search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத ஆண் பிணம்
    X

    சாலையோரத்தில் இறந்து கிடக்கும் முதியவர்.

    அடையாளம் தெரியாத ஆண் பிணம்

    • இறந்து கிடப்பது யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
    • பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வடக்கிலிருந்து பெரமையா கோயில் சந்திப்பு வழியாக பெரிய கோட்டை செல்லும் சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்ததை பொதுமக்கள் பார்த்து மதுக்கூர் போலீஸ் நிலை யத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    ஆனால் இறந்து கிடப்பது யார் ? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மதுக்கூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×