என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    வெள்ளிச்சந்தை:

    பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு தருமபுரி நோக்கி நெடுஞ்சாலையில் அரசு பஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது.

    தற்போது சாரல் மழை பெய்து வரும் காரணத்தினால் சாலைகள் மிகவும் வலுவலுப்பாக உள்ளன.

    பாலக்கோடு அடுத்த கோடியூர் அருகே வந்த போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீரென டிரைவர் பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது.

    பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறினர். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியே வந்தனர்.

    இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான அதே இடத்தில் தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழுவழுப்பான சாலையை மாற்றக்கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக ஒசூர்-பாலக்கோடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று மாலை தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து சரிய தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடிதண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று மாலை தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து சரிய தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அருவி களில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக இன்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றின் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வெள்ளிசந்தை:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கேசர்குளிடேம் அருகே உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் 80 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் வேறு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இவர்களின் கோரிக்கையை ஏற்று கேசர்குளிடேம் அருகில் உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் புதிய குடியிருப்புக்களை கட்டிய தமிழக அரசு இப்பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், சுடுகாடு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் கடந்த மார்ச் மாதம் அவசரகதியில் இலங்கை அகதிகளை இம்முகாமில் குடியமர்த்தின.

    கடந்த 7 மாதங்களாக இது குறித்து பல முறை தமிழக முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை விடுத்தனர் அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை,

    இந்த நிலையில் இந்த முகாமை சேர்ந்த ரூபன் (வயது55) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததாலும், பழைய முகாமில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல வழியில்லாததாலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாததால் மயானத்திற்கு இடம் கேட்டு பாலக்கோடு-கேசர்குளி சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டு வந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீசார், தாசில்தார் ரஜினி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், மயானத்திற்கு இடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுகொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    பென்னாகரம்:

    தமிழக-கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழந்தனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழந்தனர். மேலும் அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    நேற்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 17 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மழை தொடர்ந்து வருவதை அடுத்து நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நீர்வரத்தை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இன்று வழக்கத்தை விட ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன் விற்பனையும் படுஜோராக நடந்தது.

    நீர்வரத்தை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.
    • வணிகர்களையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்வோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம்.

    தருமபுரி:

    காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் இன்று காலை 9 முதல் மதியம் 12 மணிவரை அரைநாள் கடையடைப்பு போராட்டம் அழைப்பு விடுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் தருமபுரி இருந்து வருகிறது. இதனால் தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பா.ம.க. சார்பில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

    தருமபுரி காவிரி குடிநீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு 3 டிஎம்சி மட்டுமே நீர் தேவைப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பலநூறு டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும். ரூ.650 கோடி மட்டுமே செலவாகும்.


    இந்தத் திட்டத்தால், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்டம் வளம் பெறும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.

    ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க மறுக்கிறது என்று குற்றம்சாட்டிய அன்புமணி, "திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 4-ந் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க சார்பில் அழைப்பு விடுத்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள் என அனைத்து வியாபாரிகள், வணிக நிறுவனத்தினரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்று வலியுறுத்தி நடத்தப்படும் அரை நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

    இதற்கிடையே எந்த வணிகர்களையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்வோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம். எனவே அவ்வாறு செயல்படுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.


    இயல்பாக வழக்கம் போல் கடை செயல்படவும், வணிகம் மேற்கொள்ளவும் யாதொருவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. போலீசார் போதுமான பாதுகாப்பு வணிகர்களுக்கும், கடை மற்றும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவித்து இருந்தார்.

    தருமபுரி நகரின் முக்கிய பகுதியான பஸ் நிலையம், நேதாஜி பைபாஸ், திருப்பத்தூர் சாலை, பென்னாகரம் சாலை, கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை, ஆறுமுகஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, அப்துல்முஜீப் தெரு, சித்தவீரப்பசெட்டி தெரு, எஸ்.வி.சாலை மற்றும் பிடமனேரி, இலக்கியம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள் காலை 8 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.

    இந்த கடையடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தருமபுரி நகர் பகுதி முழுவதும் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சிவராமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோன்று கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான டீ கடை, உணவகங்கள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் திறக்கப்படவில்லை.

    இதுபோன்று பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி. ரோடு, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் மெயின் ரோடு, ஸ்துபி மைதானம் ஆகிய பகுதிகளில் வணிகர்கள் அனைத்து கடைகளும் கடை அடைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர் ஆகிய பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது.

    நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    • ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது.
    • நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    பென்னாகரம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடி அளவில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கடுமையாக சரிந்து வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று 4 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்தது.

    தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று இரவு 7 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    ×