என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • திருடனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
    • சாப்பாடு தாருங்கள் என அலறினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் நேற்று வாலிபர் ஒருவர் வீடுகள் மற்றும் அங்குள்ள ஒரு கோவிலை நோட்ட மிட்டபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்.

    அதைப் பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர் திருட வந்துள்ளார் என்பதை ஊர்ஜிதம் செய்தனர். இதைத் தொடர்ந்து வாலிபரை பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். அவரை சிலர் அடித்து உதைத்தனர்.


    அப்போது வாலிபர் கதறி அழுதார். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கள். ஆனால் என்னால் பசி தாங்க முடியவில்லை. சாப்பாடு தாருங்கள் என அலறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் தாக்குதலை நிறுத்தினர்.

    ஒரு வீட்டில் இருந்து புளியோதரை கொண்டு வந்தனர். கட்டி வைத்திருந்த திருடனை விடுவிக்காமல் அவர்களே ஊட்டி விட்டனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 21) என்பதும், வீடுகளில் திருட வந்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்தனர்.

    திருட வந்த வாலிபரை கட்டி வைத்து உணவு ஊட்டி விட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார்.
    • ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.

    கிராமத்தில் மைனர் போல சுற்றித்திரிந்த இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்திருந்தார்.

    அங்கு வந்த சிவக்குமார் மூதாட்டி தனிமையில் வசித்து வந்ததை தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து திடீரென மூதாட்டியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அறை கதவை பூட்டினார்.

    மூதாட்டி என்று கூட பார்க்காமல் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.

    காலையில் தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராமத்தில் உள்ள 6 பெண்களை சிவக்குமார் ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது மூதாட்டி என்று கூட பார்க்காமல் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

    இப்படியே விட்டால் இன்னும் பல கொடுமைகளை செய்வார். அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன.
    • லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஏராளமான விநாயகர் சிலைகள் பரிதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

    33-வது வார்டு காந்திநகர் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன. இந்த லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஷேக் லத்தீப் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விநாயகர் லட்டுக்களை அவர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    கடைசியில் 2 லட்டுகளையும் ரூ.20,016 மற்றும் 11,016-க்கு லத்தீப் குடும்பத்தினர் ஏலம் எடுத்தனர். லட்டு கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாகமடைந்தனர்.

    விநாயகர் சிலை வைத்த விழா குழுவினர் லத்தீப் குடும்பத்தினரிடம் லட்டுக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த விநாயகர் லட்டு ஏலம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கண்டெய்னர் விடுதி உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது.
    • மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

    தற்போது பல இடங்களிலும் தற்காலிக கண்டெய்னர் கட்டிடங்கள் பெருகி வருகிறது. விலை குறைவாகவும் எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடதிக்ரு கொண்டு செல்ல கூடியதாகவும் இருப்பதால் பலர் இந்த கண்டெய்னர் கட்டிடங்களை உருவாக்கி வருகின்றனர்.

    கண்டெய்னர் விடுதி, உணவகங்கள் உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது.

    முலுகு மாவட்டத்தில் உள்ள கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளிக் கட்டடம் கட்ட வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிசை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அப்பகுதியில் மழை பெய்தால் குழந்தைகள் படிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் அப்பகுதியில் புதிய பள்ளி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட வனத்துறையினர் அனுமதி கிடைக்காததால் புதுமையாக யோசித்து கண்டெய்னர் பள்ளிக்கூடத்தை மாவட்ட ஆட்சியர் உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே முலுகு மாவட்டத்தில் போச்சாபூர் கிராமத்தில் மருத்துவமனை வேண்டும் என்ற பழங்குடி மக்களின் கோரிக்கைக்கு இணங்க கண்டெய்னர் மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பழங்குடி மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
    • தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

    அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
    • ஒரு பொது பிரச்சனையும் இருந்தால் அவர்கள் அந்த விஷயத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஜக்கா ரெட்டி ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். எந்த ஒரு பொது பிரச்சனையும் இருந்தால் அவர்கள் அந்த விஷயத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.

    அதனை மீறி தெலுங்கானா முதல் மந்திரியை விமர்சித்தால் காங்கிரஸ் கட்சியினர் அவர்களை பிடித்து நாக்கை அறுப்பார்கள்.

    அது பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே. டி.ராமராவ் அல்லது அவருடைய தந்தை முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவாக இருந்தாலும் அவர்களின் நாக்கும் அறுந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூத்த காங்கிரஸ் தலைவரின் இந்த மிரட்டல் பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன.இதற்கு பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கு போட்டியாக ரேவேந்த்ரெட்டியின் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திட்டத்தின் கீழ் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
    • திருநங்கைகளுக்கு தனித்தனியான சீருடைகளை உருவாக்கும் பணியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

    ஐதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கைகள் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கென்று தனித்தனி சீருடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின் கீழ் தெலுங்கானா அரசாங்கம் இந்தியாவின் முதல் திருநங்கைகள் சார்ந்த அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்த திட்டத்தின்படி, திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு பணியமர்த்தப்பட்டவுடன், அவர்கள் ஐதராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு உதவ சிறப்புப் பயிற்சி பெறுவார்கள்.

    அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், திருநங்கைகள் பணியமர்த்தப்படுவதால் மென்மையான சாலை நிர்வாகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "அவன்/அவள்" மற்றும் "அவன்/அவள்" தனி நபர்களுக்கு தனித்தனியான வடிவமைப்புகளுடன், திருநங்கைகளுக்கு தனித்தனியான சீருடைகளை உருவாக்கும் பணியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

    கூடுதலாக, பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதற்காக சம்பளம் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

    • பிஆர்எஸ் எம்.எல்.ஏ.-க்கள் 10 பேர் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர்.
    • அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிஆர்எஸ் தொடர்ந்து வலியுறுத்தல்.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியில இருந்து தொடர்ந்த எம்.எல்.ஏ.-க்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

    இதுவரை 10 எம்.எல்.-க்கள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இந்த நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ. கவுசிக் ரெட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சேலை மற்றும் வளையல்களை கையில் காட்டியவாறு, பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.-க்கள் இவைகளை அணிய வேண்டும். எம்.எல்.ஏ.-க்கள் பெயர்களை குறிப்பிட்டு நீங்கள் ஆண்கள் அல்ல. ஆகவே இதை அணியுங்கள்" என்றார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் பந்த்ரு சோபா ராணி, மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கும் போது ஷூவை காண்பித்தார். மேலும், கவுசிக் ரெட்டி பெண்களை இழிவுப் படுத்தியதாகவும் தெரிவித்தார். அத்துடன் நீங்கள் வளையல், சேலையை காட்டுனீர்கள். நாங்கள் உங்களுக்கு செருப்பை காண்பிக்கிறேன். நீங்கள் பெண்களை இழிவுப்படுத்தினால் நாங்கள் உங்களை செருப்பால் அடிப்போம்" என்றார்.

    மாநில மகளிர் கூட்டுறவு வளர்ச்சிக் கழகத் தலைவி மற்றும் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஆவார்.

    தேர்தலுக்கு பின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகிய 10 எம்.எல்.ஏ.-க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிஆர்எஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    • தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
    • ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 கோடியை நிவாரண நிதியாக பவன் கல்யாண் வழங்கியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    ஆந்திராவிற்கு ரூ.1 கோடி ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வழங்கியிருந்தார்.

    மேலும் ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 கோடியை தனியாகவும் அவர் வழங்கியுள்ளார்

    இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.1 கோடி ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக பவன் கல்யாண் வழங்கியுள்ளார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

    • சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.
    • வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

    தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் கங்காதர். பாம்பு பிடிக்கும் தொழிலாளி. இவரது மகன் சிவராஜ் (வயது 20).

    பாம்பு பிடிக்க செல்லும்போது சிவராஜ் தந்தையுடன் சென்று பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டார்.

    மேலும் சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றார்.

    வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

    பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரிலீஸ் எடுத்தார். அப்போது நாக பாம்பு சிவராஜின் நாக்கில் கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிவராஜை மீட்டு பாண்சுவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    சிவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
    • ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விஸ்கி ஐஸ்க்ரீம் விற்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் சரத் சந்திரா ரெட்டி என்பவர் நடத்தி வந்த ஐஸ்கிரீம் பார்லரில் ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11.5 கிலோ எடையுடைய 23 விஸ்கி ஐஸ்கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற கடைகள் வேறு எங்கும் செயல்பட்டு வருகிறதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தெலுங்கானாவில் போலீசார் என்கவுண்டர் நடத்தினர்.
    • இதில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொதகுடம் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசாரும் அவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்த என்கவுண்டரில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறைவிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடந்த இரு தினங்களுக்கு முன் சத்தீஸ்கரின் பீஜப்பூர் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படை நடத்திய என்கவுன்டரில் 9 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×