என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது

    ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பள்ளி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி முதல்வர் ஆசிரியரை பணிநீக்கம் செய்தார்.

    முன்னதாக, ஆசிரியர் தனது மொபைல் எண்ணை ஒரு மாணவியின் நோட்டில் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அவரைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது.

    குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் தங்களது விடுமுறை நாட்களை கொண்டாட ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர்.

    அவர்கள் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிற்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். தங்களுக்கு வேண்டிய உணவுகளை விரும்பியபடி ஆர்டர் செய்து இஷ்டம் போல சாப்பிட்டார்கள்.

    சாப்பிட்ட உணவிற்கான பில்லை பணியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ரூ.10 ஆயிரத்து 900-த்திற்கான பில்லை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பணம் செலுத்தாமல் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தனர்.

    கழிவறைக்கு செல்வதாக கூறி ஒருவர் பின் ஒருவராக ஓட்டலிலிருந்து வெளியேறி காரில் தப்பி சென்றனர். அவர்கள் அங்கிருந்து செல்வதை கண்ட ஓட்டல் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அவர்கள் காரில் தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது. அப்போது போலீசார் காரை சுற்றி வளைத்து அவர்கள் 5 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை வசூல் செய்தனர். அவர்களை கைது செய்து இதேபோல் வேறு எங்காவது மோசடி செய்தனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 3,028 குதிரைகள், 1,306 ஒட்டகம் உள்பட 4,300 கால்நடைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை கண்காட்சிக்கு வந்துள்ளது.

    ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.

    இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.

    கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 3,028 குதிரைகள், 1,306 ஒட்டகம் உள்பட 4,300 கால்நடைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று தொடங்கும் நிலையில் முன்கூட்டியே நாடு முழுவதும் இருந்து பலர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வந்துள்ளனர். இதனை பார்க்க கூட்டம் கூடி வருகிறது.

    இதில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்துள்ளது. 'அன்மோல்' என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் உள்ளது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த மாட்டின் விலையை கேட்டால் அசந்து போவீர்கள். ஆமாம் ரூ.23 கோடி.

    இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், 'இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இதற்கு ஒரு நாள் தீவனத்துக்கே ரூ.1,500 செலவாகிறது' என்று பெருமையாக தெரிவித்தார்.

    இதேபோல் ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரையும் கண்காட்சிக்கு வந்துள்ளது. உஜ்ஜைன் பகுதியில் இருந்து 600 கிலோ எடை கொண்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள எருமை மாடும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டுமல்ல உயரம் குறைந்த பசு மாடும் இந்த கண்காட்சிக்கு வந்துள்ளது.

    • ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
    • பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணித்தனர். பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து பஸ்சின் மீது விழுந்தது.

    இதில் பஸ் முழுவதும் தீப்பற்றியது. தீ மளமளவென பரவிய நிலையில் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். ஆனாலும் தீ மளமளவென பரவியதில் 2 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே, கடந்த 17ஆம் ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபோல் தொடர்ந்து பேருந்துகள் விபத்தில் சிக்குவது கவலை அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளர்.

    • உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்துள்ளது.
    • உயர் மின்னழுத்த வயரில் உரசி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர்- டெல்லி நெடுஞ்சாலையில் மனோகர்புரா-ஷாபூர் அருகே உயர்அழுத்த மின்கம்பியில் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து உரசி தீப்பிடித்ததில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ஷாபூர்-மனோகர்புரில் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள செங்கல் சூளைகளில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களை உத்தர பிரதேச மாநலம் பிலிபிட்டில் இருந்து படுக்கை வசதி கொண்டு பேருந்து ஏற்றிக்கொண்டு வந்தது. மனோகர்பூரில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் உயர்மின்அழுத்தம் கொண்ட வயரில் உரசி பேருந்து தீப்பிடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தீப்பிடித்ததால் தொழிலாளர்கள் கிடையே அச்சம் ஏற்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் ஜன்னலை உடைத்து வெளியேறினர். மற்றவர்கள் தீயில் கருகி காயம் அடைந்தனர். சிலர் மின்வயரால் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர்.

    காயம அடைந்தவர்களில் 4 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி எஸ்எம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.

    50 முதல் 60 தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது குடும்பம் மற்றும் லக்கேஜ் உடன் பேருந்தில் வந்துள்ளனர். சிலர் சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் பஜன் லார் சர்மா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த 17ஆம் ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.

    • இனிப்புக் கடையில் விலை உயர்ந்த இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளிக்கு புதிய ஆடை அணிவதும், இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

    தீபாவளி தினத்தன்று பயன்படுத்தவும், உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் இனிப்பு வகைகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் இனிப்பு வகைகள் செய்வது எப்படி என்பது அறிந்து இல்லங்களிலும் பெண்கள் இனிப்புகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் தங்க சாம்பல் அல்லது 'ஸ்வர்ண பாஸ்மா' என்று அழைக்கப்படும் 24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் நிரப்பப்பட்ட 'ஸ்வர்ண பிரசாதம்' என்ற இனிப்பு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'ஸ்வர்ண பிரசாதம்' இனிப்பு ஒரு கிலோ ரூ.1,11,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்த இனிப்புக் கடையில் விலை உயர்ந்த இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
    • 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.

    சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்து குறித்துக் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் விரைந்தார்.

    பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியுள்ளார்.
    • கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார்

    பாகிஸ்தானின் ISI அமைப்புக்கு உளவு பார்த்ததாக மங்கத் சிங் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது.

    மங்கத் சிங்கிடம் மேற்கொண்ட விசாரணையில், இஷா ஷர்மா என்ற போலி பெயர் கொண்ட பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னும், பின்னும் அல்வார் கண்டோன்மென்ட் பகுதியை மங்கத் சிங் உளவு பார்த்தது உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதங்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.
    • இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியாகினர்.

    ராஜஸ்தானில் இன்று இரவு எல்.பி.ஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் மற்றொரு லாரி மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

    டுடு பகுதியில் ஜெய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த உடனே சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.

    தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.

    சம்பவம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைரவா, லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி நடைபெறுவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

    இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    ஆஸ்பத்திரி முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பதறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் மூச்சு திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்த தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமானது.

    தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

    தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார மந்திரி ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை மந்திரி ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் ஓடிவிட்டதாக அவர்களிடம் குற்றம் சாட்டினர்.

    தீவிபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, அறையில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

    தீ விபத்து ஏற்பட்ட போது, அவர்கள் தான் முதலில் வெளியில் ஓடி வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் நிலை குறித்து யாரும் எங்களிடம் எதுவும் கூற வில்லை.

    தீ வேகமாக பரவியது. ஆனால் அதை அணைக்க எந்த உபகரணமும் இல்லை, தீயை அணைக்கும் கருவிகளும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை, தண்ணீர் வசதிகூட அங்கு இல்லை என்று கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையிலான குழு விசாரணை நடத்த முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    தீ விபத்துக்கான காரணங்கள், தீ விபத்துக்கான மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெய்ப்பூர் RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு பா.ஜ.க. பெண் தொண்டர் நோயாளிக்குக் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டைப் புகைப்படம் எடுத்தவுடன் உடனடியாகத் திரும்பப் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உதவி செய்வது போல நடித்த பெண் பாஜக தொண்டரின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்.
    • கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்

    இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.

    இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.

    பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து திவேதி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. 

    ×