என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி
- ஜமுனாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
- மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் கண்டக்காட்டை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜமுனா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜமுனாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மே மாதம் 13-ந்தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண் டார். பலத்த தீக்காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்த்துசை பலனின்றி ஜமுனா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






