என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
- வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் நீர்பனியின் தாக்கம் தொடங்கி, பின்பு உறைபனியின் தாக்கம் தலைதூக்க ஆரம்பிக்கும்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் உறைபனி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூரில் பனியின் தாக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று காலை 2.5 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீர்ப்பனி மற்றும் உறைபனியின் தாக்குதல் ஒருபக்கம் நீடித்து வரும் நிலையில் இன்னொருபுறம் பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
எனவே ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல்தரைகளிலும் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.
இதனால் அந்த பகுதியே தற்போது வெள்ளை கம்பளி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்தது. மேலும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது.
எனவே வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா, லவ்டேல் பட்பயர், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் பச்சைபசேல் என காணப்படும் புற்கள் மீதும் உறை பனி படர்ந்து காணப்பட்டது.
குன்னூரில் வழக்கத்தை விட தற்போது கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ள தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
குன்னூரில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து உள்ளனர். இதனால் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
அதிகாலை நேரத்தில் தேயிலை பறிப்பதற்காக தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் நடு நடுங்க வைக்கும் உறைபனி காரணமாக ஹோட்டல் மற்றும் காட்டேஜ்களில் முடங்கிப் போய் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நீர்ப்பனி, உறைபனி என சீதோசன நிலை மாறி மாறி காணப்படுவதால் உள்ளூர் வாசிகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
- கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து, ஒரு கிராம் ரூ.77.50-க்கும் பார் வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,840-க்கும், ஒரு சவரன் ரூ.46,720-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து, ஒரு கிராம் ரூ.77.50-க்கும் பார் வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மழை காலங்கள் இல்லாத சமயங்களில் அந்த பகுதியில் உள்ள ஓடையின் ஓரமாக எளிதாக சென்று இறந்தவர்களின் சடலங்களை எரித்து வந்தனர்.
- மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மந்தை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மந்தை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லை என கூறப்படுகிறது.
இந்த மந்தை பகுதியில் ஓடை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓடை வழியாக சுமந்து சென்று அந்த பகுதியில் உள்ள காலி இடங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தும் எரித்தும் வருகிறார்கள்.
மழை காலங்கள் இல்லாத சமயங்களில் அந்த பகுதியில் உள்ள ஓடையின் ஓரமாக எளிதாக சென்று இறந்தவர்களின் சடலங்களை எரித்து வந்தனர்.
வரட்டுபள்ளம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மந்தை ஓடை வழியாக செல்கிறது. அதே போல் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் நேரங்கள் மற்றும் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்படும் போது மந்தை ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று வருகிறது.
அப்படி மந்தை ஓடையில் தண்ணீர் செல்லும் போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் ஓடை தண்ணீரில் இறங்கி இறந்தவரின் பிணத்தை சுமந்து கொண்டு சென்று உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் வரட்டு பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மந்தை ஓடையில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து இறந்தவரின் உடலை அப்பகுதி மக்கள் தண்ணீருக்குள் இறங்கி சிரமப்பட்டு சுமந்து சென்று அக்கறையில் எரியூட்டி விட்டு வந்தனர். இதே நிலை தான் நீண்ட காலமாக உள்ளது.
எனவே இந்த பகுதியை சேர்ந்தவர் இறந்தால் அடக்கம் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே இந்த பகுதிக்கு மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மந்தை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சமையலறையில் இருந்த நல்லெண்ணெயை ருசித்த குடித்துவிட்டு, அங்குள்ள பொருட்களை சூறையாடி சேதப்படுத்தியது.
- எங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலாவரும் கரடி தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்.
கோத்தகிரி:
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலைஅடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி அடுத்த ஜக்கலோடை கிராமத்துக்கு சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு கரடி வந்தது.
அங்குள்ள வீடுகளில் உணவு கிடைக்குமா? என தேடி அலைந்து திரிந்தது. அப்போது மாசிஅம்மாள் என்பவரின் வீட்டின் முன்பு நின்ற கரடி திடீரென கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது.
பின்னர் சமையலறையில் இருந்த நல்லெண்ணெயை ருசித்த குடித்துவிட்டு, அங்குள்ள பொருட்களை சூறையாடி சேதப்படுத்தியது.
பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த கரடி அதிகாலை நேரத்தில் மீண்டும் வந்த வழியாக காட்டுக்குள் புறப்பட்டு சென்றது.
அடுத்த நாள் காலையில் பொதுமக்கள் எழுந்து வந்து பார்த்தபோது மாசியம்மாள் வீட்டின் கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்த விவரம் தெரியவந்தது. சம்பவத்தன்று மாசிஅம்மாள் வீட்டில் இல்லாததால், அவருக்கு அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
எங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலாவரும் கரடி தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். இருப்பினும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 2011 தேசிய கணக்கெடுப்பின்படி, 4,429 யூதர்கள் இந்தியாவில் இருந்தனர்
- உடைமைகளை அருங்காட்சியகத்தில் வைக்க தொல்பொருள் துறைக்கு லெவி கோரிக்கை
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனி அதிபர் அடால்ஃப் ஹிட்லர், யூதர்களை வெறுத்ததனால், அவர்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்தார்.
ஹிட்லரின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க பல யூதர்கள் தங்கள் குடும்பங்களுடன் நாட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறி அவர்களுக்கு தஞ்சம் தர முன் வந்த பல்வேறு உலக நாடுகளில் குடி புகுந்தனர்.
உயிருக்கு பயந்து அவ்வாறு தப்பிய பல யூத குடும்பங்கள் சென்னை (அப்போதைய மெட்ராஸ்) உட்பட பல இந்திய நகரங்களில் குடி புகுந்தன.
2011 தேசிய கணக்கெடுப்பின்படி, 4,429 யூதர்கள் இந்தியாவில் இருந்தனர். அவர்களில் தமிழ்நாட்டில் 2 பேர் இருந்தனர்.
1921ல் மதராஸ் மாகாணம் (Madras Province) முழுவதும் 45 யூதர்கள் இருந்துள்ளனர்.
இந்நிலையில், மதராஸ் மாகாணத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முதல் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த குடும்பத்தை சேர்ந்த டேவிட் லெவி (David Levi) என்பவர் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
2020ல் இந்தியாவிலிருந்து வெளியேறிய டேவிட் லெவி, தனது குடும்ப உடைமைகளான புனித யூத நூல்கள், யூத மத பாத்திரங்கள், அப்போது இருந்த "சினகாக்" (synagogue) என அழைக்கப்படும் யூத வழிபாட்டு தலத்தின் பொருட்கள் உட்பட பலவற்றை அருங்காட்சியகத்தில் வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
"சென்னைதான் எனது முதல் வீடு. எங்கள் இனத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை வரும் சந்ததியினர் அறிய வேண்டும். எங்கள் தாயகம் தமிழகம்தான். என் முன்னோர்களின் பாரம்பரியம் என்னுடன் நிற்காமல் சரித்திரத்தில் பதிய வேண்டும். அதற்காக இதை செய்கிறேன்" என்றார் லெவி.
லெவியின் கோரிக்கை பரிசீலக்கப்படுகிறது என தொல்பொருள் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்தார்.
யூதர்கள் பெரும்பாலும் பவழம் மற்றும் வைர விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களது வர்த்தகத்தை குறிக்கும் வகையில் "பவழக்கார தெரு" (Coral Merchant Street) என உருவான தெரு, சென்னையில் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.
- உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
1857 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது.
கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடுதான் காரணம்.
தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்? கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.
உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Among the first three Universities of India established in 1857, the University of Madras is without a Vice Chancellor for the last 5 months
— P. Chidambaram (@PChidambaram_IN) January 27, 2024
The reason given is the Governor-government stand off
Why is the Governor of Tamil Nadu in the centre of many controversies in the State?…
- கைதான 2பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது திடீரென அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
- போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய சரவணன், பிரவீன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, அரிவாளால் வெட்டிய திருப்பூரை சேர்ந்த சரவணன் (வயது 23), ஈரோட்டை சேர்ந்த பிரவீன் ( 27) ஆகியோரை கைது செய்தனர்.
இந்தநிலையில் கைதான 2பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது திடீரென அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய சரவணன், பிரவீன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் 2 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
- அதிசய காளான் பாறைகள் வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் சிவநாதபுரத்தில் அதிசய காளான் பாறை கண்டறியப்பட்டுள்ளது.
இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோவில் வட்டம் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அதிசய காளான் பாறைகள் தற்போது வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.
- முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
- 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.
ஆறுமுகநேரி:
தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.
இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.
இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.
தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.
இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-
எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்.
பண்ருட்டி:
என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 3-வது நாளான நேற்று பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ் நிலையம் அருகில் நடைபயணத்தை முடித்தார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தில் சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். மதத்தை மையப்படுத்தி அரசியல் நடக்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா ஆட்சி நேர்மையான முறையில் நடக்கிறது. ஆகவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடியை 3-வது முறையாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வரவில்லை. சேமிப்பு கிடங்கு அமைக்கவில்லை. குளிர்பதன கிடங்கு அமைக்கவில்லை. மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க இல்லை.
இங்குள்ள எம்.பி. மீது கொலை வழக்கு உள்ளது. அவருக்கு எந்த தகுதியும் இல்லை. இங்குள்ள எம்.எல்.ஏ. தன்னை தி.மு.க. அமைச்சர்கள் மதிப்பதில்லை. கூட்டணி கட்சியை மதிக்கவில்லை என்கிறார். பிறகு எதற்கு தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். பண்ருட்டி தொகுதியில் உள்ள கோரிக்கையையே நிறைவேற்றவில்லை. பிறகு எப்படி 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்.
மறைந்த விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தவர் பிரதமர் நரேந்திரமோடி. ஆனால் தி.மு.க.வினர் அவருக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர்.
கடந்த 9 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை தமிழக வளர்ச்சிக்கு மத்தியஅரசு வழங்கி உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜனதா உங்கள் அன்பை பெற்று ஆட்சிக்கு வரும்போது, முதல் நாள் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
குடியரசு தினத்தையொட்டி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை படைவீட்டம்மன் கோவில் தெருவில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக அண்ணா மலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா கூட்டணி சீட்டு கட்டு போல், ஒவ்வொரு முறை குலுக்கிபோடும் போதும் ஜோக்கர் வெளியே வருவது போல, ஒவ்வொரு தலைவர்களாக வெளியேறி வருகிறார்கள். நிதிஷ்குமாரும் வெளியேறுகிறார். மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக மக்கள் மனநிலைக்கு எதிராக நடந்தால் இதுதான் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பயணத்தின் போது பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்கிறார்.
- 10 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
சென்னை:
சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று இரவு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு செல்கிறார். அங்கிருந்து ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்கிறார்.
10 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
- விசிக சார்பில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
- இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று மாலை மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் வெள்ளி விழா, திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என மும்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. ஒன்றியங்களில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுய ஆட்சி அரசையும் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்த கூடாது. அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இந்தியா கூட்டணி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது. இது தான் நம் இலக்கு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஜனநாயகம் இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அங்கு தேர்தல் கிடையாது, அரசியல் கட்சி தலைவர்களுக்கு வீட்டு சிறை. இது தான் பாஜக பாணி சர்வாதிகாரம்" எனக் கூறினார்






