என் மலர்tooltip icon

    கடலூர்

    • ஜமுனாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
    • மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் கண்டக்காட்டை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜமுனா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜமுனாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மே மாதம் 13-ந்தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண் டார். பலத்த தீக்காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்த்துசை பலனின்றி ஜமுனா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோக்களால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினர் அதிக அளவு புகார்கள் கூறியிருந்தனர்.
    • ஸ்டிக்கர் ஒட்டப்படாத ஆட்டோக்கள் இயக்கக் கூடாது.

    கடலூர்:

    பண்ருட்டியில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்கு வரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பண்ருட்டி முக்கிய சாலை சந்திப்பு, ராஜாஜி சாலை, பஸ்வெளியே வரும் வழி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் விதிகளை மீறி நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினர் அதிக அளவு புகார்கள் கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் எஸ்.பி, பண்ருட்டி டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவுபடி பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவிலில் பண்ருட்டி போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் அழைத்துப் பேசினார்.

    போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக் குமார், சண்முகராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் அனைத்து ஆட்டோக்களிலும் போக்கு வரத்து போலீஸ் சார்பில் வழங்கப் பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும். ஸ்டிக்கர் ஒட்டப்படாத ஆட்டோக்கள் இயக்கக் கூடாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடை யூறாக சாலை களில் ஆட்டோவை நிறுத்தி அதிக அளவுபயணிகளை ஏற்றி செல்லக்கூடாது. யூனிபார்ம்கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்கள்.

    • தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் வாழ்க்கை தரத்தினை சீராக மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனம் பயிர் அபிவிருத்தி மற்றும் அதன் பயன்பாட்டு மேலாண்மை குறித்து கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் 60 எண்ணிக்கை சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு ரூ. 9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவன விரயத்தை 30-40 சதவீதம் குறைக்கலாம். இத்திட்ட த்தின் கீழ் இரண்டு குதிரை திறன் கொண்ட மின்சா ரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

    இந்த திட்ட த்தில் பயன்பெற குறைந்த பட்சம் 2 கால்நடைகள் அல்லது 2 கால்நடை அலகுகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனம் வைத்திருக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது. சிறு, குறு மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இதன் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன புற்களை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்க ஏக்கருக்கு ரூ. 3000 வீதம் மானியம் வழங்க ரூ. 60,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விவசாயிகள் சொந்தமாக கால்நடைகளும் குறைந்த பட்சம் 0.50 ஏக்கர் தீவனம் ஊடுபயிராக பயிர் செய்ய இடமும் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் பயன்பெறும் விவசாயிகள் முறையாக நீர் சேகரிப்பு மேலாண்மை செயல்படுத்த வேண்டும். அதிகமாக மகசூல் செய்யப்படும் தீவனங்களை ஊறுகாய் புல்லாக மாற்றி சேகரிக்கலாம். அதை அருகில் உள்ள விவசாயிகள் விற்பனை செய்யலாம். இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாக கூறியுள்ளனர்.
    • பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும் என அவர் கூறினார்.

    கடலூர்:

    விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளியில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது பள்ளி மாணவிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாகவும், அதனால் தங்களால் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சமூக விரோதிகள் சுவர் ஏறி குதித்து வந்தாலும் அதனை கண்காணிக்க முடியாத நிலையில் மரங்கள் புதர் போல சூழுந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த டி.எஸ்.பி விருத்தாசலம் போலீஸ் கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், ஆலடி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை மற்றும் கருவெப்பிலங்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலைய ங்களில் பணிபுரியும் காவலர்களை கொண்டு பள்ளியின் மைதானத்தை தூய்மை ப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமையில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில், 20 மகளிர் போலீசார் உட்பட 60க்கும் மேற்பட்ட காவலர்கள் விளையாட்டு மைதா னத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி மைதானத்தில் மண்டி கிடந்த புதர்கள், புற்கள் உள்ளிட்டவற்றை மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றை கொண்டு தூய்மைபடுத்தினர். இது பற்றி டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறுகையில், பள்ளி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகை யில் தூய்மை பணி நடைபெற்றதாகவும், பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும் என அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
    • நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வழங் கும் பயிற்சியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 99 நிள அளவர் மற்றும் வரை வாளர் ஆகியோர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே தனியார் கல்லூ ரியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் அருண் தம்பு ராஜ் நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வழங் கும் பயிற்சியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், இப்பணியில் ஈடுபடும் அனைவரும் மக்கள் பணி தான் மிக முக்கியமாக கருதி பணி புரிய வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றுவரும் நிலஅளவர் மற்றும் வரைவா ளர்கள் பயிற்சி யினை முழுமையாகவும், ஆர்வத்துடனும் அனைத்து தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். களத்தில் பணியாற்றும் போது நேர்மையுடனும், பொதுமக்களுக்கு சேவை புரியும் எண்ணங்களுடனும் பணியாற்ற வேண்டும் என பேசினார். அப்போது உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, கோட்ட ஆய்வாளர்கள் நாராயணன் பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது.
    • இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 15 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதோடு, அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருவதோடு, பழச்சாறுகள், நுங்கு, கரும்பு சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்தி வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் குறைத்து வருகின்றனர். இருந்த போதிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் கடும் வெயில், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் சீதோஷ்ண மாற்றமும் ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச வெயிலாக 104.36 டிகிரி அளவில் வெயில் அளவு பதிவாகி கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருவதை காண முடிகிறது. மேலும் சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருவதால் அனல் காற்று வீசி வருவதோடு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து கடுமையான அனல் காற்று வீசி வருவதால் வறண்ட வானிலை ஏற்பட்டு கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சரியான முறையில் நிலை கொண்டு மழை அதிகளவில் பெய்து வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புண்டு. இது மட்டுமின்றி கிழக்கு திசையில் இருந்து வரக்கூடிய ஈரப்பதகாற்று சரியான முறையில் வரவில்லை. ஆகையால் தமிழக அரசின் அறிவுறுத்திலின் பேரில் பொதுமக்கள் காரணமின்றி வெளியில் சுற்றுவதை குறைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.

    • கல்லூரி மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே கேப்பர்மலையைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கடலூர் புதுநகரை சேர்ந்த 16 வயது மாணவன் கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி மாணவன் டியூஷனுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவனை தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மின் ஊழியர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
    • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் பகுதியில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மின் ஊழியர் யுவராஜ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மின் ஊழியர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாரத விதமாக திடீரென்று மின் ஊழியர் யுவராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ராம்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.
    • நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.இவரும் அவரது பக்கத்து ஊரான வாணியம்பாளையத்தை சேர்ந்த நிர்மலா (22) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நிர்மலாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்றும் ராம்குமார் கடத்தி சென்றதாகவும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிர்மலாவை தேடி வந்தனர். இதற்கிடையில் காணாமல் போன நிர்மலா, ராம்குமார் உடன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.
    • இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது -

    தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத்திறனா ளிகள் சுயதொழில்புரிந்து முன்னேற்றம் அடைய மானியத்துடன் கூடிய வங்கி கடனும் மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும் ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது. 

    தற்போது, வருவாய் கிராமத்திற்கு ஒரு தனியார் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்திரவி ட்டதை தொடர்ந்து, கிராம தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய உரிமம் பெற இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இ-சேவை அமைக்க விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பெறுவ தற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்) மா வட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் அனுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • வெங்கடாஜலபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.
    • நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த ரூபாநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது வீட்டில் பாம்பு நுழைந்ததால் வெங்கடாஜலபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வெங்கடாஜலபதி வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விட்டனர். இதே போல, மங்கலம்பேட்டை அடுத்துள்ள பழையபட்டினம் கிராமம், முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது சாலிஹ் என்பவர் வீட்டின் சமையல் அறையில் புகுந்த 6அடி நீள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.

    • கட்டிடத்தின் மாடியில் இன்டர்நெட் கேபிள் சரி செய்யும் பணியில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டு வந்தார்.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இன்று காலை ஒரு கட்டிடத்தின் மாடியில் இன்டர்நெட் கேபிள் சரி செய்யும் பணியில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த வாலிபர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி 30 அடி உயரம் கொண்ட மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதனை செய்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுபற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், கடலூர் முதுநகர் சேடப்பாளையம் பகுதியை சேர்ந்த விமல் (வயது 25) என்பதும் தனியார் நெட்வொர்க் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக ஏற்படுத்தியது.

    ×