என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
கடலூர் அருகே டாஸ்மாக் குடோன் சுமை தூக்கும் தொழிலாளர்கள்பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டம்
- சிப்காட் வளாக பகுதியில் டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகம் மற்றும் குடோன் இயங்கி வருகின்றது.
- கூலி வழங்குவதில் அடாவடி வசூல் என சரமாரி புகார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் அடுத்த சிப்காட் வளாக பகுதியில் டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகம் மற்றும் குடோன் இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் குடோன் மூலம் மது பாட்டில்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு பெட்டிக்கு 7 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு சிலர் இவர்களுக்கு கூலியாக வழங்கக்கூடிய 7 ரூபாயிலிருந்து 3 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி பணத்தை வசூல் செய்வதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது தொடர்பாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதி காரியிடம் புகார் அளித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 60-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழி லாளர்கள் திடீரென்று டாஸ்மாக் குடோன் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத்தகவல் அறிந்த போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமை தூக்கும் தொழி லாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதமாக இதே நீடித்து வருவதால் எங்கள் கோரிக்கையை நிரந்தரமாக தீர்க்கும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டாஸ்மாக் குடோனில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் ெகாண்டு செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் போராட்டம் நீடித்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.






