என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
    X

    சென்னிமலையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

    • தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    சென்னிமலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் உத்தரவின்படி சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் கவுந்தர்ராஜன், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×