என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • இன்று காலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
    • பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் உள்ளது.

    இங்கு வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    நீர்வரத்து கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகையும், அருவிகளில் விழும் தண்ணீரையும் ரசித்து பார்த்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் ஆயில் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித்தும் மகிழ்கின்றனர்.

    மேலும் பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தருமபுரி;

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் வகுத்து உத்தரவிட்டது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஒதுக்கப்பட்டது.

    அதனை மீறி தருமபுரி மாவட்டத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதில் தருமபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையம், ஆறுமுக ஆச்சாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, தருமபுரி நான்கு ரோடு ஆகிய பகுதிகளில், பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் தொப்பூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோம்பை செல்லும் பாளையம்புதூர் ஜங்ஷன் செல்லும் வழியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த ஒருவர் மீதும், மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மொரப்பூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் பாப்பாரப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலும், பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பென்னாகரம் கடைவீதி பகுதியிலும், ஏரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏரியூர் நிப்பான் பெயிண்ட் கடை அருகிலும், நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • அருவிகளில் குளிக்க தொடர்ந்து 16-வது நாளாக தடை நீடிக்கிறது.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 16-வது நாளாக தடை நீடிக்கிறது.

    இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமல், பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வாரசந்தையில் இன்று மட்டும் ஆட்டு சந்தையில் மட்டும் 3 மணிநேரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது.
    • ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரசந்தை தமிழகத்தின் 2-வது பெரிய வாரசந்தையாகும். இந்த வாரசந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரையில் விற்பனை செய்யப்படும் முக்கிய சந்தையாகும்.

    இந்த சந்தையானது ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவதால் இந்த சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களுடைய விளை நிலங்களில் வளர்க்கப்படுகின்ற தானியங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவைகளை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

    இந்நிலையில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் இந்த வார சந்தைக்கு தனி மவுசு உண்டு. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான விவசாயிகள், வியாபாரிகள் வர்த்தக ரீதியாக ஆடு, மாடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.

    தற்போது இந்த வாரசந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக இன்று கொண்டு வந்துள்ளனர்.

    செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வியபாரிகள் கொண்டு வந்துள்ள நிலையில் அதிகாலை தொடங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

    தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் விற்பனையானதால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வாரசந்தையில் இன்று மட்டும் ஆட்டு சந்தையில் மட்டும் 3 மணிநேரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது.

    ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.

    வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

    சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

    இந்த சந்தைக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சந்தை வளாகம் சுற்றிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

    • நீர்வரத்தால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக இன்று 13-வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதால் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டன.

    இதனால் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து வர தொடங்கியதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.

    கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால், நேற்று மாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 31 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்லில் அதிகளவு நீர்வரத்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றங்கரையோர ப்பகுதிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி மேற்கொள்வதற்கும் தொடர்ந்து 13-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

    மேலும், நீர்வரத்து அதிகரிப்பால், தடையை மீறி காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளிலும் பொதுமக்கள் குளிக்க கூடாது என்று போலீசார் அறிவித்தப்படி கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் காவிரி ஆற்றில நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • ஒகேனக்கல்லுக்கு வரும் விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலாப் பணிகளுக்கு தொடர்ந்து 10-வது நாளாக குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் தடை தொடர்கிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 18000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 10-வது நாளாக நீடித்து வருகிறது.

    தொடர்ந்து காவிரி ஆற்றிலும், அருவிகளில் குளிக்க மாவட்ட தடை விதித்து இருப்பதால், ஒகேனக்கல்லுக்கு வரும் விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    மேலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் மீன் விற்பனை, கடைவீதியில் பொருட்கள் விற்பனை, சமையல் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் என அனைவரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். 

    • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 9-வது மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்:

    காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று சற்று சரிந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    மேலும் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடிக்கும் மேல் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது தொடர்ந்து இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை அளவு குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால், பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 7-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 6-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமலும், பரிசலில் பயணம் செல்ல முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரையில் இருந்தவாறு நின்று ரசித்து பார்த்தனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • அருவியில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு நீர்வரத்து அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருவியில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரையில் இருந்தவாறு நின்று ரசித்து பார்த்தனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் இருந்து பாலக்கோட்டிற்கு நேற்று அரசு பஸ் சென்றது.
    • பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள், பெண்கள் குடை பிடித்தபடி பஸ்சில் சென்றனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக நேற்று பகலில் தர்மபுரி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று பகல் நேரத்திலேயே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் இருந்து பாலக்கோட்டிற்கு நேற்று அரசு பஸ் சென்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்றனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் பஸ்சின் மேற்கூரையில் இருந்து உள்ளே விழுந்தது. இதன் காரணமாக பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள், பெண்கள் குடை பிடித்தபடி பஸ்சில் சென்றனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×