என் மலர்
தெலுங்கானா
- 4,200 பயணிகளை ஏற்றிச் செல்ல 84 அரசு பஸ்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர்.
- பயணிகளுக்காக சென்னை நோக்கி மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தெலுங்கானாவில் மழை வெள்ளம் காரணமாக செகந்திராபாத்-விசாகப்பட்டினம் கோதாவரி எக்ஸ்பிரஸ்; புதுடெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் விரைவு ரெயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனப்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டன.
ரெயில் பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விஜயவாடா ரெயில் நிலையத்திற்கு 4,200 பயணிகளை ஏற்றிச் செல்ல 84 அரசு பஸ்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர்.
கோதாவரி எக்ஸ்பிரஸ் பயணிகளுக்காக விஜயவாடா ரெயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் சார்மினார் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்காக சென்னை நோக்கி மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஒரே நேரத்தில், பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் பயணிகளை டானாபூருக்கும், தானாபூரில் இருந்து பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் கொண்டு செல்ல 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
நெக்கொண்டாவில் இருந்து மொத்தம் 74 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 5,600 பயணிகள் காசிப்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்.
காசிப்பேட்டையில் இருந்து டானாபூருக்கு ஒரு சிறப்பு ரெயிலும், காசிபேட்டையில் இருந்து பெங்களூருக்கு மற்றொரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டன. 10,000 பயணிகள் பாதுகாப்பாக அவர்களது செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
- தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதலவர் கேசிஆர் மகன் கேடிஆர் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
- கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்
மழை வெள்ளம்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையினால் தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
வார்த்தைப் போர்
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைக் கையாளுவது குறித்து காங்கிரஸ் ஆளும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் எம்எல்ஏவும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின்[கேசிஆர்] மகனுமான கேடிஆர் இடையில் கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
கேடிஆரின் சந்திரபாபு நாயுடு ரெபரென்ஸ்
'ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 6 ஹெலிக்கப்டர்களை அம்மாநிலத்தில் மீட்புப் பணிக்கு அனுப்பியுள்ளார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு ஒரு ஹெலிக்கப்டரை கூட மீட்புப் பணிக்கு அனுப்பவில்லை. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது, கம்மம் மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக இருந்தும் அப்பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பொறுமையிழந்த மக்கள் வீதியில் இறங்கி உதவி கேட்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது வெள்ள சமயங்களில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் ரூ.5 லட்சம் தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் அரசை கேடிஆர் சாடியுள்ளார்.

ரேவந்த் ரெட்டி பதிலடி
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கேசிஆர் தனது பார்ம் ஹவுஸை விட்டு வெளியே வரவே இல்லை. அதேநேரம் கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். நானும் அமைச்சர்களும் தான் இங்குக் களத்தில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் வானிலை மோசமாக உள்ள காரணத்தால் தான் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரமும் உள்ளது என்று அமைச்சர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கேடிஆர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார்.
- ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
- கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.
ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.
மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
வீடு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மொட்டை மாடியில் அத்தியாவசிய பொருட்களை மாடியில் வைத்துவிட்டு, ஒருவர் நடந்து கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
- ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
- ஐதராபாத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
அமராவதி:
குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.
ஆந்திராவில் என்.டி.ஆர்., கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இவை உள்பட 5 மாவட்டங்களுக்கு உள்பட்ட 294 கிராமங்களில் வசித்து வரும் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணா நதிநீர் கரைபுரண்டு ஓடுவதால் பபட்லா மாவட்டத்தின் பிரகாசம் நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் 6 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழைக்கு ஆந்திராவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.
அங்கு மழை மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 17 குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் 100 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
கனமழையால் 62,644 ஹெக்டேர் நெல்பயிர்கள், 7,218 ஹெக்டர் பழத்தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக மாநில உள்துறை மந்திரி வெங்கலப்புடி அனிதா தெரிவித்தார்.
ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.
மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மாநிலம் முழுவதும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் 99 ரெயில்களை ரத்து செய்தும், 4 ரெயில்களை பாதியளவு ரத்து செய்தும் தெற்கு மத்திய ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. 54 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு உள்ளன.
மழை வெள்ளத்தால் தெலுங்கானா எதிர்கொண்டு வரும் மோசமான சூழல் குறித்து அறிந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தேசிய பேரிடர் மீட்புக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை, விசாகப்பட்டணம், அசாமில் இருந்து தலா 3 குழுவினர் ஐதராபாத் விரைந்தனர்.
இந்த மாவட்டத்தில் சுமார் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வரை கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் மாயமாகினர்.
இதனால் ஐதராபாத் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழை காரணமாக தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானாவில் ஐதராபாத், கம்மம் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
பேச்சுவார்த்தையின்போது, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கு தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
- செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- அதிகாரிகள் பேருந்தில் இருந்து பயணிகளை லாரியில் ஏற்றி கரை சேர்த்தனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த மழை பெய்தது.
இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சாலை எங்கும மழை நீர் தேங்கி நின்றது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி வெள்ள நீர் வெளியேறியதால், 45 பயணிகளுடன் விடிய விடிய வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கியது.
தங்களை காப்பாற்ற செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேருந்தில் இருந்து பயணிகளை லாரியில் ஏற்றி கரை சேர்த்தனர்.
பேருந்தில் சிக்கிய பயணிகள் இரவில் உணவு, குடிநீர் இன்றி குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.
- திடீரென கால் தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்பட்டார்.
- சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
திருப்பதி:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர்.
செல்லும் வழியில் நல்கொண்டா மாவட்டம் வெமுலபள்ளியில் நாகார்ஜூனா சாகர் அணையின் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர்.
அந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அதனை கண்டு ரசித்தனர். அப்போது குடும்பத்தை சேர்ந்த இளம்பெண், வெமுலப்பள்ளி பாலத்தில் உள்ள இடது கால்வாய் அருகே 'செல்பி' எடுக்க முயன்றார்.
அப்போது குடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்த அவர், செல்பி எடுக்க முயன்றபோது, திடீரென கால் தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்பட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் கால்வாயில் விழுந்த பெண்ணை கயிற்றால் கட்டி சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
தண்ணீரில் விழுந்த பெண்ணுக்கு காயங்கள் ஏதும் இல்லாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- மனைவி தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை உணர்ந்த சிவராஜ் மனைவியின் சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்தார்.
- தினமும் தனது மகள்களுடன் மனைவியின் சமாதிக்கு சென்று வணங்கி வருகிறார்.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி மானசா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சிவராஜ் தனது மனைவி மானசா மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் மானசா திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். உடல் ரீதியாக தனது மனைவி தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை உணர்ந்த சிவராஜ் மனைவியின் சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்தார்.
அதன்படி மானசாவின் சமாதியில் தன்னை பதிக்கும் வகையில் காதல் சின்னமான 8 அடி உயரத்தில் இதய வடிவிலான நினைவு சின்னத்தை அமைத்துள்ளார்.
தினமும் தனது மகள்களுடன் மனைவியின் சமாதிக்கு சென்று வணங்கி வருகிறார்.
ஷாஜகான் தனது மனைவி மீதான அன்பின் காரணமாக தாஜ்மஹால் கட்டினார். நான் மனைவியின் நினைவு என்றும் நிலைத்திருக்க காதல் நினைவுச்சின்னம் அமைத்துள்ளேன் என தெரிவித்தார்.
- கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கையை சமந்தா பாராட்டினார்.
- இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்.
மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.
நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையை சமந்தா பாராட்டினார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், "தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் வுமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம். இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.
கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின்- ரேவந்த் ரெட்டி.
- அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்?- உச்சநீதிமன்ற நீதிபதி.
ஒரு முதல் மந்திரி இப்படி பேசலாமா? நீதித்துறையை மதிக்காவிடில் விசாரணையை வேறு எங்கேயாவது மாற்றுவோம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் பாரத் ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு (சந்திரசேகர ராவ் மகள்) உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கவிதா திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
கவிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி "பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது'' எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையே ரேவ்ந்த் ரெட்டி, கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது தெலுங்கானா சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை மத்திய பிரதேச மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, ரேவந்த் ரெட்டியின் கருத்து குறித்து நீதிபதி கவாய் கூறியதாவது:-
ரேவந்த் ரெட்டி என்ன சொன்னார் என்பதை படித்து பார்த்தீர்களா? முதல்வரின் இத்தகைய அறிக்கைகள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அரசியல்சாசன பதவியில் இருக்கும் ஒருவர் கூறலாமா? அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நீதித்துறையை மதிக்காவிட்டால், விசாரணையை வேறு எங்காவது மாற்றுவோம். நாட்டில் உச்சபட்ச நீதிமன்றம் இதுதான்.
இவ்வாறு நீதிபதி கவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
"நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது அறிக்கைக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது எனக்கு நிபந்தனையற்ற மரியாதையும் உயர்ந்த மரியாதையும் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்" என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
- ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள்.
பெங்களூர்:
கர்நாடகாவில் முடா நில ஒதுக்கீட்டு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். இதையடுத்து கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி, முன்னாள் மந்திரி முருகேஷ் நிராணி, எம்.எல்.ஏக்கள் சசிகலா ஜொல்லே, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்க கவர்னர் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி கர்நாடக அரசு சார்பில் விதான்சவுதாவில் உள்ள காந்தி சிலையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்லப்போவதாக காங்கிரஸ் மாநில தலைவரும், கர்நாடக துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள் என்று அறிவித்து உள்ளார். கவர்னருக்கு எதிராக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.
- கடுமையான மணல் புழுதி மற்றும் வெப்பம் காரணமாக அவதி அடைந்தனர்.
- காரில் இருந்த எரிபொருளும் தீர்ந்து போனது.
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஷாபாஸ்கான். இவர் சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹாசா பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஷாபாஸ்கான் சக ஊழியருடன் வழக்கமான வேலைக்காக காரில் புறப்பட்டார். சவுதி அரேபியாவில் பரந்து விரிந்த மோசமான ரூபா அல் காலி பாலைவனத்திற்கு சென்றனர்.
பாலைவனத்தின் மையப்பகுதிக்கு சென்ற போது அவர்களது காரில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஎஸ் கருவி செயல் இழந்தது.
மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்களில் சிக்னல் கிடைக்காமல் எந்த வழியாக செல்வது என தெரியாமல் சிக்கித் தவித்தனர். கடுமையான மணல் புழுதி மற்றும் வெப்பம் காரணமாக அவதி அடைந்தனர். அவர்களிடம் இருந்த உணவு மற்றும் குடிநீர் காலியானது. காரில் இருந்த எரிபொருளும் தீர்ந்து போனது.
நீர் இழப்பு மற்றும் சோர்வு காரணமாக பாலைவனத்தில் மயங்கி விழுந்த இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். வெளியே சென்ற ஊழியர்கள் 5 நாட்களாக மீண்டும் பணிக்கு வராததால் காணாமல் போனதாக நிறுவனம் சார்பில் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் நீண்ட தேடுதலுக்கு பிறகு ஷாபாஸ்கான் மற்றும் அவருடன் சென்ற ஊழியரை போலீசார் பிணமாக மீட்டனர்.
- ரெயில் தனக்கு மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து பதற்றம் அடைந்தாலும், அந்த பெண் அசையாமல் படுத்துக் கொண்டார்.
- அவள் பாதுகாப்பாக தண்டவாளத்திலிருந்து எழுந்தாள்.
தெலுங்கானா மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வருவதை கண்ட பெண் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகர்பாத்தின் நவாந்த்கியில் ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திடீரென ரெயில் ஒன்று வருவதை கவனித்தார். உடனே அந்த பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.
ரெயில் தனக்கு மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து பதற்றம் அடைந்தாலும், அந்த பெண் அசையாமல் படுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவள் தலையை தூக்க முயன்றாலும், அந்த சம்பவத்தை படமெடுக்கும் ஒருவர் அவளை தலையை கீழே வைக்கும்படி அறிவுறுத்துகிறார்.
பதட்டமான சில நொடிகளுக்குப் பிறகு, ரெயில் கடந்து செல்கிறது. அவள் பாதுகாப்பாக தண்டவாளத்திலிருந்து எழுந்தாள். அவளது தோழியான மற்றொரு பெண், தண்டவாளத்தின் அருகே காத்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது.
இந்த சம்பவம் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது. அந்த பெண்ணின் சிந்தனை திறன் மற்றும் அதிர்ஷ்டம் அவரது உயிரை காப்பாற்றி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.






