என் மலர்
கடலூர்
- தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வக்கீல் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
- மாவட்டம் முழுவதும் உள்ள 32 அணிகள் பங்கேற்கின்றன.
கடலூர்:
கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதன் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வக்கீல் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 32 அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இறுதி போட்டி வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.
- சாமுவேல் புதுவை மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு பண்ருட்டிக்கு திரும்பினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல். கொத்தனார். இவரது மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக பண்ருட்டி வந்தார்.
அங்கிருந்து பஸ் மூலம் புதுவை மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு பண்ருட்டிக்கு திரும்பினார். நேற்று பிற்பகல் 2 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்த போது வெய்யில் தாங்காமல் மயங்கி விழுந்தார். இவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 10 நாட்களாகவே இங்கு வசிப்பவர்கள் காய்ச்சல், உடல் வலி போன்றவைகளால் அவதியுற்று வந்தனர்.
- இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
கடலூர்:
விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாகவே இங்கு வசிப்பவர்கள் காய்ச்சல், உடல் வலி போன்றவைகளால் அவதியுற்று வந்தனர். இவர்கள் தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் வெளிப்புற நோயாளி களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இத்தகவல் மங்கலம்பே ட்டை மருத்துவ அதிகாரி களுக்கு தெரிய வந்தது. மேலும், 9-க்கும் மேற்பட்டோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் டாக்டர் பிரதாப் பிரதாப், வட்ட சுகாதார மேற்பார்வையாளர் ரவிசந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், அபினாஷ், முல்லைநாதன், நர்சுகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் புதுக்கூரைப்பேட்டைக்கு இன்று காலை வந்தனர். இவர்கள் கிராமத்தில் உள்ள வீதிகளில் பிளிச்சிங் பவுடர் தெளித்தனர். கிராமம் முழுவதும் கொசு மருந்து அடித்தனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். காய்ச்சல் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், தனிமைப்படுத்தி க்கொண்டு சிகிச்சை பெற வலியுறு த்தினர். அவர்களுக்கு ஊசிகள் மற்றும் மாத்திரைகள் வழங்கினர். தொடர்ந்து கிராம மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் புதுக்கூரைப்பேட்டை கிராம மக்களிடையே அச்சமும் பரபரப்பும் நிலவுகிறது.
- கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- உடல் மனம் இரண்டும் நேர்கோட்டில் சென்று, மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.
கடலூர்:
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம். இங்கு கால்பந்து, கிரிக்கெட், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.இந்நிலையில் இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அரசு பள்ளி மைதானத்திற்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் வந்தார். அப்போது கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சியில் ஈடுபட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களிடையே பேசினார்.
அவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், மாணவ ர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் கூறும்போது, விளை யாட்டில் ஈடுபடும்போது உடல் மனம் இரண்டும் நேர்கோட்டில் சென்று, மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். அதனால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கினேன் என தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தமிழ்நாடு போலீஸ் துறை ஆக்கப்பூர்வமான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்தார். அப்போது தனிப்பிரிவு போலீசார் பாலமுருகன், சீனு, ராமு, ஜனா, மணிகண்டன் உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.
- வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர்.
- பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடலூர்:
காட்டுமன்னா ர்கோவில் ஓமாம்புலியூர் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான டன் மணல் கனரக வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்டு வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர். இதுமட்டுமல்லாமல் வெளியில் இருந்து வரப்படும் கனரக வாகனங்களுக்கு மணலை விற்பதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொது மக்களுக்கு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த மணல் கொட்டி விற்பனை செய்வதற்கு விளைநிலத்தை வீணடிப்பததையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து நேரடியாக மணலை அள்ளுவதற்கு வழிவகை செய்யாவிட்டால் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அகில இந்தியவிவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
- பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- தனிப்படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் பார்வை இழந்தனர்.இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் தனிப் படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்தஅன்பழகன் (60 மதகடிப்பட்டு சென்று 12 சாராய பாக்கெட் வாங்கி கொண்டு வந்து புலவனூர் கர்ம காரிய கொட்டகை அருகில்விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை த்தொடர்ந்து அவரைகைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டி-சென்னை சாலையில் ெரயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடலூர்:
பண்ருட்டியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சாலையில் உள்ள ரயில்வே கேட் மற்றும் கேட் லாட்சை நிரந்தரமாக மூடரயில்வே நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து இன்று காலை பராமரிப்பு பணியினால் தற்காலிகமாக ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே கேட்டை மூடினார். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பாதசாரதிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
- அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார்.
கடலூர்:
கடலூர் வண்டி குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 35). கூலி தொழிலாளி. நேற்று ராஜீவ் காந்தி தனது உறவினரிடம் குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் மயங்கி கீழே கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ் காந்தி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒருவரின் கரும காரிய நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கஒரு குடும்பத்தினர் வந்தனர்.
- 8 பெண்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅடுத்த செம்மேடு ஏரிப்பாளையம்கிராமத்தில் இருந்துஆட்டோ இன்று காலை பண்ருட்டி நோக்கி வந்தது.இந்த ஆட்டோவில் உறவினர் ஒருவரின் கரும காரிய நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கஒரு குடும்பத்தினர் வந்தனர். இந்த ஆட்டோசேலம் மெயின் ரோடுவளைவில் திரும்பும் போது எதிரே மணப்பாக்கத்தில் இருந்து வந்த மற்றொருஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்ேடா டிரை வர்கள் மற்றும் ஆட்டோ வில் வந்த 8 பெண்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றுஅனைவரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துஇது குறித்து விசாரணை நடத்தினர்.
- பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த இஸ்மாயில் (வயது54 ) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம்- சேலம் மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 65), இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் அங்குசெட்டி பாளையம் சிற்றரசு அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் அடிபட்டு கிடந்தார்.அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திடீர் மழை காரணமாக ஒரு கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் குறைந்தது.
- ஈரப்பதற்காற்று உள்ளே வரும் சமயத்தில் அனல் காற்று கணிசமாக குறைந்து காணப்படும்.
கடலூர்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்தது. திடீர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 101 டிகிரி வெயில் அளவு பதிவானதும் குறிப்பிடத் தக்கதாகும். தற்போது தமிழகத்தில் சென்னை, கடலூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி கடந்த மே 4-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வழக்கத்தை விட அதிக அளவில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கி கடும் அனல் காற்று வீசி வந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த வண்ணம் இருந்து வந்தது. மேலும் கடலூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறு, இளநீர், கரும்பு ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அருந்தி வெயிலின் தாக்கத்தை குறைக்க முயன்றாலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் வெயில் காரணமாக முகத்தில் துணி கட்டிக் கொண்டும், குடைப்பிடித்த படியும் சென்றதையும் காணமுடிந்தது.
இந்த நிலையில் மாலை வரை சுட்டெரிக்கும் வெயில் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் கடுமையான புழுக்கத்தை ஏற்படுத்தும் காரணத்தினால் பொதுமக்கள் இரவு தூக்கம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருவதோடு முதியவர்களுக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்பும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் வெயில் மற்றும் அனல் காற்று அதிகரித்து வரும் காரணங்கள் குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்ட போது கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து தற்போது சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருகின்றது. மேலும் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததை காண முடிந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மோக்கா புயல் உருவாகி மியான்மரில் கரையை கடந்தது. இதன் காரணமாக காற்றில் உள்ள ஈரப்பதம் பெருமளவில் குறைந்து தற்போது மிக குறைந்த அளவில் ஈரப்பதற்காற்று கடல் பகுதியில் வீசி வருகின்றது. மேலும் மேற்கு திசையில் இருந்து காற்று தீவிரமாக வீசி வருகின்றது. இந்த காற்றானது வறண்ட காற்றாகும். இந்த காற்று வங்க கடலில் இருந்து வீசும் நேரத்தில் எப்போதும் மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதற்காற்று உள்ளே வரும் சமயத்தில் அனல் காற்று கணிசமாக குறைந்து காணப்படும்.
ஆனால் தற்போது மேற்கு திசையிலிருந்து வரக்கூடிய காற்று அதி கரித்து வரும் நிலையில் கிழக்கிலிருந்து வரக்கூடிய ஈரப்பதற்காற்று சற்று காலதாமதமாக வருவதால் வெப்ப சலனம் அதிகரித்து அனல் காற்று கடுமையாக வீசி வருகின்றது. ஆனால் நேற்று கிழக்கில் இருந்து வரக்கூடிய ஈரப்பதற்காற்று சரியான நேரத்தில் உள்ளே வந்ததால் நேற்று முன்தினம் 104 டிகிரி வெயில் இருந்த நிலையில் நேற்று 100 டிகிரி வெயிலாக குறைந்து காணப்பட்டது. இன்று முதல் 3நாட்களுக்கு வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசக்கூடிய நிலையில் தான் தற்போது வரை உள்ளது. இதன் பிறகு வானிலை மாற்றம் காரணமாக எதுவாயினும் நடை பெறலாம். ஆகையால் பொது மக்கள் மற்றும் முதியவர்கள் அனல் காற்று மற்றும் சுட்டெ ரிக்கும் வெயில் காரணமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






