என் மலர்
நீங்கள் தேடியது "காவிரி உபரிநீர் திட்டம்"
- இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது.
- தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.
தருமபுரி:
தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று தருமபுரிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் இன்று வருகை தந்தனர்.
அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. அது தண்ணீர் பிரச்சனை. இந்த பிரச்சனை தீர்க்க பா.ம.க.வினர் பல கட்டங்களாக போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அரங்கேற்றி இருக்கிறோம். அதன் விளைவாக நிறைவேற்றப்பட்டது தான், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் நிறைந்த மாவட்டம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால், 2, 3, அல்லது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து முதலாளியாக இருந்த விவசாயிகள் தற்போது கூலி ஆட்களாக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்திலேயே அவர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேறுவதற்காக பல திட்டங்களை பா.ம.க. முன்னெடுத்தது. இதில் எண்ணகோள்புதூர் திட்டம், ஆணைமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முக்கிய திட்டமான காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தோம். இதுபோன்று பல கட்டங்களாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சென்ற ஆட்சியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றுவதாக அவர் அறிவிப்பையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு காவிரி உபரி நீர் திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.
இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.
இதைக்கூட நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அதனால் அகிம்சை முறையில் முதற்கட்டமாக அடுத்த மாதம் 4-ந்தேதி தருமபுரியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அனைத்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அரசுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கிழக்கு பகுதி நீர்நிலைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை வேண்டுமென முதல்-அமைச்சர்க்கு பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காவிரிநதி கர்நாடக மாநில அணைகளை நிறைத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் பாய்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை அடைகிறது.
வாழப்பாடி:
மேட்டூர் அணை காவிரி உபரி நீரை, சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தியதைப் போல, மாவட்டத்தின் கிழக்கு பகுதி நீர்நிலைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி நதி
கர்நாடகத்திலுள்ள கூர்க் மலைப்பகுதி தலைக்காவிரியில் உற்பத்தி–யாகும் காவிரிநதி அந்த மாநில அணைகளை நிறைத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் பாய்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை அடைகிறது.
மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படும் காவிரி நதிநீர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்திற்கு பயன்படுகிறது.
1935–-ம் ஆண்டில் இருந்து இந்த அணையில் இருந்து சேலம் மாவட்ட பாசனத்திற்கென, எந்த திட்டமும் செயல்படுத்தப்–படவில்லை.
இதனால் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இந்த மாவட்டத்தின் பாசனத்திற்கு பயன்படவில்லை.
உபரி நீர்
காவிரியை தவிர மற்ற ஆறுகள், நீரோடைகள், குளம், குட்டை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் வறண்டே கிடக்கின்றன. எனவே, மேட்டூர் அணை நிரம்பிய பிறகு காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரில் சிறு பகுதியை சேலம் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு திருப்பும் திட்டத்தை செயல்படுத்தினால், மாவட்டம் முழுவதும் நீர்வளம் பெருகுமென, தமிழக அரசுக்கு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, காவிரி உபரிநீரை சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தப்படுமென, 4 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
100 ஏரிகள் நிரப்பும் திட்டம்
இத்திட்டத்திற்காக ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள மேட்டூர், எடப்பாடி, ஓமலுார், சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 12 பொதுப்பணித்துறை ஏரிகள். 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகள் உட்பட மொத்தம் 100 ஏரிகளில் காவிரி உபரி நீரை வாய்க்கால்கள் வாயிலாக கொண்டு சென்று நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
விவசாயிகள் ஏமாற்றம்
இத்திட்டத்தால் ஏறக்குறைய 4,238 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், சேலம் மாவட்ட கிழக்கு பகுதி லுள்ள வீரபாண்டி, பன மரத்துப்பட்டி, சேலம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்–கன்பாளையம், ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளில், மேட்டூர் அணை காவிரி உபநீரை நிரப்பும் திட்டம் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
இத்திட்டத்தை விரிவு படுத்தி, வீரபாண்டி, பனம ரத்துப்பட்டி, வாழப்பாடி ஏரிகளுக்கு காவிரிநதி உபரிநீரை கொண்டு வந்து, இதன் மூலம் கிழக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளை யும் நிரப்பி, பாசனத்திற்கும், நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும் வழிவகை செய்ய வேண்டும்.
இதனால், வசிஷ்டநதி, ஸ்வேதா நதி ஆற்றுப்படுகை கிராமங்களிலுள்ள விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறும்.
எனவே, சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், நிலையான வாழ்வாதரத்தை ஏற்படுத்திக் கொடுக்க, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.