

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது மின்சார ஆட்டோவின் மைலேஜ் மற்றும் பேட்டரி பிரச்சினையால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர் ஷோரூம் வாசலிலேயே அதற்கு தீ வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மோகன் என்ற அந்த முன்சார ஆட்டோ ஓட்டுநர், தனது வாகனத்தின் பேட்டரி, மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பலமுறை அலைந்தும் தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த அவர் கடந்த திங்கள்கிழமை, ஜோத்ப்பூரில் உள்ள ஷோரூம் முன் தனது வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அங்கிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
राजस्थान के जोधपुर में बजाज शोरूम के बाहर अपने ई-रिक्शा पर पेट्रोल डालकर आग लगा दी ई-रिक्शव ड्राइवर मोहन अपनी गाड़ी की बैटरी की प्रॉब्लम सोल्व ना होने से परेशान था मोहन ने हाल ही में रिक्शा नया खरीदा था लेकिन बैटरी से परेशान था,कंपनी से कोई हल नहीं हुआ pic.twitter.com/UaSofYqTYc