே அவர் துரோகத்தை ஒப்பு கொண்டு உள்ளார்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், பகல் கனவு காண்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்லுவது, வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
காரணம் மக்கள், குறிப்பாக தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்று கூட நான் எடப்பாடிக்கு சென்ற போது அங்குள்ள பொதுமக்கள், பெரியவர்கள் தமிழகத்தில் இன்று நடக்கும் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றனர். இந்த மாநாடு நடத்த பல்வேறு தடைகள் வந்தது. அதை தாண்டி தான் நடந்து வருகிறது.
அதன் பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-
கர்நாடகாவில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுபோல் எங்களது கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது மக்களாட்சி அமையும்.
கமல்ஹாசன் மாற்றத்தை கொண்டு வருவேன் என்கிறார். அவரால் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும். மக்கள் தானே மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #opanneerselvam






