கடலூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டி

தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வக்கீல் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள 32 அணிகள் பங்கேற்கின்றன.
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதன் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வக்கீல் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 32 அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இறுதி போட்டி வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com