என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள சில்லாங்கட்டு புதூர் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான லாரி சென்று கொண்டிருந்தது.

    லாரி பழுது காரணமாக ஈரோட்டில் உள்ள பட்டறையில் பழுது நீக்கி விட்டு ஓட்டுநர் வேலுச்சாமி (42 ) என்பவர் லாரியை ஈரோட்டில் இருந்து அரச்சலூர் அருகே உள்ள வடபழனி செட்டிக்கு கொண்டு சென்ற போது, சில்லாங்கட்டபுதூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென லாரியிலிருந்து புகை வெளியேறியது. இதனால் ஓட்டுநர் வேலுச்சாமி லாரியை அப்படியே நிறுத்தி இறங்கிப் பார்த்தார். சற்று நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது. நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து சென்னிமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. நல்ல வாய்ப்பாக டிரைவர் லாரிய விட்டு இறங்கியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    • சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
    • 62 மதுபாட்டில்கள் பறிமுதல்

    ஈரோடு, 

    பவானி சாகர் போலீசார் புங்கார் காலனி, பவானிசாகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். பின்னர் அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தனபால் (வயது 50) என்பதும், அவர் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சென்னிமலை பகுதியை சேர்ந்த பழனிசாமி (62) என்பவர் அப்பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 17 மதுபாட்டில்களை சென்னிமலை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் பழனிசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோபி குப்பைமேடு டாஸ்மாக் அருகே திருட்டு தனமாக மது விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் முத்துராலிங்கம் (37), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாலு (39) ஆகிேயார் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்களிடமிருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபால் (44) என்பவர் முளவாய்க்கால் டாஸ்மாக் அருகே திருட்டு தனமாக மது விற்று கொண்டிருந்தார். அவரை கடத்தூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கெட்டிசெவியூர் சந்தைகடை அருகே சட்ட விரோதமாக மது விற்ற அக்கரைபாளையம் பழனிசாமி (49) என்பவரை சிறுவளூர் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காஞ்சிவாணன் (34) தசப்பகவுண்டன்பதூர் அருகே சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த குற்றத்திற்காக பங்களாபதூர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். வடுகல்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து (57) என்பவர் அவரது தோட்டத்தில் தடைசெய்யபட்ட மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்தார். இதையடுத்து வரபாளையம் போலீசார் நாச்சிமுத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு ஊர்காவல் படையில் தேர்வான 47 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது
    • பணி ஆணை பெற்ற 47 பேரும் ஊர்காவல் படை பிரிவில் இன்று முதல் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு, கோவில் பந்தவஸ்து உள்ளிட்ட பல்வேறு பணி களில் ஊர்காவல் படையி னர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி ஆகிய இடங்களில் ஊர்க்காவல் படை பிரிவு இயங்கி வருகிறது. ஊர்காவல் படை பிரிவில் காலியாக இருந்த 65 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோர ப்பட்டு, அதில் விண்ண ப்பித்த தகுதியான 9 பெண்கள் உட்பட 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சான்று, உடற்தகுதி சான்று உள்ளிட்ட பல்வேறு பரிசோ தனைகள் செய்யப்பட்டு, இறுதியாக சான்றிதழ் சரிபார்க்க ப்பட்டது.

    இதையடுத்து 47 பேருக்கும் ஈரோடு ஆணைக்கல்பா ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஊர்காவல் படையினரின் விதிகள், பணியாற்றும் விதம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கட்டளைகளை ஏற்பது, பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவது குறித்து விளக்கமும் அளிக்கப்ப ட்டது. இந்த பயிற்சியை நிறைவு செய்த 9 பெண்கள் உட்பட 47 பேருக்கும் ஈரோடு ஆணைக்கல்பா ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அணி வகுப்பு நடத்தப்பட்டு, அவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற 47 பேரும் ஊர்காவல் படை பிரிவில் இன்று இன்று முதல் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்
    • சாலை விரிவாக்க பணியால் விபரீதம்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி- சக்தி ரோட்டில் கடந்த சில நாட்களாக 4 வழி சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. அதே பகுதியில் பாலம் கட்டி சாலையை அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் கோபி செட்டிபாளையம் வந்தார். பின்னர் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது கோபி-சக்தி ரோடு சிங்கிரிபாளையம் பகுதியில் தினேஷ் குமார் வந்து கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வந்துள்ளது. இருள் சூழ்ந்து இருந்ததால் இதை கவனிக்காத தினேஷ்குமார் காரை இயக்கி உள்ளார். அப்போது கார் பாலம் கட்டும் தடுப்பை இடித்து அருகில் உள்ள குழியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தினேஷ்குமார் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயம் அடைந்த வர்களை மீட்டு சிகிச்சை க்காக கோபிசெட்டி பாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றனர்.

    • ஆடி அமாவாசையையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
    • இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையை யொட்டி அந்தியூர் பத்ர காளியம்ம னுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ரகாளி யம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கி ழமைகளில் பக்தர்கள்அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள. மேலும் செவ்வாய்க் கிழமை ராகுகால பூஜை வெகு விமர்சையாக இந்த கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையை யொட்டி அந்தியூர் பத்ர காளியம்ம னுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் சந்தன காப்பு சிறப்பு அலங்கா ரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை யொட்டி இன்று அதிகாலை முதலே ஏராள மான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதையடுத்து ஆடி அமாவாசை தினத்தில் அம்மனை வழி பட்டு தங்களது வேண்டு தல்களை அம்மனிடத்தில் கூறி சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • ஈரோட்டில் அடுத்தடுத்த சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    சத்தியமங்கலம் திருநகர் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஈசக். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு லாரன்ஸ் (வயது 24) என்ற மகன் உள்ளார். லாரன்ஸ் செல்போன் கடைக்கு வேலை சென்று வந்ததா கவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலை யில் சம்பவத்தன்று லாரன்ஸ் தனது சொந்த வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். இதை பார்த்த விஜயா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லாரன்சை ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த் டாக்டர்கள் லாரன்ஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து விஜயா சத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் லாரன்ஸ் காதல் தோல்வி விரக்தியால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அரசலூர் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (45). இவருக்கு நிவேதா (22) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சியின் 2-வது தம்பி முத்துவுக்கும், நிவேதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் நிவேதாவுக்கு அடிக்கடி வயிற்று வலியும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தை இல்லா வருத்தத்தில் இருந்த நிவேதா விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர் உறவினர்கள் நிவேதாவை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நிவேதா உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து காமாட்சி அரசலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கோபி கொங்க ர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (37). இவரது மனைவி ெஜயந்தி. சதீஸ்குமார் கோபியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கடன் வாங்கி சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார். பின்னர் வாங்கிய கடன்களை இவரால் கட்ட முடி யவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஸ்குமார் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் சதீஸ்குமாரை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஸ்குமார் உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து ெஜயந்தி பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி-சித்தோடு பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கபட்டனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

     பவானி,

    பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பவானி பஸ் நிலையம் அருகில் உள்ள காவேரி ஆற்று புதிய பாலம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இரு வரும் முன்னுக்கு முரணாக பதில் அளித்த நிலையில் அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கரூர் வேலா யுதம்பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அகமது என்கிற அம்மானுல்லா (22) மற்றும் கார்த்தி என்கிற கார்த்திகேயன் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் 15-தேதி இரவு காடையம்பட்டி பிரிவில் வரதநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசமூர்த்தி என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றது தெரியவந்தது.

    அதேபோல் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கோவிந்தராஜ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடியதை ஒப்பு கொண்டு உள்ளனர். அகமது என்கிற அம்மானு ல்லா அக்கா நிஷா என்பவரிடம் 08 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு அவர் கோவை பெண்கள் மத்திய சிறையில் உள்ளார். மீதமுள்ள 17 பவுன் நகைகளை ஊராட்சி கோட்டை மலை அடிவா ரத்தில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருந்ததை தொடர்ந்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று நகைகளை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் பவானி குற்றவி யல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் கோபி மாவட்ட சிறைச்சா லையில் அடைத்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

    • கோபிசெட்டிபாளையம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பால் வியாபாரி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த புகலூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன்(60). பால் வியாபாரி. நேற்று இரவு காளியப்பன் தனது மொபட்டில் கோபி -அந்தியூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மொபைட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைக்க ப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காளி யப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் ரூ.50.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
    • முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

    பவானி

    பவானி தொட்டி–பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்வராயன் பாளையம் ராஜீவ் காந்தி நகரில் 6.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி, ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிட கட்டிடம் பராமரிப்பு பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி கோட்டை ஜீவா செட் அருகில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நீர் உந்து நிலையம் அமைத்து பைப்லைன் போடும் பணி, ஐஸ்வர்யா நகரில் ரூ.9.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாக்கடை கட்டுமான பணி, முனியப்பன் நகரில் ரூ.2.86 லட்சம் மதிப்பீட்டில் 5000 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் தண்ணீர் தொட்டி அமைத்து கூடுதல் பைப்லைன் அமைக்கும் பணி, ஓப்லி மில் பழைய காலணி பகுதியில் ரூ.2.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் போட்டு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்தல் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், பவானி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன் பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பவானி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தங்கவேலு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், தொட்டிபாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சொசைட்டி தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கல்குவாரி பணியாளர்கள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்
    • உரிமையை புதுப்பிக்க கோரிக்கை

    நம்பியார்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த மலைய ப்பாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பலர் கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இங்கு வேலை பார்ப்ப வர்கள் கடந்த 10 வருட ங்களுக்கு முன்பு மகாரா ஷ்டிராவில் கொத்தடி மையாக இருந்து அதன் பிறகு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே ராஜீவ் காந்தி நகரில் குடியிருந்து கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கல்குவாரி உரிமம் புதுப்பி க்காமல் ரத்து செய்ய ப்பட்டது.

    இதனை அடுத்து அங்கு வேலை பார்த்த பணியாளர்கள் வேலை யின்றி சிரமம் அடைந்தனர். கல்குவாரி உரிமத்தை புதுப்பிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்ற வில்லை. எனவே கல்குவாரி உரிமத்தை புதுப்பித்து தர வலியுறுத்தி இன்று நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு கல்குவாரியில் பணியாற்றும் சுமார் 70 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோபி வட்ட கொத்தடி மைகள், கல் உடைப்போர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீரென அமர்ந்து காலை வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது, ஓலள க்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட சொத்தபாறை கல்குவாரி யில் எவ்வித வெடிப்பொருட்களும் இல்லாமல் கை உளி கொண்டு கல் உடைத்து பிழைப்பு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். அனுமதி தராதப ட்சத்தில் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு வேறு வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்த 2 கோரிக்கைகள் நிறைவேராத பட்சத்தில் எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைத்து எங்களை எங்கிருந்து கூட்டி வந்தீர்களோ அங்கே திரும்ப விட வேண்டும் என்றனர். உண்ணாவிரத்துக்கு போராட்டத்துக்கு போலீ சார் அனுமதி மறுத்து நிலையில் தாசில்தார் அலுவ லகத்திற்கு சங்கத்தை சேர்ந்த முக்கிய பிரச்சி னைகள் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    • அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொல்லானின் 218-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விரைவில் பொல்லானுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும். கர்நாடகாவில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180 எம்.எல். பாட்டிலில் மது விற்கப்படுகிறது. அதை முழுமையாக குடிப்பதற்கு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.

    எனவே தான் அது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. டெட்ரா பேக் மதுவில் கலப்படம் செய்ய முடியாது. டாஸ்மாக் மது கடைகளை முன்கூட்டி திறக்கும் எண்ணம் இல்லை. காலை 7 முதல் 9 மணி வரை வேலைக்கு செல்பவர்கள் தவறான இடத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் ஆய்வு நடத்தப்பட்டது.

    டாஸ்மாக் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் பிரச்சனை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட்டு தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு செல்லும். டாஸ்மாக் கடை பணியாளர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு கீழ் உள்ளவர்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும்.

    டெட்ரா பாக்கெட் சின்னதில் பிரச்சனை உள்ளது. கண்ணாடி பாட்டிலில் வழங்கப்படும் மதுவில் கலப்படம் தடுக்கவும், சேதமடைவதை தவிர்க்கவும் யோசனை சொல்கின்றனர்.டெட்ரா பாக்கெட் ஆய்வில் தான் உள்ளது.

    பெரும்பாலான கடைகளில் அதிகளவு விற்பனையாகும் மது குறித்து சர்வே எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் எதிர்பார்க்கும் மதுவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் 15 இடத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்க த்துறையினர் சோதனை செய்து வருவது குறித்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி கூறும் போது, அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? அமலாக்கத்துறை சோதனை பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்.

    • 50 குழுக்களாக பிரிந்து சென்ற வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • வேட்டையாடியவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    ஈரோடு:

    ஈரோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருந்துறை அருகே உள்ள தோரணாவி, தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக முயல்கள் வேட்டுயாடுவதாக, தமிழ்நாடு வனம் மற்றும் வன உரியின கட்டுப்பாடு கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வனப்பாதுகாப்பு படையினர், ஈரோடு வனச்சரக குழுக்கள், ஈரோடு வனவியல் விரிவாக்க கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வனச்சரக குழுவினர் தொட்டி பாளையம் கிராமத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஒரு வாட்ஸ்-அப் செயலி மூலம் குழு அமைத்து முயல் வேட்டையாடுவது வனத்துறையினருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து 50 குழுக்களாக பிரிந்து சென்ற வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடிக் கொண்டிருந்ததையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மொத்தம் 107 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள், ஏராளமான செல்போன்களையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் திருவிழாவையொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் காட்டு முயலை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், அதன்படி இந்தாண்டு திருவிழாவை யொட்டி வேட்டையாட வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது:-

    பொதுவாக வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவது மிகப்பெரிய குற்றமாகும். முயல் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இவர்கள் வனப்பகுதியில் வேட்டையாடவில்லை. பட்டா நிலங்களில் தான் வேட்டையாடி உள்ளனர். இருந்தாலும் இதுவும் சட்டப்படி தவறுதான். எனவே 107 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    ×