பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது வழக்கு பதிவு

பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீசார் விசாரணை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது வழக்கு பதிவு
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ராஜீவ் நகர் கோட்டை முனியப்பன் கோவில் அருகே சிவா என்பவரின் தோட்டத்தில் உள்ள அறையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவா, மோகன், சுரேஷ், தங்கராஜ், பாஸ்கர், சமரேஷ், விஜயகுமார் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் ரொக்க பணம் ரூ.31 ஆயிரத்து 600, 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com