என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
    • ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது

    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் இருந்து ஏராளமான இரும்பு பொருள்கள் திருடப்பட்டது.

    இது பற்றி ஆக்கர் கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.

    மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கும்பல் ரெயில் என்ஜினையே திருடிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    பூர்ணியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள யார்டில் பழுதான ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யார்டுக்கு திருட்டு கும்பல் சுரங்க பாதை அமைத்து உள்ளது. அந்த பாதை வழியாக யார்டுக்கு வரும் ரெயில்களில் உள்ள இரும்பு பொருள்களை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளனர்.

    பல மாதங்களாக நடந்து வந்த இத்திருட்டை அதிகாரிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் உச்சக்கட்டமாக ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

    பூர்ணியா மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக டீசல் ரெயில் என்ஜின் ஒன்று காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்றுள்ளது.

    இதுபோல ரெயில் பாலத்தில் உள்ள இரும்பு போல்டு மற்றும் நட்டுக்களையும் இக்கும்பல் திருடி விற்றுள்ளனர்.

    இவை அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார் இவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பீரோ உடைக்கப்பட்டு 1 ஜோடி தோடு, செயின் உள்பட ஒன்றரை பவுன் தங்க நகைகள் கொள்ளை.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிவாஜி நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகதீஷ் (வயது 30 ). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கும்பகோணம் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 1 ஜோடி தோடு, செயின் உள்பட ஒன்றரை பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் சம்பவத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

    இங்குள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரி ஒன்று வந்தது. லாரியை திருத்துறைப்பூண்டி உப்பூக்கார தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 53) ஓட்டி வந்தார்.

    கொள்முதல் நிலையத்தில் லாரியை நிறுத்திவிட்டு தான் ஏற்றி வந்த சாக்குகளை இறக்க லாரியின் பின்பகுதி கதவை சுப்பிரமணியன் திறந்து விட்டார்.

    அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
    • இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது29), இவரது தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட தால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனும தித்தனர். நவீன்குமார், தாய்க்கு உதவியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியிருந்தார். அவர் இரவு படுத்து தூங்கியபோது மர்ம நபர் செல்போனை திருடிச் சென்று விட்டார்.

    இதுபற்றி அறிந்த நவீன்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தினர்.

    மேலும் ஆஸ்பத்திரியில் அடிக்கடி செல்போன் திருட்டு நடந்து வந்ததால் இதில் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் நவீன்குமாரின் செல்போனை ஒரு முதியவர் திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட விவேகானந்தன்(59) என்பவரை கைது செய்தனர். அவர் திருடிய செல்போனை போலீசார் மீட்டு நவீன்குமா ரிடம் ஒப்படைத்தனர். போலீசில் சிக்கிய முதியவர் அரசு ஆஸ்பத்திரியில் அடிக்கடி தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அரசு அனுமதியின்றி பழமையான கட்டங்களை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமை வகித்தார்.

    ஒன்றிய பொருளாளர் விடுதலை பாண்டி, ஒன்றிய துணை செயலாளர்கள் மாரிமுத்து, அம்பை முருகேஷ், ராஜவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்செல்வன், ஒன்றிய செயலாளர் துரை.ஈழராஜா, நகரச் செயலாளர் குணா.கண்ணதாசன் ஆகியோர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆட்சியின்போது மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டம், உறிஞ்சிக் குழாய் அமைக்கும் திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீதும், பழமையான அரசு கட்டிடங்களை அனுமதி இன்றி இடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இறந்து கிடப்பது யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
    • பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வடக்கிலிருந்து பெரமையா கோயில் சந்திப்பு வழியாக பெரிய கோட்டை செல்லும் சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்ததை பொதுமக்கள் பார்த்து மதுக்கூர் போலீஸ் நிலை யத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    ஆனால் இறந்து கிடப்பது யார் ? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மதுக்கூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது.
    • உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கோவை:

    கோவை ஆலந்துறை செம்மேடு அருகே உள்ள பட்டியார் கோவில்பதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 73). கூலித் தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர். பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த கருப்பனை ஆம்புலன்சு மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்த புரம் பச்சமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரம சிவம் (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, கண வரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றி ருந்தார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரமசிவத்தை உள்நோயாளியாக அனு மதித்தனர். இதற்கிடையே அவர்களது மகள் தனலட்சுமி தந்தைக்கு உடைகள் எடுப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து இந்த திருட்டை அரங்கேற்றியுள்ள னர்.

    இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இதற் கிடையே பாளையங் கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவமும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரே நாளில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.
    • மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கருப்பாயி ஊரணி சின்னப்பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பு (வயது43). இவர் வண்டியூர் கண்மாய்க்கரைக்கு மீன் பிடிக்க சென்றார்.வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சின்னக் கருப்பு தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பஞ்சு மாட்டுத்தாவனி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னக் கருப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாட்டுத்தாவணி போலீசார் சின்னக்கருப்புவின் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருப்ப ரங்குன்றம் ராஜீவ்காந்தி 4-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அருண்பாண்டி (24).இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உறவினருடன் திருப்பரங்குன்றம் சரவணபொய்கைக்கு குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கணேசன் திருப்ப ரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண்பாண்டியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வாலிபர் அருண் பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.
    • கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்கண்டன்.

    இவரது மகன் சிவபிரகாசம் (வயது47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், ரம்யா, நித்யா, சந்தியா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

    சிவபிரகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் தண்டுகாரன்பட்டியில் உள்ள சிவபிரகாசத்தின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையொட்டி உறவினர் வீட்டின் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் நேற்று தெருக்கூத்து நடைபெற்றது. அதனை பார்ப்பதற்காக சிவபிரகாசம் வீட்டில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.

    இந்த நிலையில் சென்றாய பெருமாள் கோவில் பின்புறம் பகுதியில் உள்ள புதரின் அருகே சிவபிரகாசம் கை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை இன்று காலை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைநதனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் மகன், மகள்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    சம்பவ குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் தொப்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது சிவபிரகாசத்தை மர்மநபர்கள் யாரோ சிலர் கையை கட்டிப்போட்டு அடித்து கொன்று விட்டு சுமார் 200 மீட்டர் தொலைவில் இழுத்து வந்து புதரின் அருகே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் யாராவது அடித்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.
    • கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது.

    கேரளாவில் 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் வெல்டிங் மூலம் எந்திரங்களை உடைத்து ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல், கண்டெய்னர் லாரியில் தப்பி செல்லும்போது நாமக்கல் அருகே பிடிபட்டது.

    அப்போது அந்த லாரியில் இருந்த 7 பேரில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அசார்அலி என்பவன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த கும்பல் சென்னையில் வைத்து திட்டம் தீட்டி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் கோவையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.

    அதாவது கார்டை சொருகி நம்பரை அழுத்திவிட்டு பணத்திற்கான தொகையை டைப் செய்து விட்டு காத்திருந்தால் டேப் வரை வந்து பணம் நின்று விடும். அதன்பிறகு பொதுமக்கள் எந்திரத்தில் பணம் வராததால் ஏமாற்றத்துடன் வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க சென்று விடுவர்.

    தொடர்ந்து வெளியே காத்திருக்கும் 2 வாலிபரில் ஒருவர் உள்ளே சென்று, எந்திரத்தில் ஒட்டியுள்ள டேப்பை எடுத்துவிட்டு அங்கு குவிந்து நிற்கும் பணத்தை அள்ளி சென்று விடுவார். முதலில் ரத்தினபுரி ஆறு மூக்கு பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் மேற்கண்ட நூதன பணம் திருட்டு தொடங்கியது.

    பின்னர் அதே வாலிபர்கள் ஆவாரம்பாளையம், கருமத்தம்பட்டி, போத்தனூர் பகுதிகளிலும் ஏ.டி.எம். எந்திரத்தில் டேப் ஒட்டி இதேமுறையில் பணத்தை திருடி சென்று உள்ளது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வரும் 2 வெளிமாநில வாலிபர்கள் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து அங்கு பணம் வரும் எந்திர பகுதியில் டேப்பை ஒட்டிவிட்டு வெளியே வருகிறார்.

    தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துவிட்டு பணம் வராமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பின்னர் இன்னொரு நபர் உள்ளே சென்று எந்திரத்துக்குள் சிக்கி குவிந்து கிடக்கும் பணத்தை எடுத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்ட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து கோவை மாநகர போலீசார் கண்காணிப்பு காமிராவில் சிக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும கன்டெய்னர் கொள்ளையன் அசார்அலியிடம் காட்டி விசாரணை நடத்தினர். ஆனால் அவன், இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளான். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே கோவையில் கடந்த சில நாட்களாக கைவரிசை காட்டி வரும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆவடியில் நடந்த ஏ.டி.எம். பணம் கொள்ளையில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கோவையில் சுற்றி திரியும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத் ராவ், முன்னாள் ராணுவ வீரர்.

    இவரது மனைவி சந்திராபாய் (வயது 75). தம்பதியினருக்கு ரமேஷ் ராவ், சீனிவாச ராவ் என்ற மகன்களும், லட்சுமிபாய் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விஸ்வநாத்ராவ் கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து சந்திராபாய், மகள் லட்சுமி பாய் கட்டிய வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி பாய் வழக்கம் போல் தனது தாய் சந்திரா பாய்க்கு இன்று காலை 7 மணி அளவில் போன் செய்தார்.

    அப்போது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமிபாய் உடனடியாக, அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் அண்ணன் ரமேஷ் ராவ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரமேஷ் ராவ் மற்றும் உறவினர்கள் உடனடியாக சென்று பார்த்தனர்.

    அப்போது சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுவற்றில் ரத்த காயங்கள் இருந்தது. அவரது ஆடைகளும் கலைந்து கிடந்தது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கீர்த்தி, மங்கையர்கரசி, பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-

    மூதாட்டி தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மர்மகும்பல் திட்டமிட்டு, மூதாட்டியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்துள்ளனர். இறந்தகிடந்த சந்திராபாயின் பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருப்பதோடு, வீட்டின் சுவற்றில் ரத்தக்கரைகளும் படிந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×