search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3.45 lakh fish fry were released in"

    • பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.
    • ரூ.3.45 லட்சம் மதிப்பில் குஞ்சுகள் விடப்பட்டன.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன் குஞ்சு வளர்க்கப்பட்டு வருகிறது.

    குறித்த காலத்துக்கு ஒருமுறை மீன் குஞ்சு விடப்படுவது வழக்கம். அதன்படி பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.

    ரோகு இனம் ரூ.2.44 லட்சம், மிர்கால் ரூ.1 லட்சம் என ரூ.3.45 லட்சம் மதிப்பில் குஞ்சுகள் விடப்பட்டன.

    இந்த சீசனில் 3.28 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயி க்கப்பட்டு அதைவிட கூடுதலாக மீன் குஞ்சுகள் விடப்பட்டு ள்ளதாக மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    இதில் மீன்பிடி ஒப்பந்ததாரர், பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர். 

    ×