என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரச்சலூர் அருகே லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு- டிரைவர் அதிர்ஷ்டமாக உயிர் தப்பினார்
- நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள சில்லாங்கட்டு புதூர் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான லாரி சென்று கொண்டிருந்தது.
லாரி பழுது காரணமாக ஈரோட்டில் உள்ள பட்டறையில் பழுது நீக்கி விட்டு ஓட்டுநர் வேலுச்சாமி (42 ) என்பவர் லாரியை ஈரோட்டில் இருந்து அரச்சலூர் அருகே உள்ள வடபழனி செட்டிக்கு கொண்டு சென்ற போது, சில்லாங்கட்டபுதூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென லாரியிலிருந்து புகை வெளியேறியது. இதனால் ஓட்டுநர் வேலுச்சாமி லாரியை அப்படியே நிறுத்தி இறங்கிப் பார்த்தார். சற்று நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது. நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து சென்னிமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. நல்ல வாய்ப்பாக டிரைவர் லாரிய விட்டு இறங்கியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்