என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
    • ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர், ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமை எழுச்சி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எம்ஜிஆர், ஜானகி இருவருக்கும் நூற்றாண்டு விழா எடுத்த பாக்கியம் எனக்கு கிடைத்தது.

    ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த திரைத்துறையினருக்கு நன்றி.

    எம்ஜிஆர், ஜெயலலிதா சந்தித்த பிரச்சினைகளை நாமும் சந்தித்து கொண்டிருக்கிறோம்.

    எம்ஜிஆருக்காக திரைத்துறை வாழ்க்கையை துறந்தவர் ஜானகி, பல்வேறு சோதனையான காலக்கட்டத்தில் எம்ஜிஆர் உடன் இருந்தவர்.

    அதிமுக எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்றது தான் வரலாறு.

    அதிமுக அழியும் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.
    • அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஜானகி அம்மை யாரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். இந்த படம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகி அம்மையாருடன் பயணித்த நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி, உள்ளிட்ட வர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன.

    அதன்படி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உரையாற்றினார். அப்போது, தான் அனைவருடன் இருப்பதாகவும், அனைவரையும் நலம் விசாரித்து சில நிமிடங்கள் பேசுவது போல் வீடியோ உருவவாக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். தற்போது பேசுவதை போல் உருவாக்கப்பட்ட வீடியோ நிறைவுற்றதும், அங்கிருந்த அ.தி.மு.க. கட்சியினர் வீடியோவை மீண்டும் போடச் சொல்லி ஒன்ஸ் மோர் கேட்டனர். இதனால் வீடியோ மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. 

    • கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவிலில் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன்ஒருபகுதியாக கடந்த ஜூன் மாதம் விமான கோபுரம், ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 65 அடி உயரம் உள்ள ராஜ கோபுரத்துக்கு ரூ.35 லட்சம் செலவிலும், மற்ற பகுதிகளுக்கு ரூ.25 லட்சம் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுகிறது.

    கடந்த 14-ந்தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இந்த நிலையில் கோவிலில் உள்ள ராஜ கோபுரம், மேற்கு, கிழக்கு கோபுரங்கள், கருவறை விமானங்கள், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கான கலசங்கள் ஆகியவை மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டு நா.மூ.சுங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தயார்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

    அந்த வகையில் ராஜகோபுரத்துக்கு 4 அடியில் 7 கலசங்கள், கருவறை விமானத்துக்கு 3 அடியில் 3 கலசங்கள், திசை கோபுரங்களுக்கு 3 அடியில் 10 கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில் 32 என மொத்தம் 52 கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளில் மதுரை ஸ்தபதி கார்த்திக் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மொத்தம் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் 12-ந்தேதி காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக மூலவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெய் வினியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழு அமைத்தது.
    • பால் பொருட்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதுடன் கூடுதலாக பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாகவும், அதில் விலங்குகள், மீன்களின் கொழுப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    லட்டு பிரசாதத்திற்கான நெய் திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் பால் நிறுவனமான ஏ.ஆர்.டெய்ரி சார்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெய் வினியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழு அமைத்தது. திருப்பதி தேவஸ்தானத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை திண்டுக்கல் தனியார் பால் நிறுவனம் மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குனரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

    மத்திய உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் 14 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். மேலும் நெய் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். பால் பொருட்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 3 கார்களில் 11 பேர் வந்து தொடங்கிய சோதனை இரவுவரை நீடித்தது. மேலும் நெய்களின் பகுப்பாய்வு மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

    அதன் பின்னர் இதுகுறித்து இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    • சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.
    • என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அ.ஜெகதீஷ் ஆகிய நான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

    இதுவரை என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமாக இருந்தாலும் சமீப கால செயல்பாடுகள் கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

    அதன் அடிப்படையில் கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். கொள்கை கோட்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தலைவர் வே பிரபாகரன் அவர்கள் நினைவில் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் நன்றி...

    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

    • போலீசார் வீரசெட்டி ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • நாட்டு துப்பாக்கி ஒன்றையும் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அருகே குந்துக்கோட்டை கிராமம் வீரசெட்டி ஏரி பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் மேற்பார்வையில் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், போலீசார் வெள்ளச்சாமி, முனியப்பன் ஆகியோர் கொண்ட போலீசார் வீரசெட்டி ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போலீசாரை கண்டு ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அவரை பிடித்து விசாரித்தில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். விசாரணையில் அவர் பெயர் வீரசெட்டி ஏரி பகுதியில் வசிக்கும் சின்னசாமி மகன் மாரியப்பன் (வயது55) என்பதும், விவசாய பயிர்களில் அவரை, துவரை செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்துள்ளது தெரியவந்தது. அப்போது பயிர்களுக்குள் மறைத்து வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒன்றையும் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து துப்பாக்கியையும் பயிர்களுக்கு இடையே வளர்த்திருந்த 30 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்தனர். மாரியப்பனை கைது செய்த போலீசார் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாட்டு துப்பாக்கி யாரிடம் வாங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30-ந் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டு 3 கிலோ 600 கிராம் எடையில் 60 சென்டிமீட்டர் நீளமும் இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அது கொரியப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அந்த ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். அது அந்தநல்லூர் பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காவிரி ஆற்றில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று மிதந்து வந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராக்கெட் லாஞ்சரை பத்திரமாக மீட்டு அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். பின்னர் ராக்கெட் லாஞ்சரை அறிவியல் நிபுணர்கள் உடன் இணைந்து மண்ணுக்குள் பாதுகாப்பாக புதைத்து வைத்தனர்.

    இதனையடுத்து, வெடி குண்டை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் உடன் இணைந்து இதனை வெடிக்கச் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி காவிரியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த குண்டினை ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அந்த குண்டு கொள்ளிடம் ஆற்றில் மணலுக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்க செய்யப்பட்டது. ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் தான் முக்கொம்பு சுற்றுலா மையம் அமைந்துள்ளது.

    முக்கொம்பு நடுக்கரை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகள் தமிழகத்தில் தங்கி பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

    அவகள் பயிற்சிக்கு பயன்படுத்திய ராணுவ தளவாடங்களை விட்டு சென்றிருக்கலாம் என்றும், அதில் மணல் அரிப்பு காரணமாக ராக்கெட் குண்டுகள் வெளியே வந்து கண்ணில் பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2004 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாறிய அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    26-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    27-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    28-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    30-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை 30 °-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30°- 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை
    • திரையுலகினரின் வாழ்த்து காணொலி திரையிடப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஜானகி அம்மை யாரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். இந்த படம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகி அம்மையாருடன் பயணித்த நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி, உள்ளிட்ட வர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


    அ.தி.மு.க. வரலாறு மற்றும் ஜானகி அம்மையாரின் வாழ்க்கை வரலாறுடன் இணைந்த குறும்படம் திரையிடப்பட்டது. இதன் பின்னர் சினிமா புகழ் அபிநயா நாட்டியக் குழுவினரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. இந்த நடனம் முடிந்ததும் நடிகர் தம்பி ராமையா மேடையில் பேசினார்.

    அதனை தொடர்ந்து நடந்த கவியரங்கில் , மக்கள் திலகத்தின் மனையரசி என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா பேசினார். மனங்களை கவர்ந்த மாதரசி, என்ற தலைப்பில் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா, மக்கள் தொண்டில் சிறந்த பேரரசி என்ற தலைப்பில் கவிஞர் ஆதிரா முல்லை ஆகியோரும் ஜானகி அம்மையாரின் பெருமைகளை பேசினார்கள். இதன் பிறகு லட்சுமன் ஸ்ருதி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது

    ஜானகி அம்மையார் கற்றுக்கொண்டது தாய்மைப் பாசமா? தலைமை பண்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், சினிமா புகழ் நாட்டுப்புற இணையர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் கிரா மிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து திரையுலகினரின் வாழ்த்து காணொலி திரையிடப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து செய்தியும் இடம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். பேசும் குறும்படம் திரையிடப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மாலை 5 மணி அளவில் அவர், தலைமை எழுச்சி உரையாற்றுகிறார். இறுதியாக முன்னாள் அமைச்சர் வளர்மதி நன்றி கூறுகிறார்.

    ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவையொட்டி மண்டபத்தை சுற்றியுள்ள பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. அ.தி.முக் கொடிகள் கட்டப்பட்டு வாழை தோரணங்களால் சாலையின் இரு புறமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    • பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.
    • மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் என வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கியதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பழனி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பழனியில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம், யானைப்பாதை, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இனிவரும் காலங்களிலும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    • மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான வெற்றி பெற்று உள்ளது.
    • தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தெரிவித்தது.

    மதுரை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் சார்பில் 24-வது மாநாடு மார்க்சிஸ்டு மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான வெற்றி பெற்று உள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வாறு நடந்தது என்று பல கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தெரிவித்தது. ஆனால், அதே பா.ஜ.க. தான், மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது போல், இலவசங்களை அறிவித்துள்ளது. மற்றவர்களுக்கு ஒரு நியாயம் பா.ஜ.க.விற்கு ஒரு நியாயம், பா.ஜ.க. தேர்தல் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும்.

    வரக்கூடிய பாராளுமன்ற கூட்டம் மோடி அரசாங்கம் மகாராஷ்டிரா வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மோசமான சட்டங்களை இயற்ற பா.ஜ.க. முற்படும். அரசியல் சாசனத்திற்கு சமாதி கட்டுகின்ற ஏற்பாடாக தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இருக்கும். இந்தத் திட்டத்தை எதற்கும் வகையில் நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். பேசி குடியுரிமை சட்ட திட்டத்தை அமலாக்குவது, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற மோசமான திட்டத்தை பா.ஜ.க. அமல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

    உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பொருள் விலை குறையும்போது பெட்ரோல் விலையை மோடி அரசு குறைக்க மறுக்கிறது. கடந்த ஒரு வருடமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல், ரஷியா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். சொந்த நாட்டில் மணிப்பூர் கலவர பூமியாக மாறி உள்ளது. அந்த மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்லாமல் இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இவர்களே கலவரத்தை தூண்டிவிட்டு அதை முடித்து வைக்க முடியாமல் அவஸ்தப்படுகிறார்கள்.

    உச்சநீதிமன்றத்தில் சென்று இலவசங்களை கொடுக்கக் கூடாது என பா.ஜ.க. வழக்கு போட்டார்கள். மகாராஷ்டிராவில் மாதந்தோறும் மகளிர்க்கு உரிமை தொகை கொடுக்க உள்ளோம் என்று தெரிவிக்கிறார்கள். பா.ஜ.க.விற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கையா? தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளன்று மத்திய அரசு தேர்வை அறிவிக்கிறார்கள். வேண்டுமென்றே பொங்கல் தினத்தில் தேர்வை அறிவித்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் விரோதமான அணுகு முறையாக நாங்கள் இதை பார்க்கிறோம்.

    எங்களைப் பொறுத்த வரை கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கைரீதியான திட்டத்தை உருவாக்கி அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிற கூட்டணி அமைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மதுரை அரிட்டாப்பட்டியில் கனிம வளங்களை கொள்ளை அடிக்க திட்டமிட்டிருக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×