என் மலர்
மகாராஷ்டிரா
- 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார் பாபா சித்திக்.
- கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக்.
40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இவர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பையில் பாபா சித்திக் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.
- வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சி செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையம் [Artillery Centre] செயல்பட்டு வருகிறது. இங்கு ஐதராபாத்திலிருந்து அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத குண்டு வெடித்துள்ளது. இதில் கோஹில் விஸ்வராஜ் சிங் [20 வயது], சைபத் சித் [21 வயது] என்ற இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

உடனே அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
- விமானம் தரையிறங்கியதும் நீர் பீய்ச்சு அடித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
- விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வணிக ரீதியாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:
நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 1,160 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ரூ,16,700 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய திட்டம் வருகிறது. இதில் இரண்டு ஓடுபாதைகள் ஒன்றுடன் ஒன்று 1.55 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில், விமான நிலையத்தில் நிலையத்தில் ஏர்பஸ் சி 295 விமானத்தை டச் டவுன் செய்து விமானம் சோதனை முறையில் தரையிறக்கும் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் போக்குவரத்து கேரியர் C295 விமான நிலையத்தின் தெற்கு ஓடுபாதை 26 இல் விமானம் தரையிறங்கியது என்று விமான நிலைய ஆபரேட்டர் தெரிவித்தார்.
விமானம் தரையிறங்கியதும் நீர் பீய்ச்சு அடித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்டு வரும் இந்த விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வணிக ரீதியாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரத்தன் டாடா இறந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது.
- தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழில் அதிபருமானவர் ரத்தன் டாடா உடல் நலக்குறைப்பாடு காரணமாக நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இசை நிகழ்ச்சி நடுவே ரத்தன் டாடாவின் மறைவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பையில் உள்ள நெஸ்கோ திறந்தவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி இரவு நடத்தப்பட்டது. குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இசை நிகழ்ச்சியை கண்டுகளித்து கொண்டிருந்தனர். அப்போது ரத்தன் டாடா இறந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது.
டாடாவின் மறைவை அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்து இசை நிகழ்வை பாதியிலேயே நிறுத்தினர். பின்னர் அவருடைய படத்தை திரையிட்டு டாடாவின் மரண செய்தியை அறிவித்தபோது பொதுமக்களும் தங்கள் கொண்டாட்டாங்களை உடனடியாக நிறுத்தியபடி மவுனமாக இருந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டும் இறுதி மரியாதை செலுத்தினர். தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
- டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
- ரத்தன் டாடா உடல் இன்று காலை முதல் பொது மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது. இந்தநிலையில் நள்ளிரவு அவர் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். நேற்றிரவு உயிரிழந்த ரத்தன் டாடா உடல் இன்று காலை முதல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
- தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
- ரத்தன் டாடா உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினர்.
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று மாலை மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
ரத்தன் டாடா உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா'அவரது முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
- ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும்.
- மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ள ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொழிலதிபரும், கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்ர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது 'பாரத ரத்னா' என்பது குறிப்பிடத்தக்கது.
- லண்டனில் நடைபெற இருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இருந்தார்.
- கடைசி நேரத்தில் லண்டன் பயணத்தை ரத்து செய்யததால், ரத்தன் டாடாவிற்கு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவர் சிறந்த தொழில் அதிபராக இருந்தது மட்டுமல்லாமல் சிறந்த மனிதாபிமானமிக்கவராக திகழ்ந்தார். அனுதாபம், கருணை உள்ளம் கொண்டனர்.
செல்லப் பிராணிகள் மீது கனிவு காட்டக்கூடியவர். தெருநாய்களை பாதுகாக்க இளைஞர் கொண்ட முயற்சியை பாராட்டும் வகையில், சாந்தனு நாயுடு என்ற அந்த இளைஞரை தனது உதவியாளராக வைத்துக் கொண்டவர்.
ரத்தன் டாடா உடனான தங்களுடைய சந்திப்புகள் குறித்து தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழில் அதிபர் நிரஞ்சன் ஹிரானந்தானி, செல்லப் பிராணிக்காக ரத்தன் டாடா தனது லண்டன் பயணத்தை ரத்து செய்தார் என நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நிரஞ்சன் ஹிரானந்தானி கூறியதாவது:-
ரத்தன் டாடா அவர்கள் விருது ஒன்றை பெறுவதற்காக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. அது என்ன விருது என்பதை என்னால் நினைவு கொள்ள முடியவிலலை. ஆனால், கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார்.
தன்னுடைய பயணத்தை ரத்து செய்ததால் ரத்தன் டாடாவிற்கு என்ன ஆனது. உடல்நிலை சரியில்லையா?... அவருக்கு என்ன நிகழ்ந்தது எனக் கேட்க ஆரம்பித்தனர். கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ய காரணம் என்ன? என கேள்வி எழும்பியது. பின்னர்தான் அவரது செல்லப்பிராணியான நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தெரியவந்தது.
நாய் மீது அக்கறை எடுத்துக் கொண்டு தனது லண்டன் பயணத்தை ரத்து செய்தார். அவரது அருகில் நாயை படுக்க வைத்து பார்த்துக் கொண்டார். செல்லப் பிராணிகள் மீதான் அன்பு மற்றும் எளிமையானவர் என்பது இது ஒரு எடுத்துக்காட்டு. எல்லோரும் கற்றுக் கொள்ள இது ஒரு பாடம். இந்த நினைவுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.
இவ்வாறு நிரஞ்சன் தெரிவித்தார்.
- சாந்தனு நாயுடு ரத்தன் டாடா அலுவலகத்தின் பொது மேலாளர் ஆவார்.
- விலங்குகள் மீதான் அன்பின் மூலம் ரத்தன் டாடாவை 2014-ல் சந்தித்தார் சாந்தனு நாயுடு.
டாடா குழுமத்தின் மரியாதைக்குரிய தலைவரான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முகேஷ் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ரத்தன் டாடாவின் உதவியாளரான ஷாந்தனு நாயுடு தனது இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் "இந்த நட்பு இப்போது என்னுடன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, என் வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சிப்பேன். துக்கம் என்பது அன்புக்குக் கொடுக்க வேண்டிய விலை. குட்பை, மைடியர் கலங்கரை விளக்கம்" என 30 வயதாக ரத்தன் டாடாவின் அலுவலக பொது மேலாளர் சாந்தனு நாயுடு இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருடன் இணைந்து எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.
ரத்தன் டாடா உடனான சாந்தனு நாயுடுவின் சாத்தியமில்லாத நட்பு விலங்குகள் மீதான அவர்களின் அன்பின் மூலம் மலர்ந்தது.
இருவரும் 2014-ல் சந்தித்தனர். நாயுடு இரவில் தெரு நாய்கள் கார்களால் தாக்கப்படாமல் பாதுகாக்க ரிஃப்ளெக்டிவ் காலர்களை உருவாக்கினார். அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்ட டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா சாந்தனு நாயுடுவை தன்னிடம் பணியாற்ற அழைத்தார்.
- பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
- ரத்தன் டாடா சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது.
இந்தநிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.
பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். 2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
- ரத்தன் டாடா சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார்.
- ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது.
இந்தநிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.
பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். 2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அரசின் சார்பில் ரத்தன் டாடா இறுதிச் சடங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ரத்தன் டாடா உடலுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- அவரது உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மும்பை:
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
ரத்தன் டாடாவின் உடலுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். அவரது உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஓர் அரிய ரத்தினத்தை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ரத்தன் டாடா எப்போதும் முன்மாதிரியாக இருப்பார். ரத்தன் டாடா கடந்த 1991-ல், டாடா குழுமத்தின் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமம் கணிசமாக விரிவடைந்தது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். எப்போதும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவரது முடிவுகளும், துணிச்சலான அணுகுமுறையும், சமூக அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும் என பதிவிட்டுள்ளார்.






