என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழந்தனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழந்தனர். மேலும் அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    நேற்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 17 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மழை தொடர்ந்து வருவதை அடுத்து நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நீர்வரத்தை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இன்று வழக்கத்தை விட ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன் விற்பனையும் படுஜோராக நடந்தது.

    நீர்வரத்தை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.
    • வணிகர்களையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்வோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம்.

    தருமபுரி:

    காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் இன்று காலை 9 முதல் மதியம் 12 மணிவரை அரைநாள் கடையடைப்பு போராட்டம் அழைப்பு விடுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் தருமபுரி இருந்து வருகிறது. இதனால் தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பா.ம.க. சார்பில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

    தருமபுரி காவிரி குடிநீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு 3 டிஎம்சி மட்டுமே நீர் தேவைப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பலநூறு டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும். ரூ.650 கோடி மட்டுமே செலவாகும்.


    இந்தத் திட்டத்தால், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்டம் வளம் பெறும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.

    ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க மறுக்கிறது என்று குற்றம்சாட்டிய அன்புமணி, "திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 4-ந் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க சார்பில் அழைப்பு விடுத்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள் என அனைத்து வியாபாரிகள், வணிக நிறுவனத்தினரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்று வலியுறுத்தி நடத்தப்படும் அரை நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

    இதற்கிடையே எந்த வணிகர்களையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்வோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம். எனவே அவ்வாறு செயல்படுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.


    இயல்பாக வழக்கம் போல் கடை செயல்படவும், வணிகம் மேற்கொள்ளவும் யாதொருவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. போலீசார் போதுமான பாதுகாப்பு வணிகர்களுக்கும், கடை மற்றும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவித்து இருந்தார்.

    தருமபுரி நகரின் முக்கிய பகுதியான பஸ் நிலையம், நேதாஜி பைபாஸ், திருப்பத்தூர் சாலை, பென்னாகரம் சாலை, கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை, ஆறுமுகஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, அப்துல்முஜீப் தெரு, சித்தவீரப்பசெட்டி தெரு, எஸ்.வி.சாலை மற்றும் பிடமனேரி, இலக்கியம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள் காலை 8 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.

    இந்த கடையடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தருமபுரி நகர் பகுதி முழுவதும் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சிவராமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோன்று கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான டீ கடை, உணவகங்கள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் திறக்கப்படவில்லை.

    இதுபோன்று பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி. ரோடு, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் மெயின் ரோடு, ஸ்துபி மைதானம் ஆகிய பகுதிகளில் வணிகர்கள் அனைத்து கடைகளும் கடை அடைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர் ஆகிய பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது.

    நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    • ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது.
    • நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    பென்னாகரம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடி அளவில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கடுமையாக சரிந்து வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று 4 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்தது.

    தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று இரவு 7 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர் வரத்து கடுமையாக சரிந்து வந்தது. நேற்று மாலை வரை 3 ஆயிரம் கன அடி அளவில் மட்டுமே வந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதியான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.
    • கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்கண்டன்.

    இவரது மகன் சிவபிரகாசம் (வயது47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், ரம்யா, நித்யா, சந்தியா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

    சிவபிரகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் தண்டுகாரன்பட்டியில் உள்ள சிவபிரகாசத்தின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையொட்டி உறவினர் வீட்டின் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் நேற்று தெருக்கூத்து நடைபெற்றது. அதனை பார்ப்பதற்காக சிவபிரகாசம் வீட்டில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.

    இந்த நிலையில் சென்றாய பெருமாள் கோவில் பின்புறம் பகுதியில் உள்ள புதரின் அருகே சிவபிரகாசம் கை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை இன்று காலை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைநதனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் மகன், மகள்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    சம்பவ குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் தொப்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது சிவபிரகாசத்தை மர்மநபர்கள் யாரோ சிலர் கையை கட்டிப்போட்டு அடித்து கொன்று விட்டு சுமார் 200 மீட்டர் தொலைவில் இழுத்து வந்து புதரின் அருகே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் யாராவது அடித்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு ஏற்ப ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    இதனால் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் எதிரொலியாக, ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து குறைந்தது.

    காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன், காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது. காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அனுமதி வழங்கி உள்ளார். மேலும் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
    • நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி கரையோரங்களில் மழையின் காரணமாகவும் கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கரையோரங்களில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக இருந்த நிலையில் நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 12,000 கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது.

    • லஞ்சம் தர விருப்பம் இல்லாத நாகன் இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
    • நாகனிடம், முருகேசன் லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

    பாலக்கோடு:

    பாலக்கோடு அடுத்த நடுகுட்லானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் நாகன்.

    இவருடைய தாய் காளியம்மாளுக்கு, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யும் வகையில் சிக்கதோரணபெட்ட வருவாய் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் (வயது 47) என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மனு கொடுத்தார்.

    ஆனால் கிராம நிர்வாக அலுவலர், ரூ.5ஆயிரம லஞ்சம் கொடுத்தால் ஓய்வூதியம் வாங்கி தர ஏற்பாடு செய்ய முடியும் என கூறி உள்ளார்.

    லஞ்சம் தர விருப்பம் இல்லாத நாகன் இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

    அதனை தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அன்று தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நாகனிடம் கொடுத்து வி.ஏ.ஓ, கேட்ட லஞ்ச பணத்தை கொடுக்க செய்தனர்.

    நாகனிடம், முருகேசன் லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை தர்மபுரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, தலைமை குற்றவியல் நடுவர் சந்தோஷ், முருகேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    • ஆர்த்தியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள தேவராஜ பாளையம் அருகே கருமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். விவசாயி.

    இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 27). டிரைவரான இவர் கனரக வாகனம் ஓட்டி வந்தார்.

    இவர் அதேபகுதியில் உள்ள போதக்காடு பழங்குடியினத்தைச் சேர்ந்த புகழேந்தியின் மகள் ஆர்த்தி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் ஆர்த்தி பிணமாக இறந்து கிடந்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்த்தியின் உறவினர்கள் வீட்டில் வந்து பார்த்தபோது கணவன் கோவிந்தராஜ், மாமனரும், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த அரூர் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் பிணமாக கிடந்த ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே இறந்து போன ஆர்த்தியின் உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்த்தியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தலைமறைவாக இருந்த கணவர் கோவிந்தராஜை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்த்தியை கொன்றதை அவரது கணவர் கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து ஆர்த்தியின் கணவர் கோவிந்தராஜை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    போதக்காடு பகுதியைச் சேர்ந்த புகழேந்தியின் மூத்த மகளான ஆர்த்தி பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. எங்களது காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் நானும், ஆர்த்தியும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தோம்.

    இதற்கிடையே ஆர்த்தி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டதை அரசு சார்பில் கலப்பு திருமணம் நிதிஉதவி கிடைப்பதற்காக விண்ணப்பித்து இருந்தோம். அந்த பணம் அவருக்கு கிடைத்தது.

    மேலும், தனக்கு பணம் தேவைப்பட்டதால், ஆர்த்தியிடம் அவரது வீட்டில் வரதட்சணை பணம் வாங்கி வருமாறு கூறினேன். இதற்கிடையே கலப்பு திருமணம் நிதிஉதவி பணம் ஆர்த்திக்கு வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டேன். சம்பவத்தன்று மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ஆர்த்தியை சரமாரியாக தாக்கினேன். இதில் ஆத்திரம் தீராத நான் அவரை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் எனது மூத்த மகளை மட்டும் என்னுடன் அழைத்து சென்றுவிட்டேன். எனது மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆர்த்தியின் உறவினர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், என்னை விசாரிக்க போலீசார் தேடியபோது சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    திருமணமாகி 7 வருடங்கள் ஆனநிலையில் ஆர்த்தி இறந்த சம்பவம் குறித்து பிடிப்பட்ட கோவிந்தராஜிடம் விசாரணை நடத்த அரூர் ஆர்.டி.ஓ. வில்சன் ராஜசேகர் முன்னிலையில் இன்று போலீசார் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் ஆர்த்தியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×