search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே மனைவியுடன் தகராறு கணவன் பூச்சி மருந்து குடித்து சாவு
    X

    கடலூர் அருகே மனைவியுடன் தகராறு கணவன் பூச்சி மருந்து குடித்து சாவு

    • மனமுடைந்த சுப்பிரமணியன் பூச்சி மருந்து குடித்து மயங்க நிலையில இருந்தார்.
    • திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருவந்திபுரம் கே.என். பேட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 59). சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி ஜோதிக்கும் குடும்ப சண்டை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் பூச்சி மருந்து குடித்து மயங்க நிலையில இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×