என் மலர்
தர்மபுரி
- சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
- காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீரானது வினாடிக்கு 5,208 கன அடியில் இருந்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 576 கன அடியாக அதிகரித்து உபரி நீரானது வெளியேற்றப்பட்டதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த நீரானது நேற்று தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வர தொடங்கியது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக இருந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இன்றும், நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர் விடுமுறை காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
அவர்கள் பரிசலில் சென்று சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
- ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கர்நாடகா அணைகளில் இருந்து வெளியறே்றப்பட்ட தண்ணீரால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக காவிரி ஆற்றில் குறைந்ததையடுத்து சின்னாறு கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக வந்ததால், குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது நீக்கி சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
குளிப்பதற்காக விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியதால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறை என்பதால் இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் அருவி மற்றும் ஆற்றுபகுதிகளில் குளித்தும். மீன் சமையலை உண்டும் ருசித்தும் மகிழ்ந்தனர்.
கடந்த வாரங்களில் நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் பரிசல் ஓட்டிக்கல் மாசஜ்செய்யும் தொழிலாளர்கள் மீன் சமையல் செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
- போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது. பல இடங்களில் கஞ்சா போதைக்கு கல்லூரி மாணவர்கள் அடிமையாகி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீசார் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தருமபுரி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடித்து போலீஸ் நிலைய ஆய்வாளர் கலையரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபி, எஸ் எஸ் ஐ முருகன், தலைமை போலீசார் கபில்தேவ், பாரதி, சிவகுரு, விஜயகுமார், உள்ளிட்ட போலீசார் பாலக்கோடு பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட் பின்புறம் சென்று சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்து விசாரித்தனர். அதில் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கெட்டுகொட்டாய் பகுதியில் கஞ்சா இருக்கும் இடம் தெரிய வரவே போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்ததில் வீட்டிற்கு பின்புறம் 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளி சந்தை அருகே கெட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரது மகன் தமிழரசன் (25) என்பதும் மற்றும் பாலக்கோடு நகரப் பகுதியைச் சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் மணிகண்டன் (25) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி கடத்தி வரப்பட்டு மற்ற பகுதிகளுக்கு சில்லரையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல் நேற்று முன்தினம் அரூர் அரசு மருத்துவமனை பகுதியில் கஞ்சா பதுக்கு விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு பணிக்கு செல்லாமல் கஞ்சா கடத்தல் செய்து விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள்.
- மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அருகே கிட்டனஅள்ளியில் கர்ப்பிணி பெண்ககளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் இணை இயக்குநர் சாந்தி, தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் கிட்டன அள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள், சிறிது நேரம் காத்திருந்து திடீரென வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.
விசாரித்தில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும், தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த சித்ராதேவி (42) என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சித்ராதேவியை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம்.
- பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலில் வழக்கம் போல இந்த ஆண்டும் தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சார்ந்த சுகனவிலாசம் (வயது 30). அவரது மனைவி அனிதா (27). வங்கி ஊழியரான அனிதாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இருளப்பட்டி காளியம்மன் கோவிலில் குழந்தை வரம் கேட்டு வேண்டியுள்ளார்.
இந்த நிலையில் அனிதாவுக்கும் குழந்தை பிறந்ததால், அதற்குப் பரிகாரமாக நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக இருளப்பட்டி தேர் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சிலர் அனிதாவை அன்னதானம் வழங்க விடாமல் தடுத்து கோவிலை விட்டு வெளியேற்றினர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அனிதா கூறியதாவது:-
நான் இந்த இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவள். எனக்கு திருமணமாகி கணவருடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம். பிறகு எங்களுக்கு குழந்தை பிறந்தது.
அதற்கு பரிகாரமாக இந்த கோவிலில் தேர்த்திருவிழாவின்போது அன்னதானம் வழங்குவதற்காக வந்தோம். அப்போது மாற்று சமூகத்தை சார்ந்த ஒரு சிலர் பழங்குடியின பெண்ணான நீங்கள் அன்னதானம் வழங்க கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் வேண்டுதல் நிறைவேற்ற ஒத்துழையுங்கள் என கெஞ்சி கேட்டோம். இருந்தபோதிலும் அவர்கள் எங்களை விரட்டினர்.
இந்த நிலையில் அங்கு வந்த போலீசாரிடமும் நாங்கள் அன்னதானம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் போலீசார் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக செயல்பட்டனர்.
நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் போலீசார் எங்களை கோவில் பகுதியில் இருந்து வெளியேற்றி விட்டனர். மேலும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அரசின் அனுமதி பெற்று அன்னதானம் இடுவதற்கும் அனுமதிக்காமல் எங்களது சமையல் செய்யும் சிலிண்டர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தி மிரட்டினர். இந்த நிலையில் ஒரு வழியாக மாலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டோம் என்று தெரிவித்தார்.
சம்பவம் குறித்து பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் கேட்டபோது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் முழு உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இச்சம்பவம் குறித்து அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் அந்த பெண்ணை அன்னதானம் வழங்குவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் அன்னதானம் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பிரெட்டிப் பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காளியம்மன் கோவிலில் பழங்குடியின பெண் அன்னதானம் வழங்குவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- பிறந்தநாள் கொண்டாட்டம் டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
- பேனரை கிழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், பிறந்தநாள் கொண்டாட்டம் டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சார்பில் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் நெடுஞ்சாலையோரம் தொண்டர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்து விட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 5 மணிக்கு பேனர் கிழிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 20-க்கு மேற்பட்டவர்கள் சேலம்-அரூர் சாலையில் திரண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேனர் கிழித்தவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இந்த போராட்டம் சுமார் ½ மணி நேரம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேனரை கிழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் பேனர் கிழிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
- எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
- ஸ்கூட்டர் தீ பிடித்து மளமளவென எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மேல் எண்டபட்டியை சேர்ந்தவர் வடிவேல், விவசாயி. இந்நிலையில் இன்று காலை தனது நிலத்தில் பயிரிட்ட சாமந்தி பூக்களை தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எடுத்து கொண்டு தருமபுரி பூ மார்க்கெட்டில் கொண்டு சென்றார்.
பின்னர் தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிய போது தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ராமக்காள் ஏரி அருகே சென்றபோது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை கண்ட வடிவேல் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி இறங்கி பார்த்தபோது ஸ்கூட்டர் மளமளவென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக வடிவேல் ஸ்கூட்டரை சாலை ஓரம் நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார்.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ பிடித்து எரிந்த ஸ்கூட்டர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அணைக்க முயற்சித்தனர். அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. இது குறித்து தருமபுரி டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆதனூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
- எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆதனூர் பகுதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
பொதுவாக மதுக்கடை வேண்டாம், இருக்கும் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரியும் தான் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மதுக்கடை வேண்டும் என பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தர்மபுரியில் டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில்,
எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம். தலைக்கு ரூ.300 கொடுத்து போராட்டத்திற்கு அழைத்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பின்னரே போராட்டம் குறித்து தெரிந்தது. போராட்டத்திற்கு அழைத்து சென்றவர்கள் கூறியதை பேட்டியில் கூறினோம் என்று தெரிவித்தனர்.
- தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.
- 20 கி.மீ சென்று மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுபான கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி பொதுமக்கள் போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் பகுதியில் மதுபானக் கடை வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், தரம்புரியில் உள்ள நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தங்கள் பகுதியில் இருந்து 20 கி.மீ சென்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யாமல் விட்டுள்ளனர்.
- உடல் உபாதைகள், தொற்று நோய் பரவும் அபாயம்.
ஒகேனக்கல்:
கர்நாடகா மாநில காவிரி கரையோர பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்திருக்கிறது. இந்த யானையை கர்நாடகா மாநில வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்த யானை அடித்து வரப்பட்டு பிலிகுண்டுலு வழியாக மிதந்து வந்து தற்போது ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் நடு ஆற்றில் உள்ளது.
உயிரிழந்த காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இருப்பதால் உடல் பாகங்கள் தண்ணீரில் கலந்து மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட மக்கள் அந்த குடிநீரை பருகுவதால் உடல் உபாதைகள், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் கலங்களான ஆற்று நீர் காரணமாக பல உடல் உபாதைகள் வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது இந்த உயிரிழந்த யானை ஆற்றில் அடித்து வரப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நம்பியுள்ள மக்கள் மீண்டும் உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
எனவே கர்நாடகா வனத்துறையினர் உயிரிழந்த பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானையை அப்புறப்படுத்தி வனப்பகுதியிலேயே அடக்கம் செய்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.
இதனையடுத்து கர்நாடக வனத்துறையினர் ஆற்றில் மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடகா வனப்பகுதியிலேயே அடக்கம் செய்ய உள்ளோம் என தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யானை பிரேத பரிசோதனை செய்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் அருகும் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.
பென்னாகரம்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து 2 அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வருகிறது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனினும் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை நிலவரப்படி 30 ஆயிரம் கனஅடியானது.
ஒகேனக்கலில் தொடர்ந்து 27-வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை நீடிக்கிறது.
நீர்வரத்து 30,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
- கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
- வனத்துறையினர் துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், உள்ளிட்ட பகுதிகள் வனத்துறையையொட்டிய கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் தங்கள் விளை நிலத்துக்குள் வன விலங்குகள் உள்ளே நுழையாமல் இருக்க ஆங்காங்கே கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வனஅலுவலர் வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் பென்னாகரம், ஏரியூர் வன பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வன அலுவலர்கள் பொது மக்களிடம் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியப்படாது என தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரிமலை கிராமத்தில் சட்ட விரோதமாக உரிமம் இல்லாத வைத்திருந்த 12 நாட்டு துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து வன துறையிடம் ஒப்படைத்தனர். அவற்றை கைப்பற்றி வனத்துறையினர் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.






