என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவபெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தொலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை என இரண்டும் இணைந்து வருகிறது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த ஆடி மாதம் 2 அமாவாசை வருவதால் இன்று கூட்டம் குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி பவானி சரக போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடை யின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதே போல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழபட்டனர்.

    மேலும் ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றில் ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்களள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இதையடுத்து பொதுமக்கள் வந்து தொடர்ந்து பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    • ஈரோட்டில் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் 20-ந் தேதி நடக்கிறது
    • சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை நடக்க உள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு மின் பகிர்மான வட்ட, தெற்கு கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால், அதற்கான சிறப்பு முகாம் ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் (அரசு மருத்துவமனை அருகே) வரும் 20-ந் தேதி (வியாழக்கிழமை) காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை நடக்க உள்ளது. மின் நுகர்வோர், தங்களது ஆதார் எண் ஆவணம், பெயர் மாற்ற ஆவணத்துடன் உரிய கட்டணத்தை செலுத்தி, உடன் பெயர் மாற்றம் செய்யலாம்.

    வீடு, கடை மின் இணைப்புக்கு வீட்டு வரி ரசீது அல்லது பத்திர நகல் அல்லது வாரிசு சான்று, இதர வாரிசுதாரர்களிடம் இருந்து ஆட்சேபனை இன்மை நகலும், தொழில் மின் இணைப்புக்கு வீட்டு வரி, பத்திர நகல் அல்லது வாரிசு சான்று, இதர வாரிசுதாரர்களிடம் ஆட்சேபனை இன்மை கடிதம், தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரமும், விவசாய மின் இணைப்புக்கு பத்திர நகல் அல்லது பட்டா, வி.ஏ.ஓ., உரிமை சான்று, தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.filephoto

    • பவானிசாகர் அருகே முதியவர் உயிரிழந்தார்
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவரது அண்ணன் துரைசாமி (60). இவர் வாழைக்காய் புரோக்கர் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் துரைசாமி நீண்ட காலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் துரைசாமியை உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துரைசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் துரைசாமியின் சகோதரன் முத்துசாமி பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பு.புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு மகா பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் அண்ணாமலையார் உடன் உண்ணாமலை அம்மை மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விவசாயிடம் ரூ.35 லட்சம் பணம் பறிப்பு வழக்கில் தலைமறைவாக இருக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • கண்காணிப்பு கேமிரா உதவிகளை கொண்டு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி,

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டியை சேர்ந்த பாண்டி (50) என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் சிவாஜியிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி நமக்கு மேலும் ரூ.15 லட்சம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தடைந்தார். இதனையடுத்து லக்காபுரம் வந்தவுடன் ராஜ்குமார் என்பவருக்கு சிவாஜிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜியையும், உறவினர்கள் 2 பேரையும் ஏற்றிக்கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

    கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே வந்த காரில் இருந்த 4 நபர்கள் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக்கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் உறவினர்கள் 2 பேரையும் கீழே இறக்கி விட்டனர். இதனையடுத்து ராஜ்குமார் காரில் வைத்திருந்த ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி எனது பணம் ரூ.35 லட்சத்தை மீட்டு தருமாறு மொடக்குறிச்சி போலீசில் சம்பவத்தன்று இரவு புகார் அளித்தார்.

    புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வட்டாரத்தில் கூறியதாவது:- விவசாயிடம் பணம் பறித்த கார் கொள்ளையர்கள் குறித்து புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். செல்போன் எண்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமிரா உதவிகளை கொண்டும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் துப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • விவசாயிகளுக்கு மானிய விலையில் பழவகை ஒட்டுச்செடிகள் வழங்கபட உள்ளது
    • இதில் பயன்பெற 5 செடிகள் வளர்க்க போது மான இடவசதி இருக்க வேண்டும்

    ஈரோடு,

    கொடுமுடி தோட்ட க்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 2023-24 ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் ஆகிய திட்டங்களில் பழவகை ஒட்டுச்செடிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதன் படி கொய்யா, மா, மாதுளை, சப்போட்டா மற்றும் எலுமிச்சை போன்ற பழவகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. தொகுப்பு ஒன்றின் விலை ரூ.200 ஆகும். அரசின் மானியம் நீங்கலாக ரூ.50 செலுத்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள செடிகளை பெற்றுக்கொள்ளலாம்.

    இதில் பயன்பெற 5 செடிகள் வளர்க்க போதுமான இடவசதி இருக்க வேண்டும. மேலும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீட்டு மாடிகளில் வீட்டுக்கு தேவையான காய்கறி செடிகள் வளர்க்க தேவையான 6 பைகள், 6 வகையான காய்கறி விதைகள், மக்கிய தேங்காய் நார் கழிவுக் கட்டிகள், வேப்ப எண்ணை, அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா, சூடோ மோனாஸ் போன்ற பொருட்கள் அடங்கிய மாடி வீட்டுத் தொகுப்பு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    தொகுப்பு ஒன்றின் விலை ரூ.900 ஆகும். அரசின் மானியம் நீங்கலாக ரூ.450 செலுத்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடி தோட்ட தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதார் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோவுடன் www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளங்களில் பதிவு செய்து தோட்டக்கலைத் துறை மூலம் மாடி வீட்டுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    • ஈரோடு மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஈரோடு,

    மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 2025-ம் வருடத்திற்குள் தொழுநோய் பரவலை முற்றிலும் ஒழித்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 2-ம் நிலை ஊனத்துடன் புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பவானி, சத்தியமங்கலம் மற்றும் சென்னிமலை ஆகிய வட்டாரங்களில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 460 முன்களப்பணியாளர்களும், 48 மேற்பார்வையாளர்களும் ஈடுபட உள்ளார்கள்.

    இவர்கள் வீடு, வீடாக நேரில் சென்று ஆண்களை ஆண் முன்களப்பணியாளர்களும், பெண்களை பெண் களப்பணியாளர்களும் தொழுநோய்க்கான பரிசோதனை செய்ய உள்ளார்கள். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் ெகாள்ளப்படுகிறார்கள். தொழுநோய் ஆரம்ப அறிகுறிகளான தோலில் சிவந்த அல்லது வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், கை மற்றும் கால்களில் மதமதப்பு, சூடு மற்றும் குளிர்ந்த உணர்வு தெரியாமை, நீண்ட நாட்களாக ஆறாத புண்கள், காது மடல் தடித்திருத்தல், புருவமுடி இல்லாமல் இருத்தல், உடலில் முடிச்சு முடிச்சாக காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து நோயின் தன்மைக்கேற்ப 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் முழுமையாக குணப்படுத்தவும், ஊனங்களை தடுக்கவும் முடியும். மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோயாளிகளின் உடனிருப்பவர்கள், அருகில் வசிப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு தொழுநோய் தடுப்பு மருந்து வழங்கப்படும். இதனால் மற்றவர்களுக்கு தொழுநோய் பரவாமல் தடுக்க முடியும். இந்த தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • பெரியசேமூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது
    • நாளை மறுநாள் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    ஈரோடு,

    மாணிக்கம்பாளையம் மின்பாதையில் நெடுஞ்சாலை த்துறை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்வதால் ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் டீச்சர்ஸ் காலனி, செந்தமிழ் நகர், ஆயப்பாளி, எல்லப்பாளையம், பெரிய சேமூர், சின்னசேமூர் மற்றும் வேலன்நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • அத்தாணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
    • நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பயிற்சியளித்தார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை ேசர்ந்த தனியார் விதை உற்பத்தியாளர்கள் விதைப்பண்ணை அமைத்துள்ளனர். இவ்விதை உற்பத்தியாளர்களுக்கு அத்தாணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் தலைமையில் தரமான சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியின் போது விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய விதை நேர்த்தி தொழில்நுட்பம், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம், கலவன்களை அகற்றும் முறைகள், வல்லுநர் விதைகளைக் கொண்டு திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்தல், நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பயிற்சியளித்தார்.

    மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட ரகங்களான ஏடிடி 51, ஏடிடி 54, கோ 54, கோ 55 மற்றும் எஸ்டி 21 ரகங்களின் சிறப்பியல்புகள், பயிரிப்பட வேண்டிய பருவங்கள் பற்றியும் தெரிவித்தார். பெருந்துறை விதை சான்று கணேசமூர்த்தி விதைப்பண்ணையை பதிவு செய்யும் முறைகள், வயல் மட்டவிதைகளை முத்திரையிட்டு விதைசுத்தி நிலையம் கொண்டு செல்லும் முறை பற்றி பயிற்சியளித்தார். பவானி விதைச்சான்று அலுவலர் தமிழரசு விதைசுத்தி பணியின்போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் விதை மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

    கோபிசெட்டி பாளையம் விதைச்சான்று அலுவலர் மாரிமுத்து நெற்பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள் அவற்றின் மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை விதைச்சான்று அலுவலர்கள் ராதா, நாகராஜ், ஹரிபி ரசாத், ஹேமாவதி, கவிதா மற்றும் உதவி விதை அலுவலர்கள் சக்திவேல், தமிழ் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அறிவியல் கண்காட்சியில் அந்தியூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • இதில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வாகனத்தை எப்படி பொருத்துவது என்பதை மாணவர்கள் செய்து காட்டி னார்கள்.

    அந்தியூர்,

    உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விதமான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வாகனத்தை எப்படி பொருத்துவது என்பதை மாணவர்கள் செய்து காட்டினார்கள். வெல்டிங் மற்றும் லேத் எந்திரம் பற்றிய செயல்முறை விளக்கம் மாணவர்களால் கொடுக்கப்பட்டது. சூரிய ஒளி மற்றும் காற்றாலை செயல்முறை விளக்கங்களும் மாணவர்களால் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி தலைமை தாங்கினார். தொழிற்கல்வி ஆசிரியர்கள் தேர்சாமி, பூவேந்திரன், நந்தகுமார், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர்களாக வேல் நம்பி மற்றும் சுதீஷ் செயல்பட்ட னர்.

    • சுமை தூக்கும் பணியில் 7,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
    • சுமை தூக்கும் தொழிலாளர்களின் தர்ணா போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பார்க் சாலை, மூலப்பட்டறை, குப்பைக்காடு போன்ற பகுதிகளில் 450-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

    இங்கிருந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், விளை பொருட்கள், மாட்டுத் தீவனம், பேப்பர், அட்டை, போர்டு உட்பட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    சுமை தூக்கும் பணியில் 7,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் உடன் அனைத்து தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் செய்து 3 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு, பிற சலுகைகள் பெறும் நிலையில் கடந்த 6 ஆண்டாக கூலி உயர்த்தப்படவில்லை.

    இதனால் 41 சதவீத கூலி உயர்வு, இரவு 8 மணிக்கு மேல் லோடு ஏற்ற இரவு சாப்பாட்டுக்கு 75 ரூபாய் உள்ளிட்ட சலுகைகள் வழங்கவும், அதற்கான ஒப்பந்தம் செய்யவும் கோரி கடந்த 13-ந்தேதி முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களின் தர்ணா போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

    இப்போராட்டத்தால் ஈரோட்டில் இருந்து பிற நகரங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும், இங்கு வந்த சரக்கை இறக்க முடியாமல் 4 நாட்களில் ரூ.400 கோடி மதிப்புள்ள மஞ்சள், ஜவுளி போன்ற பொருட்கள் குடோனில் தேக்கம் அடைந்துள்ளது.

    இதனால் லாரி உரிமையாளர்கள் பொருட்களை உரிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 1005 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் இந்த அணையின் மூலம் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை யின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாத தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    அதே நேரம் பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2317 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1005 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    நீர்வரத்தை விட குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்ட மும் உயர தொடங்கி உள்ளது.

    ×