search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

    கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • வாலிபர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஆதர்ஸ் நகரில் ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இந்த கோவில் ஊழியர்கள் கதவை திறந்த போது அங்கு காணிக்கை பெட்டியில் இருந்து பணம், நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் கோவிலுக்கு வரும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த நபர் காணிக்கை பெட்டி அருகே சென்று கடவுள் முன்பு கை நீட்டி வழிபட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் கோவிலில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த கோபேஷ் சர்மா என்பதும், இவர் கோவில்களை குறிவைத்து திருடும் பழக்கம் கொண்டவர் என்பதும் தெரியவந்தது. இரவு நேரங்களில் கோவில் கதவுகளை உடைத்து, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து நகை, பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்ட இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இவர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
    • நான்கு பெட்டிகள் தடம் புரண்டதில், உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை.

    குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சபர்மதி- ஆக்ரா விரைவு ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயில், நள்ளிரவு ஒரு மணி அளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென தடம் புரண்டது. ரெயில் இன்ஜின் உடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.

    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை. தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என வடமேற்கு ரெயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.

    டெல்லி நோக்கி செல்லும், டெல்லியில் இருந்து வரும் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்து. உத்தர பிரதேசம் நோக்கி செல்லும் பாதை சீரமைப்பு நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

    ரெயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஆறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது.

    • தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:-

    அரியானா மாநிலத்தில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ராஜஸ்தானில் கூட மக்களவை எம்.பி.யாக இருந்தவர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஆகவே, தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு, எங்களது தலைவர்களின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகள் மற்றும் கட்சி மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். இந்தியா கூட்டணிக்கு நல்ல சூழல் உருவாகி வருகிறது. முக்கியமான போட்டி, குறிப்பாக வட இந்தியாவில் காங்கிரஸ்க்கும் பா.ஜனதாவுக்கும் இடையில்தான்.

    இவ்வாவறு சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

    • உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
    • இந்த ஒத்திகை பயிற்சியை பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியும் நடத்தப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

    இந்த பயிற்சியில் கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், டேங்கர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

    துல்லியமான வழிகாட்டும் ஏவுகணை, தகவல் தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு அமைப்பு போன்ற புது தொழில்நுட்பங்களும் பரிசோதிக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்த ஒத்திகை பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ஆகியோரும் பார்வையிட்டனர். மேலும், 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.

    • விமானப் படைக்குச் சொந்தமான போர்விமானம் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.
    • விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜாஸ் இலகு ரக போர்விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.பி ராகுல் கஸ்வான் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
    • நேற்று, ஹரியானா மாநிலத்தில் பாஜக எம்.பி பிரிஜேந்திர சிங் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்.பி. ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    எம்.பி ராகுல் கஸ்வான் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    அதில், "மக்களவை உறுப்பினராக 10 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்

    நேற்று, ஹரியானா மாநிலத்தில் பாஜக எம்.பி பிரிஜேந்திர சிங் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
    • அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.

    ஜெய்ப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் இன்று யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினர். அவை பின்வருமாறு:

    பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்.

    அனைத்து இளைஞர்களுக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு பயிற்சி. MNREGA போன்றே இந்தப் பயிற்சியை ஒரு சட்டமாக்குவோம். இளைஞர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5,000 கோடியில் ஸ்டார்ட்அப் ஃபண்ட் உருவாக்கப்படும்

    கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நாடுமுழுவதும் சட்டம் இயற்றப்படும்

    தேர்வு தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க, காகிதக் கசிவுக்கு எதிராக காங்கிரஸ் சட்டம் கொண்டுவரும். அரசு போட்டித் தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும், அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது என தெரிவித்தார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடை பயணம் மேற்கொள்கிறார்.
    • இன்று முதல் 6-ந்தேதி வரை மத்திய பிரதேசத்தில் நடை பயணம் மேற்கொள்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் நடை பயணத்தை முடித்துள்ளார். அதேவேளையில் கடந்த ஐந்து நாட்கள் நடை பயணம் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த நிலையில் ஐந்து நாட்கள் ஓய்விற்குப் பிறகு இன்று ராகுல் காந்தி நடை பயணத்தை மீண்டும் தொடங்குகிறார் என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொது செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஐந்து நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி இன்று மதியம் 2 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவிற்குள் மதியம் 3 மணியளவில் நாங்கள் நுழைவோம். மத்திய பிரதேச மாநிலத்தில் மார்ச் 6-ந்தேதி வரை நடை பயணம் தொடரும்.

    மார்ச் 5-ந்தேதி பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். மார்ச் 7-ந்தேதி நடை பயணம் குஜராத் மாநிலத்திற்குள் நுழையும். நடை பயணத்தின்போது மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்" என்றார்.

    பா.ஜனதா ஆளும் அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ராகுல் காந்தி நடை பயணத்திற்கு இடையூறு அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது குற்றிப்பிடத்தக்கது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் பா.ஜனதா ஆளும் மாநிலங்களாகும்.

    • பெண் எதிர்ப்பு தெரிவித்ததும் மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை அணுகுவது மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது திருமணமான பெண் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த பெண்ணை ஆஸ்பத்திரியின் ஆண் செவிலியர் ஒருவர் அதிகாலை 3.30 மணியளவில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார். முதலில் ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததும் மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை அணுகுவது மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவமனையின் ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டார்.

    • தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    • "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்"

    "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை ஹேம்லதா பைர்வா மீதான இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

    கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவருமான டிகா ராம் ஜூலி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆசிரியை ஹேம்லதா பைர்வாவை தடுத்த கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அவரை இடைநீக்கம் செய்ததன் மூலம் பாஜக அரசு தலித் விரோத அரசு என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, கோட்டா மாவட்டத்தின் சங்கோட் பகுதியில் உள்ள அரசு மூத்த மேல்நிலைப் பள்ளி கஜூரியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் பணியில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
    • “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்”

    ராஜஸ்தானில் குடியரசு தினத்தின் போது மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க மறுத்து, "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

    கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில், லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 2 ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    ×